இந்த முறை சென்னை வந்த போது எழுத்தாளர் தமயந்தியின் வீட்டில் தங்கினேன். என்னையும் பல்லவியும் வசதியாக மகிழ்ச்சியாக வைக்க அவர் எடுத்துக் கொண்ட அக்கறை நெகிழ செய்தது. இரவு திடீரென என் இன்சுலின் காலியாகி விட்டதை கவனித்தேன். இரவு கட்டாயமாக எடுத்துக் கொள்ள வேண்டிய மருந்து. இரவு பதினொன்று கடந்து விட்டது. தமயந்தி தயங்காமல் போய் மருந்தை வாங்கிக் கொண்டு வந்தார். எந்த எதிர்பார்ப்பும் இல்லாத பிரியம் அவருடையது. அதை விட அபாரம் அவருடைய சமையல். ஆச்சரியமாக வெள்ளி இரவு அவர் சமைத்திருந்த மீன் குழம்பு அப்படியே என் அம்மா செய்ததைப் போல இருந்தது - அம்மா தேங்காயை வறுத்து மிளகு சேர்த்து குழம்பு வைப்பார்; ஆனால் தமயந்தி தேங்காயை வறுக்காமலே மிளகு மட்டும் சேர்த்து அசல் குமரி மாவட்ட மணம்,குண, சுவையுடன் செய்திருந்தார். அதே போல அடுத்த நாள் அவர் செய்த சாம்பாரிலும் அம்மாவின் கைமணம். ஞாயிறன்று மதிய உணவுக்கு அவர் செய்து தந்த மட்டம் சுக்காவும் தயிர் சாதமும் இருக்கிறதே அதை சாப்பிட கோடி ஜென்மம் எடுக்கலாம்.
தமயந்திக்கு என் அன்பும் நன்றியும்!
கருத்துகள்