முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உ.பியை “சோனாகாச்சியாக” மாற்றுகிறாரா யோகி ஆதித்யநாத்?


Theprint இணையதளத்தில் வந்துள்ள இந்த கட்டுரை (https://www.firstpost.com/india/after-suspending-labour-laws-up-okays-migration-commission-adityanath-govts-move-can-leave-workers-at-mercy-of-predatory-capitalists-8420011.html) ஒரு விசயத்தை தெளிவுபடுத்துகிறது: தற்போது உத்தர பிரதேச /அரசு புலம்பெயர்வு கமிஷன் ஒன்றை அமைத்து அதன் மூலம் தொழிலாளர்கள் தம் மாநிலத்தை விட்டு வெளியேறுவதை தடுப்பதற்கும், உள்ளூரில் உள்ள தொழிலாளர் அடிப்படை நலன்களைப் பாதுகாக்கும் சட்டங்களை ரத்து செய்வதற்கும் இடையில் ஒரு தொடர்பு உள்ளது; ஒரு சதித்திட்டம் இதன் பின்னால் உள்ளது. இனிமேல் குறைவான சம்பளத்துக்கு அதிகமான நேரம் தொழிலாளிகளை அங்கு வேலை வாங்கலாம். மாநில எல்லையை கடக்க முடியாது என்பதால் அவர்கள் புதிய வேலையை வெளியே தேட முடியாது. அவர்கள் அங்கேயே சிறைவைக்கப்படுகிறார்கள். அதிகமான தொழிலாளிகள் ஒரே இடத்தில் வேலை தேடும் போது முதலாளிகள் அதைக்காட்டி ஊதியத்தைக் குறைக்கவும் கூடுதலாய் வேலைவாங்கி பிழியவும் முடியும். அதை எதிர்த்து யாரும் நீதிமன்றத்துக்கு செல்லக் கூடாது என்பதற்காகவே ஆதித்யநாத் தொழிலாளர் உரிமை சட்டங்களை ரத்து செய்கிறார்.


யோசித்துப் பாருங்கள். கொரோனா சமயத்தில் பல மாநிலங்களில் வேலை செய்து வந்த ஒரு குறிப்பிட்ட தொழிலை செய்பவர்கள் ஊருக்குத் திரும்புகிறார்கள். அரசு ஒரு சட்டமியற்றி அவர்கள் இனி சுலபத்தில் சொந்த ஊரை விட்டு வேலை தேடி வெளியேற முடியாத நிலைமையை ஏற்படுத்துகிறது. அவர்கள் வேலை கேட்டு செல்லும் போது ஒரு இடத்துக்கு ஆயிரம் பேர் போட்டியிடும் சூழல் ஏற்படும். அப்போது ஒரு லட்சம் சம்பளம் கொடுப்பதற்குப் பதில் ஒரு திறமையும் அனுபவமும் மிக்க மென்பொருள் பொறியாளருக்கோ, மருத்துவருக்கோ நீங்கள் 25,000 கொடுத்தால் போதும் எனும் நிலைமை ஏற்படும். அவர்களால் எதிர்க்க முடியாது. படித்த இவர்களுக்கே இப்படி எனில் கூலிவேலை செய்பவர்களுக்கு ஒருவர் இடத்தில் பத்தாயிரம் பேர் போட்டியிடும் நிலைமை ஏற்படும். இப்படி செயற்கையாக வேலைத்தட்டுப்பாட்டை உண்டு பண்ணி மக்களை ஒரே இடத்தில் சிறைவைப்பது மிக அபாசமான ஒரு செயல். இதனோடு ஒப்பிடுவதென்றால் இளம்பெண்களை கடத்தி வந்து சோனாகாச்சியில் பூட்டிவைத்து வேலைவாங்குவதுடன் தான் ஒப்பிடத் தோன்றுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...