முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ராகுல் காந்தி குறித்த ராமசந்திர குஹாவின் கேலிகள்



கேரளாவில் லிட் பெஸ்டிவலில் ராமசந்திர குஹா ராகுல் காந்தி பற்றி சொல்லி உள்ள கருத்துக்கள் பித்துக்குளித்தனமானவை - நடுநிலையாகப் பேச வேண்டும் என முடிவு பண்ணிக் கொண்டு அவர் அறத்தில் இருந்து பிறழ்ந்து பேசி இருக்கிறார்; ராகுலை தேர்தலில் ஜெயிக்க வைத்து நீங்கள் பெரிய தப்பு பண்ணி விட்டீர்கள் என அவர் கேரளத்து மக்களிடம் சொல்லி இருக்கிறார். ராகுல் அறிவுத்திறன் குறைந்தவர், சோம்பேறி, சதா வெளிநாட்டுப் பயணங்களில் இருக்கிறவர் என சாடி இருக்கிறார்
 காங்கிரஸ் கட்சியின் குடும்ப அரசியல் கண்டனத்துக்கு உரியது என குஹா நினைக்கலாம்; ஆனால் அதை விட பாசிசத்தின் பேயாட்டம் நம்மை அழிவை நோக்கி இட்டுச் செல்கிறது என்பதே பெரிய பிரச்சனை. குஹா இப்போது பின்னதற்கு முன்னதை பொறுப்பாக்குகிறார்; குடும்ப அரசியல் எனும் அவலமே நம்மை மோடி எனும் பாசிசஸ்டை நோக்கி இட்டுச் சென்றது என்கிறார்.


 உண்மை அது அல்ல - பாசிச கூறுகள் நமது அரசியல் கடந்த மூன்று பத்தாண்டுகளாகவே இருந்து வந்துள்ளன. இன்று நாம் காணும் இந்துத்துவ பாசிசத்துக்கும் நவதாராளவாத பொருளாதாரத்தின் பெரும் எழுச்சிக்கும் ஒரு கன்ணுக்குப் புலனாகாத தொடர்பு உள்ளது. மக்கள் பெரும் திரளாக நகரங்களை நோக்கி படையெடுக்கும் ஒரு பொருளாதார சூழல் ரெண்டாயிரத்துக்குப் பின்பு ஏற்பட நகரங்களை மையமிட்டு ஒற்றை அடையாள அரசியலை முன்னெடுக்கும் இந்துத்துவம் எழுச்சி பெறுவது ஒரு ஆச்சரியம் அல்ல (ஆஷிஸ் நந்தி இதைப் பற்றி கூறியுள்ளதை நாம் கவனிக்க வேண்டும்). கிராமங்களில் யாருக்காவது கடும் மனச்சோர்வு ஏற்பட்டு விபரீதமாக நடந்து கொண்டால் அவரை பேயடித்து விட்டது என முன்பு சொல்லுவார்கள். அப்படியான ஒரு கற்பனைப் பேயைத் தான் குஹா இப்போது ராகுல் காந்தியின் வடிவில் உருவாக்குகிறார்
இது அவர் நேற்று ஏதோ புதிதாக சொன்ன விசயம் அல்ல; அண்மைக் காலமாக அவர் பத்திரிகைகளிலும் இந்த கோணத்திலே காங்கிரஸை தாக்கி வருகிறார்; குஹா இந்த விமர்சனத்தை சமப்படுத்த காந்திய காங்கிரஸ் யுகத்தின் ஒரு லட்சிய நிலையைப் பற்றி பேச விரும்புவார். நேருவுக்கு இன்று அதிகம் பழி வருவதற்குக் காரணமே அவரது குடும்பத்தினர் வம்சாவளியாக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி வைத்திருப்பது தான் என அவர் சொல்லுவது இதற்கு ஒரு சான்று. இந்த வாதமே அபத்தமானது. ஏனென்றால் நேரு பழிக்கப்படுவது பொதுமக்களால் அல்ல, வலதுசாரி சங்கிகளால். அவர்கள் நேருவின் உயிருடன் இருந்த போது கூட அவரை வசைபாடித் தான் கொண்டிருந்தார்கள். அவர்கள் காந்தியும் கொல்லப்பட வேண்டியவர் என்றும் தான் கூறினார்கள். அதை நீங்கள் எந்த குடும்ப அரசியலை வைத்து நியாயப்படுத்துவீர்கள் குஹா என கேட்கத் தோன்றுகிறது. காந்தியும் நேருவும் இந்துத்துவ அரசியலின் எதிரிகள் என்பதே அவர்கள் தொடர்ந்து கரித்துக் கொட்டப்படுவதன் காரணமே அன்றி சோனியா காந்தியோ ராகுல் காந்தியோ அல்ல என்பது ஏன் குஹாவுக்குப் புரியவில்லை?
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்களை காங்கிரஸ் நேரடியாக களத்தில் நின்று வழிநடத்தாதது நல்லதே என இப்போது படுகிறது; அது மக்களின் தன்னிச்சையான எழுச்சியாக அமைந்ததனால் தானே பாஜகவால் அதை எதிர்க்கட்சிகளின் சதி என சுலபத்தில் கடந்து போக முடியாமல் போனது. ஜெ.என்.யூவில் மாணவர்கள் தாக்கப்பட்ட போதும் ராகுலோ சோனியாவோ நேரடியாக களத்தில் இறங்கிப் போராடவில்லை - இது தவறு என அந்த சந்தர்பத்தில் எனக்குத் தோன்றியது என்றாலும் காங்கிரஸ் அப்படி செய்திருந்தால் அதை பாஜக எதிர்க்கட்சியின் தேசவிரோதப் போக்கு என திசை திருப்பி இருப்பார்கள் என்பது எதார்த்தம். (மற்றொரு பக்கம் காங்கிரஸ் தலைவர்கள் பாராளுமன்றத்திலும் வெளியிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக பரவலாக பேசியும் எழுதியும் வருகிறார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும்.)  


பெங்களூரில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் நடந்த போது குஹா அதில் கலந்து கொண்டு பெற்ற நன்மதிப்பை இப்போது இழந்து விட்டார்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...