Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

கார்த்திக் டயல் செய்த எண்


கார்த்திக் டயல் செய்த எண்குறும்படம் எனக்குப் பிடிக்கவில்லை - “விண்ணைத்தாண்டி வருவாயாபடத்தில் இருந்து மாறுபட்டு எதுவும் இதிலில்லை. ஒளிப்பதிவு, இசை என ரொம்ப சாதாரணமாக, அமெச்சூராக இருக்கிறது. ஆனால் ஜெஸ்ஸியின் பாத்திரம் வழக்கமான சிக்கல்களும் தன்னை மறைத்து வேறொன்றாய் முன்வைக்கிற தளுக்கும் கொண்டதாக இருக்கிறது; தனக்காக துன்பப்படும் கார்த்திக் மீதான அவளது பிரியமும் பயமும் இப்போதும் இருக்கிறது என இப்படம் சொல்கிறது.

 ஜெஸ்ஸியின் காதல் ஒருவித சுயவதை என நினைப்பேன், இந்த குறும்படம் அதை உறுதிப்படுத்தியிருக்கிறது. கார்த்திக் ஆண்மையுடன் திமிறும்போது அவனை மேலும் சீண்டிப்பார்க்கிற, அவன் பிடிவாதம் கொள்ளும் போது, துணிச்சலுடன் நடக்கும் போது (alpha male) அவனுக்கு உடன்படுகிற ஜெஸ்ஸி அவன் சற்றே பின்வாங்கும் போது, தயங்கி யோசிக்கும் போது (beta male) அவனிடமிருந்து பிரிந்து விடுகிறாள், பின்னர் அவனுக்காக ஏங்கவும் தன்னையே வதைக்கவும் செய்கிறாள் என்பதேவிண்ணைத்தாண்டி வருவாயாபடத்தில் நான் அவதானித்த உளவியல். (அப்படம் பற்றி நான் எழுதிய போதெல்லாம் இதையே தான் சொல்லியிருக்கிறேன்.) இப்படத்தில் கார்த்திக் முழுக்க முழுக்க beta maleஆக இருக்கிறான். தன்னிரகத்துடன், தயக்கத்துடன் வாழ்க்கை குறித்த நிறைய குழப்பங்களுடன். நியாயமாக ஜெஸ்ஸி அவனை இப்போது ஒரு குழந்தையையைப் போன்றே நடத்துகிறாள். அவன் லவ் யூ சொல்லுஎனும் போது அது ஒரு குழந்தை முத்தம் கேட்பது போல அவளுக்குத் தோன்றுகிறது. “ லவ் யூ சொன்னா கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிச்சுருவாங்களா?” என அவனை கலாய்க்கிறாள். அவன் வேறொரு மனநிலையில் கெத்தாகப் பேசியிருந்தால் அவள் அவனை நடத்தும் விதமே வேறு
 கார்த்திக்கின் இந்த அவதாரம் 96 படத்தின் ராமை நினைவுபடுத்துகிறது என்பது ஒருதுயரம்’ (ராமை எனக்குப் பிடிக்காது. அவன் ரொம்ப மட்டமான beta male.). கௌதம் மேனன் கார்த்திக் பாத்திரத்தை இன்னும் சற்று சிக்கலானதாக, எதிர்பாராமை கொண்டதாக, உரையாடலினூடே சிறு திருப்பங்கள் (அவன் ஆல்பாவில் இருந்து பீட்டாவுக்கும், இதிலிருந்து அதற்குமாக உருமாறுகிற தன்மையில்) அமைத்து உருவாக்கி இருக்கலாம். இப்படம் சூடு பிடித்திருக்கும். ஆனால் இப்போதைக்கு கார்த்திக்கை பார்த்து ஜெஸ்ஸி மட்டுமல்ல நாமும் தான்போய் உன் வேலையைப் பாருஎன சொல்லும்படி இருக்கிறது.
மனுஷ்ய புத்திரன்கார்த்திக் டயல் செய்த எண்படத்தை பகடி செய்த எழுதிய கவிதை இதை விட நன்றாக, சமகாலத்தன்மையுடன் உள்ளது - அதில் வரும் கார்த்திக் வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்த, காதல் வெறும் விளையாட்டு எனும் சமயோஜித புத்தி கொண்ட பின்நவீன காதலனாக இருக்கிறான். அவனுக்கு காதலி இருக்கிறாள். கார்த்திக்கிடம் முன்பு ஜெஸ்ஸி நடந்து கொண்டதைப் போன்றே அவள் இப்போது கார்த்திக்கை நடத்துகிறாள். அவளை சமாளிப்பதே பெரும்பாடாக இருக்கிறது. ஆனால் அவளே எதார்த்தம் என்பதால் தன்னை போனில் அழைத்து ஆறுதலுக்காக, பழைய காதல் நினைவில் குளிர்காய அழைக்கிற ஜெஸ்ஸியை அவன் புரிந்து கொண்டு இறுதியில் அவளை பிளாக் செய்தும் விடுகிறான்
அந்த கார்த்திக்கும் இந்த கார்த்திக்கும் வேறுவேறுதான் - அவன் இவனாக முடியாது. அவன் அவன் 90களின் குழந்தை. எனக்கு இவனைப் பிடிக்கவில்லை.     

Comments

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...