பொதுவாக மாநில தேர்தல்களில் வாக்காளர்கள் தேசப்பிரச்சனைகள், லட்சியவாத நிலைபாடுகளை பொருட்டாகக் கொள்வதில்லை. அம்மாநிலத்தின் அப்போதையும் நிலையும் செண்டிமெண்டுமே வாக்காளர்களை செலுத்தும். தில்லி தேர்தலில் பாஜக தோற்றால் அது அரசுக்கு பின்னடைவாகவே இருக்கும், ஆனால் அதற்காக அவர்களின் அரசியல் மூர்க்கம், கண்மூடித்தனமான வேகம் குறையும் என நான் நம்பவில்லை.
இது மோடியின் அரசு. என்ன கெட்ட பெயர் வந்தாலும் அவருக்கே. ஆனால் ஆட்சியை பின்னிருந்து நடத்துவதோ அமித் ஷா. ஆக மோடிக்கு பெயர் கெட்டுப் போனாலும் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் அது தன்னை பெருமளவில் பாதிக்காது என ஷா நினைக்கலாம். அப்படியே பாதித்தாலும் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு சற்று முன் பாகிஸ்தான் ஆதரவுடன் மற்றொரு கார்கிலையோ தீவிரவாத தாக்குதலையோ நடத்தி நாட்டின் மொத்த கவனத்தையும் தன் பால் சாதகமாகத் திருப்பி தேசிய வெறியை, பாதுகாப்பு குறித்த பதற்றத்தை அதிகப்படுத்தி, ஹீரோயிசத்தை நிலைநாட்டி, என்.பி.ஆர், ராணுவ அடக்குமுறையின் நியாயத்தைக் காட்டி தேர்தலை ஷா வெல்ல நினைப்பார்.
தில்லி மாநிலத் தேர்தல் அல்ல, ஒட்டுமொத்தமாக இந்நாட்டு மக்களின் விழிப்புணர்வு மட்டுமே நம்மை இனிக் காப்பாற்றும். அதற்கு எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் கைகோர்க்க வேண்டும். அதுவரை எதுவும் இந்த ஜுராசிக் பார்க்கை தடுக்க முடியாது.
கேஜ்ரிவால் கூட. அவர் ஜெ.என்.யுவில் மாணவர்கள் தாக்கப்பட்ட போது கோழைத்தனமாக நடந்து கொண்டார். அவரை எனக்கு ஒரு முதல்வராகப் பிடிக்கும். ஆனால் பாஜகவை முழுமூச்சாக எதிர்க்கும் துணிவை அவர் அண்மையில் காட்டவில்லை என்பதால் இந்த தேர்தலில் அவரால் மைய அரசுக்கு எதிரான கோபத்தை அறுவடை பண்ண முடியுமா எனவும் தெரியவில்லை. நம் எதிர்க்கட்சிகளின் அரசியல் இப்படி மூட்டமாக தெளிவற்று இருப்பது வருத்தத்துக்கு உரியது.
Comments
தெரிந்ததில் இருந்து தெரியாததை நோக்கி - 01
https://newsigaram.blogspot.com/2020/02/any-do-reminder-in-whatsapp.html