Skip to main content

கார்த்திக் டயல் செய்த எண்


கார்த்திக் டயல் செய்த எண்குறும்படம் எனக்குப் பிடிக்கவில்லை - “விண்ணைத்தாண்டி வருவாயாபடத்தில் இருந்து மாறுபட்டு எதுவும் இதிலில்லை. ஒளிப்பதிவு, இசை என ரொம்ப சாதாரணமாக, அமெச்சூராக இருக்கிறது. ஆனால் ஜெஸ்ஸியின் பாத்திரம் வழக்கமான சிக்கல்களும் தன்னை மறைத்து வேறொன்றாய் முன்வைக்கிற தளுக்கும் கொண்டதாக இருக்கிறது; தனக்காக துன்பப்படும் கார்த்திக் மீதான அவளது பிரியமும் பயமும் இப்போதும் இருக்கிறது என இப்படம் சொல்கிறது.

 ஜெஸ்ஸியின் காதல் ஒருவித சுயவதை என நினைப்பேன், இந்த குறும்படம் அதை உறுதிப்படுத்தியிருக்கிறது. கார்த்திக் ஆண்மையுடன் திமிறும்போது அவனை மேலும் சீண்டிப்பார்க்கிற, அவன் பிடிவாதம் கொள்ளும் போது, துணிச்சலுடன் நடக்கும் போது (alpha male) அவனுக்கு உடன்படுகிற ஜெஸ்ஸி அவன் சற்றே பின்வாங்கும் போது, தயங்கி யோசிக்கும் போது (beta male) அவனிடமிருந்து பிரிந்து விடுகிறாள், பின்னர் அவனுக்காக ஏங்கவும் தன்னையே வதைக்கவும் செய்கிறாள் என்பதேவிண்ணைத்தாண்டி வருவாயாபடத்தில் நான் அவதானித்த உளவியல். (அப்படம் பற்றி நான் எழுதிய போதெல்லாம் இதையே தான் சொல்லியிருக்கிறேன்.) இப்படத்தில் கார்த்திக் முழுக்க முழுக்க beta maleஆக இருக்கிறான். தன்னிரகத்துடன், தயக்கத்துடன் வாழ்க்கை குறித்த நிறைய குழப்பங்களுடன். நியாயமாக ஜெஸ்ஸி அவனை இப்போது ஒரு குழந்தையையைப் போன்றே நடத்துகிறாள். அவன் லவ் யூ சொல்லுஎனும் போது அது ஒரு குழந்தை முத்தம் கேட்பது போல அவளுக்குத் தோன்றுகிறது. “ லவ் யூ சொன்னா கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிச்சுருவாங்களா?” என அவனை கலாய்க்கிறாள். அவன் வேறொரு மனநிலையில் கெத்தாகப் பேசியிருந்தால் அவள் அவனை நடத்தும் விதமே வேறு
 கார்த்திக்கின் இந்த அவதாரம் 96 படத்தின் ராமை நினைவுபடுத்துகிறது என்பது ஒருதுயரம்’ (ராமை எனக்குப் பிடிக்காது. அவன் ரொம்ப மட்டமான beta male.). கௌதம் மேனன் கார்த்திக் பாத்திரத்தை இன்னும் சற்று சிக்கலானதாக, எதிர்பாராமை கொண்டதாக, உரையாடலினூடே சிறு திருப்பங்கள் (அவன் ஆல்பாவில் இருந்து பீட்டாவுக்கும், இதிலிருந்து அதற்குமாக உருமாறுகிற தன்மையில்) அமைத்து உருவாக்கி இருக்கலாம். இப்படம் சூடு பிடித்திருக்கும். ஆனால் இப்போதைக்கு கார்த்திக்கை பார்த்து ஜெஸ்ஸி மட்டுமல்ல நாமும் தான்போய் உன் வேலையைப் பாருஎன சொல்லும்படி இருக்கிறது.
மனுஷ்ய புத்திரன்கார்த்திக் டயல் செய்த எண்படத்தை பகடி செய்த எழுதிய கவிதை இதை விட நன்றாக, சமகாலத்தன்மையுடன் உள்ளது - அதில் வரும் கார்த்திக் வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்த, காதல் வெறும் விளையாட்டு எனும் சமயோஜித புத்தி கொண்ட பின்நவீன காதலனாக இருக்கிறான். அவனுக்கு காதலி இருக்கிறாள். கார்த்திக்கிடம் முன்பு ஜெஸ்ஸி நடந்து கொண்டதைப் போன்றே அவள் இப்போது கார்த்திக்கை நடத்துகிறாள். அவளை சமாளிப்பதே பெரும்பாடாக இருக்கிறது. ஆனால் அவளே எதார்த்தம் என்பதால் தன்னை போனில் அழைத்து ஆறுதலுக்காக, பழைய காதல் நினைவில் குளிர்காய அழைக்கிற ஜெஸ்ஸியை அவன் புரிந்து கொண்டு இறுதியில் அவளை பிளாக் செய்தும் விடுகிறான்
அந்த கார்த்திக்கும் இந்த கார்த்திக்கும் வேறுவேறுதான் - அவன் இவனாக முடியாது. அவன் அவன் 90களின் குழந்தை. எனக்கு இவனைப் பிடிக்கவில்லை.     

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...