முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தில்லி-பஞ்சாப் ஐ.பி.எல் ஆட்டம் - ஜெயிப்பது யார்?




இன்றைய ஐ.பி.எல் போட்டி பஞ்சாப் மற்றும் தில்லி அணிகளுக்கு இடையே நடக்கிறது. பஞ்சாப் அணியின் தலைவர் ராகுல். தில்லிக்கோ ஷ்ரேயாஸ் ஐயர். இருவருமே அனுபவம் குறைவான அணித்தலைவர்கள். இருவரின் அணிகளும் கிட்டத்தட்ட சமமான திறன்களும் அனுபவமும் படைத்தவை. ஐ.பி.எல் வரலாற்றில் தில்லியை விட பஞ்சாப் அணி மேலான வெற்றி வரலாற்றைக் கொண்டுள்ளது. இன்றைய ஆட்டத்தில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்?


60-40 என்கிற விகிதத்தில் தில்லி வெல்லவே வாய்ப்பதிகம் என்பது என் கணிப்பு - சென்னை தான் ஜெயிக்கும் என்கிற எனது நேற்றைய கணிப்பு பலித்தது. இன்று என்ன நடக்கும்? ஏன் தில்லி ஜெயிக்கும் என்கிறேன்?


முதலில் மட்டையாட்டம்:


அபுதாபியின் ஆடுதளம் சற்று மெத்தனமானது, குறைவான பவுன்ஸ் கொண்டது. அங்கு வேகமான பவுன்ஸான ஆடுதளங்களில் நன்றாக ஆடும் (கர்நாடகாவில் அத்தகைய ஆடுதளங்கள் அதிகம் என்பதால்) கர்நாடகாவைச் சேர்ந்த, தற்போது பஞ்சாபுக்காக ஆடும் ராகுல், கருண் நாயர், மயங்க் அகர்வால், மேக்ஸ்வெல், பூரன் போன்றோர் எப்படி சமாளிப்பார்கள் என்பது ஒரு கேள்விக்குறி. இந்த ஆடுதளச் சூழலுக்கு சமாளிக்க வாய்ப்பதிகம் உள்ள பேட்ஸ்மேன்கள் அந்த அணியில் சர்பராஸ் கானும், கிறிஸ் கெய்லுமே. ஒருவேளை ராகுல் தனது அனுபவத்தை பயன்படுத்தி தன் ஆட்டபாணியை மாற்றி ரன் அடிக்கலாம்.    


தில்லிக்காக ஆடும் ஷ்ரேயாஸ், தவன், ஹெட்மையர் ஆகியோருக்கு இந்த ஆடுதளம் ஏற்றதாக இருக்கும். அவர்கள் சுழல்பந்தை நன்றாக ஆடக் கூடியவர்கள் என்பதும் முக்கியம். பிருத்வி ஷாவால் எந்தளவுக்கு இங்கு ஆட முடியும் என்பது சந்தேகம். பண்ட் பொறுமையுடன் ஆடுவாரா? ஆனால் ரஹானேவால் இங்கு சரிவர ஆடுவதும் கிட்டத்தட்ட அசாத்தியம். அவரை ஆட வைத்தால் அது தவறான முடிவாகும்.


அடுத்து பந்து வீச்சு:


பஞ்சாப் அணியில் சுழலர்கள் முருகன் அஷ்வின் மற்றும் முஜீப் ரஹ்மான். ஆல்ரவுண்டர் சுழலர்கள் கவுதம், ஹூடா, மேக்ஸ்வெல் ஆகியோர். இவர்களில் விக்கெட் எடுக்கக் கூடியவர் முஜீப். ஆனால் அவர் தன் பந்தின் நீளம் மற்றும் வேகத்தில் கவனம் செலுத்த வேண்டும். முருகன் அஷ்வின் எனக்குப் பிடித்த சுழலர் என்றாலும் அவரது வேகமான் கால்சுழல் சற்று குறைநீளத்தில் விழக் கூடியது. அது இந்த ஆடுதளத்தில் எடுபட வாய்ப்பு குறைவு. ஆல்ரவுண்டர்களிடம் இருந்து அதிகம் எதிர்பார்க்க முடியாது என்றாலும் மேக்ஸ்வெல்லும் கவுதமும் சற்று நேர்த்தியாக வீசி ரன்களை குறைக்கலாம், ஆனால அதற்கு முதலில் பிரதான சுழல் / வேக வீச்சாளர்கள் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். நீஷம் ஆடக் கூடாது, ஆடினால் பந்து வீசக் கூடாது, நிச்சயமாய் அடிவாங்குவார். போரல, கோட்டரல் போன்றோரின் வேகப்பந்து வீச்சும் எடுபடுமா எனத் தெரியவில்லை. 


ஆனால் தில்லி அணியிலோ அஷ்வின், மிஷ்ரா ஆகியோர் அபாரமான, அனுபவமிக்க சுழலர்கள். லேமிச்சேன், அக்ஸர் பட்டேல் வேறு இருக்கிறார்கள். வேகவீச்சாளர்களில் கீமோ பால், மோஹித் ஷர்மாவின் பந்து வீச்சு இங்கு எடுபடும். இஷாந்த் தன் அனுபவத்தை பயன்படுத்தி சரியான நீளத்தில் வீசினால் எடுபடும். ஆனால் ரபாடாவை இங்கு ஆட வைப்பது ஆபத்து. இந்த ஆடுதளச் சூழலுக்கு ஏற்ற பந்து வீச்சு தில்லியிடமே உள்ளது.

இதனால் தான் இது தில்லிக்கான ஆட்டம் என்கிறேன்.


பார்க்கலாம்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...