முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உ.பியை “சோனாகாச்சியாக” மாற்றுகிறாரா யோகி ஆதித்யநாத்?


Theprint இணையதளத்தில் வந்துள்ள இந்த கட்டுரை (https://www.firstpost.com/india/after-suspending-labour-laws-up-okays-migration-commission-adityanath-govts-move-can-leave-workers-at-mercy-of-predatory-capitalists-8420011.html) ஒரு விசயத்தை தெளிவுபடுத்துகிறது: தற்போது உத்தர பிரதேச /அரசு புலம்பெயர்வு கமிஷன் ஒன்றை அமைத்து அதன் மூலம் தொழிலாளர்கள் தம் மாநிலத்தை விட்டு வெளியேறுவதை தடுப்பதற்கும், உள்ளூரில் உள்ள தொழிலாளர் அடிப்படை நலன்களைப் பாதுகாக்கும் சட்டங்களை ரத்து செய்வதற்கும் இடையில் ஒரு தொடர்பு உள்ளது; ஒரு சதித்திட்டம் இதன் பின்னால் உள்ளது. இனிமேல் குறைவான சம்பளத்துக்கு அதிகமான நேரம் தொழிலாளிகளை அங்கு வேலை வாங்கலாம். மாநில எல்லையை கடக்க முடியாது என்பதால் அவர்கள் புதிய வேலையை வெளியே தேட முடியாது. அவர்கள் அங்கேயே சிறைவைக்கப்படுகிறார்கள். அதிகமான தொழிலாளிகள் ஒரே இடத்தில் வேலை தேடும் போது முதலாளிகள் அதைக்காட்டி ஊதியத்தைக் குறைக்கவும் கூடுதலாய் வேலைவாங்கி பிழியவும் முடியும். அதை எதிர்த்து யாரும் நீதிமன்றத்துக்கு செல்லக் கூடாது என்பதற்காகவே ஆதித்யநாத் தொழிலாளர் உரிமை சட்டங்களை ரத்து செய்கிறார்.


யோசித்துப் பாருங்கள். கொரோனா சமயத்தில் பல மாநிலங்களில் வேலை செய்து வந்த ஒரு குறிப்பிட்ட தொழிலை செய்பவர்கள் ஊருக்குத் திரும்புகிறார்கள். அரசு ஒரு சட்டமியற்றி அவர்கள் இனி சுலபத்தில் சொந்த ஊரை விட்டு வேலை தேடி வெளியேற முடியாத நிலைமையை ஏற்படுத்துகிறது. அவர்கள் வேலை கேட்டு செல்லும் போது ஒரு இடத்துக்கு ஆயிரம் பேர் போட்டியிடும் சூழல் ஏற்படும். அப்போது ஒரு லட்சம் சம்பளம் கொடுப்பதற்குப் பதில் ஒரு திறமையும் அனுபவமும் மிக்க மென்பொருள் பொறியாளருக்கோ, மருத்துவருக்கோ நீங்கள் 25,000 கொடுத்தால் போதும் எனும் நிலைமை ஏற்படும். அவர்களால் எதிர்க்க முடியாது. படித்த இவர்களுக்கே இப்படி எனில் கூலிவேலை செய்பவர்களுக்கு ஒருவர் இடத்தில் பத்தாயிரம் பேர் போட்டியிடும் நிலைமை ஏற்படும். இப்படி செயற்கையாக வேலைத்தட்டுப்பாட்டை உண்டு பண்ணி மக்களை ஒரே இடத்தில் சிறைவைப்பது மிக அபாசமான ஒரு செயல். இதனோடு ஒப்பிடுவதென்றால் இளம்பெண்களை கடத்தி வந்து சோனாகாச்சியில் பூட்டிவைத்து வேலைவாங்குவதுடன் தான் ஒப்பிடத் தோன்றுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...