முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இரும்புத் தடிகளால் கொல்லப்படும் இந்திய ராணுவத்தினர்



கல்வான் பள்ளத்தாக்கில் சீன எல்லைப்படை வீரர்களால் தாக்கப்பட்டு இந்திய ராணுவத்தினர் 23 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் வினோதம் இவர்களை துப்பாக்கிச் சூட்டில் சாகவில்லை, முட்கம்பி சுற்றப்பட்ட இரும்புத் தடிகளால் அடித்தே கொல்லப்பட்டுள்ளனர் என்பது. மேலும் பலர் இந்த தாக்குதலில் இருந்து தப்பிக்க வெளியே ஓடியதில் கடும் உறைகுளிர் சீதோஷ்ணத்தால் பாதிக்கப்பட்டும், கல்வான் நதியில் குதித்து தப்பிக்க முயல்கையில் சீன ராணுவத்தால் தாக்கப்பட்டு (மீண்டும் இதே தடியால் தான்) கொல்லப்பட்டதாகவும் செய்திகள் கூறுகின்றனபாபு எனும் ஒரு கர்னலும் பலியாகியிருக்கிறார். நூற்றுக்கு மேற்பட்ட இந்திய ராணுவத்தினர் இந்த தாக்குதலில் காயம்பட்டுள்ளனர். சிலர் உயிருக்குப் போராடி வருகிறார்கள். சீன ராணுவம் சிலரைக் கைப்பற்றிக் கொண்டு போய் கொன்றிருக்கிறார்கள்; பேச்சுவார்த்தைப் பிற்கு சிலரை திரும்ப ஒப்படைத்திருக்கிறார்கள்.

 நான் இப்போதுதான் முதன்முதலாய் ராணுவத்தினர் ஏதோ கல்லூரி மாணவர்களைப் போல கைத்தடிகளால் பரஸ்பரம் தாக்கிக் கொள்வார்கள் என்பதைக் கேள்விப்படுகிறேன். புகைப்படங்களில் அவர்கள் சதா ஏந்தியிருக்கும் விலையுயர்ந்த துப்பாக்கிகள் எங்கே? வெடிகுண்டுகள், டாங்கிகள் மற்றும் ஏவுகணைகள் எங்கே? இப்போதெல்லாம் தமிழ் சினிமாவில் கூட குண்டாந்தடியால் வில்லன்கள் தாக்க வருவதில்லை. குறைந்தது அருவாளாவது ஏந்தி வருகிறார்கள். இயக்குநர் ஹரி இப்படி படப்பிடிப்புக்காக சொந்தமாக பல அருவாக்களை எப்போதும் வைத்திருப்பார் என்று சொல்கிறார்கள். நம் ராணுவத்திடம் இது கூட இல்லையா? கேங்ஸ்டர் படங்களில் பட்பட்டென எடுத்து சுடுகிறார்களோ அவை கூட இல்லையா?

இங்கு தான் நாம் வெளியுறவுத் துறையின் கருணையற்ற அணுகுமுறையை, தமது அரசியலுக்காக போர் வீரர்களை (கூடவே பொதுமக்களையும்) பலிகொடுக்கும் போக்கை கவனிக்க வேண்டும். அதற்கு முன்பு இந்த கல்வான் பள்ளத்தாக்கு லடாய் என்ன, அதன் வரலாற்றுப் பின்னணி என்னவென அறிய வேண்டும்.


இந்த கல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவின் லடாக் பிராந்தியத்திற்கும் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள அக்சாய் சீனா பகுதிக்கும் இடையே அமைந்துள்ளது. அகாய் சீனா என்பது ஒரு காலத்தில் இந்தியாவின் எல்லைக்கு உட்பட்ட பகுதியே; ஆனால் அறுபதுகளில் சீன ஒரு சாலையை அமைத்து இதை எடுத்துக் கொண்டது. இந்தியா சீனா நாடுகளைப் பிரிப்பதே இந்தப் பள்ளத்தாக்கு வழியாக செல்லும் கட்டுப்பாட்டு எல்லைக் கோடுதான். அண்மைக் காலமாக இந்தியா இந்த எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் சில பாதுகாப்பு கட்டுமனங்களை அமைத்து வருகிறார். இது சீனாவை எரிச்சல்படுத்துகிறது; அவர்கள் தமது ராணு ரோந்தை அங்குள்ள ஏரியில் படகுகள் வழி அதிகப்படுத்த இந்தியாவும் தன் பங்குக்கு ரோந்தை உக்கிரமாக்கியது. அடுத்து ஒரு பக்கம் இந்தியா-சீனா பேச்சுவார்த்தையும் இருநாட்டு ராணுவத்தினர் இடையில் சிறிய அளவிலான மோதல்களும் ஒரே சமயம் நடந்து வந்தன. கல்வான் பள்ளத்தாக்கில் அண்மையில் சீனா அமைத்த ஒரு முகாம் தான் இப்போதுள்ள பஞ்சாயத்தின் துவக்கப்புள்ளி. அதை அகற்ற சீனா ஒப்புக்கொள்ளாததால் இந்திய ராணுவம் இறங்கி அதை நீக்கியது. அடுத்து சீன ராணுவத்தின் ஆரம்பத்தில் சொன்ன அந்த குண்டாந்தடித் தாக்குதலைத் தொடுத்துள்ளது.


சீனாக்காரர்கள் துப்பாக்கியை ஏன் பயன்படுத்தவில்லை என்று கேட்டால் ஏன் இந்திய வீரர்களும் சட்டக்கல்லூரி மாணவர்களைப் போல அமெச்சூராக சண்டைபோட்டு ஓடினர் என்பது விளங்கும். இரு தரப்புக்கும் பேச்சுவார்த்தை நடந்து வருவதால் துப்பாக்கி பயன்படுத்துவது தமது தரப்பு நியாயத்தை பலவீனமாக்கும் என வெளியுறவுத் துறைகள் நினைக்கின்றன. ஆனால் சீனா முதலில் தாக்குதல் தொடுத்த நிலையில் இந்தியா ஏதோ மாணவப் போராளிகள் போலீசிடம் அடிவாங்குவதைப் போல நடந்து கொண்டிருக்க வேண்டாம். அவர்கள் தாராளமாக துப்பாக்கிகளை எடுத்து பயன்படுத்தி இந்த தாக்குதலை முறியடித்திருக்கலாம். நூற்றுக்கணக்கான இந்திய வீரர்களையும் காப்பாற்றி இருக்கலாம். ஆனால் பாருங்கள் நமது வெளியுறவுத் துறையிடம் இருந்து, பிரதமர் ஜியிடம் இருந்து ராணுவத்தலைமைக்கு இதற்கு அனுமதி சுலபத்தில் கிடைக்காது. எப்படி ஒக்கிப் புயலினால் கடலில் தத்தளித்த மீனவர்களை நமது கடற்படை நாட்கணக்காய் காப்பாற்றவில்லையோ அதேபோல ராணுவ வீரர்களை இம்முறை சாக விட்டிருக்கிறார்கள்; அவர்கள் துரத்தப்பட்டு நதியில் மூழ்கடிக்கப்பட்ட போதாவது கூடுதல் ஆயுதமேந்திய ராணுவப்படைகளை அவர்களின் உதவிக்கு அனுப்பியிருக்கலாம், ஆனால் ஜி அனுப்பவில்லை. கடைசியில் அவர்கள் குளிரிலும் மருத்துவ உதவியின்றியும் செத்துப் போனார்கள். எல்லாவற்றுக்கும் காரணம் ஜியின் அரசியலும் முடிவெடுப்பதில் தீர்மானமான நிலைப்பாடு இல்லாததுமே. விளம்பரத்தில் அவர் காட்டுகிற முனைப்பும் தீர்மானமும் இப்போதெல்லாம் நிர்வாகத்தில் இருப்பதில்லை. ரொம்ப யோசித்து யோசித்து தனக்கு அரசியல் அனுகூலம் கிடைக்கும் முடிவு எது எனத் திட்டமிட்டு மக்களுக்கு ஆபத்து விளைவிக்கிற ஒரு முடிவாக எடுக்கிறார். இப்போதுகூட பாருங்கள் ஜி இதை வைத்து என்ன டிராமா பண்ணி தான் நல்லப் பெயர் வாங்கலாம் என தன் செயலாளர்கள், மந்திரிகளுடன் ஆலோசனை பண்ணிக் கொண்டிருப்பார்.


அன்புள்ள ஜி, தயவு செய்து பாகிஸ்தானுக்கு அனுப்பி நான்கைந்து பனை மரங்களை சாய்த்த ஏவுகணைகளையாவது அடுத்த முறை நம் ராணுவம் கொல்லப்படும் போது பயன்படுத்துங்கள். ஆனால் இந்த முறை ஒரு நூறு பனை மரங்களாவது சாயணும். ஜெய் ஹிந்த்!


பின்குறிப்பு: கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியாத தோல்வியில் இருந்து மக்களின் கவனத்தைத் திருப்பவே இந்த எல்லைக்கோட்டு பிரச்சனைகளை ஜி வளர்க்கிறார் என சிலர் சொல்வதில் உண்மை இருக்குமா இல்லையா என்பதை அடுத்த சில நாட்களில் ஜி எடுக்கும் முடிவுகளில், “மித்ரோஎன விளித்து ராணுவ உடையில் தோன்றிப் பேசுவாரா இல்லையா என்பதில் தெரிந்து விடும்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...