முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தில்லி-பஞ்சாப் ஐ.பி.எல் ஆட்டம் - ஜெயிப்பது யார்?




இன்றைய ஐ.பி.எல் போட்டி பஞ்சாப் மற்றும் தில்லி அணிகளுக்கு இடையே நடக்கிறது. பஞ்சாப் அணியின் தலைவர் ராகுல். தில்லிக்கோ ஷ்ரேயாஸ் ஐயர். இருவருமே அனுபவம் குறைவான அணித்தலைவர்கள். இருவரின் அணிகளும் கிட்டத்தட்ட சமமான திறன்களும் அனுபவமும் படைத்தவை. ஐ.பி.எல் வரலாற்றில் தில்லியை விட பஞ்சாப் அணி மேலான வெற்றி வரலாற்றைக் கொண்டுள்ளது. இன்றைய ஆட்டத்தில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்?


60-40 என்கிற விகிதத்தில் தில்லி வெல்லவே வாய்ப்பதிகம் என்பது என் கணிப்பு - சென்னை தான் ஜெயிக்கும் என்கிற எனது நேற்றைய கணிப்பு பலித்தது. இன்று என்ன நடக்கும்? ஏன் தில்லி ஜெயிக்கும் என்கிறேன்?


முதலில் மட்டையாட்டம்:


அபுதாபியின் ஆடுதளம் சற்று மெத்தனமானது, குறைவான பவுன்ஸ் கொண்டது. அங்கு வேகமான பவுன்ஸான ஆடுதளங்களில் நன்றாக ஆடும் (கர்நாடகாவில் அத்தகைய ஆடுதளங்கள் அதிகம் என்பதால்) கர்நாடகாவைச் சேர்ந்த, தற்போது பஞ்சாபுக்காக ஆடும் ராகுல், கருண் நாயர், மயங்க் அகர்வால், மேக்ஸ்வெல், பூரன் போன்றோர் எப்படி சமாளிப்பார்கள் என்பது ஒரு கேள்விக்குறி. இந்த ஆடுதளச் சூழலுக்கு சமாளிக்க வாய்ப்பதிகம் உள்ள பேட்ஸ்மேன்கள் அந்த அணியில் சர்பராஸ் கானும், கிறிஸ் கெய்லுமே. ஒருவேளை ராகுல் தனது அனுபவத்தை பயன்படுத்தி தன் ஆட்டபாணியை மாற்றி ரன் அடிக்கலாம்.    


தில்லிக்காக ஆடும் ஷ்ரேயாஸ், தவன், ஹெட்மையர் ஆகியோருக்கு இந்த ஆடுதளம் ஏற்றதாக இருக்கும். அவர்கள் சுழல்பந்தை நன்றாக ஆடக் கூடியவர்கள் என்பதும் முக்கியம். பிருத்வி ஷாவால் எந்தளவுக்கு இங்கு ஆட முடியும் என்பது சந்தேகம். பண்ட் பொறுமையுடன் ஆடுவாரா? ஆனால் ரஹானேவால் இங்கு சரிவர ஆடுவதும் கிட்டத்தட்ட அசாத்தியம். அவரை ஆட வைத்தால் அது தவறான முடிவாகும்.


அடுத்து பந்து வீச்சு:


பஞ்சாப் அணியில் சுழலர்கள் முருகன் அஷ்வின் மற்றும் முஜீப் ரஹ்மான். ஆல்ரவுண்டர் சுழலர்கள் கவுதம், ஹூடா, மேக்ஸ்வெல் ஆகியோர். இவர்களில் விக்கெட் எடுக்கக் கூடியவர் முஜீப். ஆனால் அவர் தன் பந்தின் நீளம் மற்றும் வேகத்தில் கவனம் செலுத்த வேண்டும். முருகன் அஷ்வின் எனக்குப் பிடித்த சுழலர் என்றாலும் அவரது வேகமான் கால்சுழல் சற்று குறைநீளத்தில் விழக் கூடியது. அது இந்த ஆடுதளத்தில் எடுபட வாய்ப்பு குறைவு. ஆல்ரவுண்டர்களிடம் இருந்து அதிகம் எதிர்பார்க்க முடியாது என்றாலும் மேக்ஸ்வெல்லும் கவுதமும் சற்று நேர்த்தியாக வீசி ரன்களை குறைக்கலாம், ஆனால அதற்கு முதலில் பிரதான சுழல் / வேக வீச்சாளர்கள் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். நீஷம் ஆடக் கூடாது, ஆடினால் பந்து வீசக் கூடாது, நிச்சயமாய் அடிவாங்குவார். போரல, கோட்டரல் போன்றோரின் வேகப்பந்து வீச்சும் எடுபடுமா எனத் தெரியவில்லை. 


ஆனால் தில்லி அணியிலோ அஷ்வின், மிஷ்ரா ஆகியோர் அபாரமான, அனுபவமிக்க சுழலர்கள். லேமிச்சேன், அக்ஸர் பட்டேல் வேறு இருக்கிறார்கள். வேகவீச்சாளர்களில் கீமோ பால், மோஹித் ஷர்மாவின் பந்து வீச்சு இங்கு எடுபடும். இஷாந்த் தன் அனுபவத்தை பயன்படுத்தி சரியான நீளத்தில் வீசினால் எடுபடும். ஆனால் ரபாடாவை இங்கு ஆட வைப்பது ஆபத்து. இந்த ஆடுதளச் சூழலுக்கு ஏற்ற பந்து வீச்சு தில்லியிடமே உள்ளது.

இதனால் தான் இது தில்லிக்கான ஆட்டம் என்கிறேன்.


பார்க்கலாம்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...