முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நடிகை சித்ராவின் மரணத்திற்கு யார் காரணம்?



இடம்: காவல் நிலையம்

வேலை: முதல் தகவல் அறிக்கையை தயாரிப்பது


“யோவ் ரிப்போர்ட் ரெடியா?”

“ஆமாங்கய்யா. இன்னும் கொஞ்சம் வேலை இருக்கு. முடிச்சிரலாம். நீங்க சொன்ன மாதிரி தற்கொலைன்னே போட்டுட்டோம்.”

“அந்த பொண்ணோட அம்மா என்னவோ தனக்கு எல்லாம் தெரியுங்கிற மாதிரி என் பொண்ணை அடிச்சு கொன்னுட்டாங்கன்னு கேமரா முன்னாடி ஒப்பாரி வைச்சுது. அப்போ நாம என்னா .... ? அசிங்கமா போச்சுய்யா. முதல்ல, தற்கொலைக்கு தூண்டினவங்கன்னு அந்த அம்மா மேலேயே கேஸைப் போடுறோம்.”

“ஐயா சொந்த அம்மாவா?”

“ஆமா, அப்போ தான் அது படிஞ்சு வரும். இனி மீடியாவுக்கு போக மாட்டேன்னு சமரசம் பண்ணிக்கும். அப்புறமா கழற்றி விட்டுரலாம்.”

“என்ன காரணமுய்யா?”

“அவள் கட்டிக்க இருந்தாளே ஹேம்நாத் அவனை விட்டு பிரிஞ்சு வந்திருன்னு இந்தம்மா தினமும் மெண்டல் டார்ச்சர் கொடுத்திருக்கு. ஓக்கேவா?”

“சரிய்யா.”

“அடுத்தது, தற்கொலைக்கு தூண்டின பிரதான குற்றவாளி நம்பர் 2 அந்த ஹேம்ராஜ்.”

“அதுக்கு என்ன காரணமுய்யா?”

“இதே தான் - என்னை கண்டிப்பா நீ கட்டிக்கணமுன்னு இந்தாளு மெண்டல் டார்ச்சர் கொடுக்கிறான். எப்படி?”

“சூப்பர் ஐயா. ஆனா நம்பும்படியா இல்லியே?”

“அந்தம்மாவை மட்டும் குற்றவாளி ஆக்கினா நாம் இந்தாளு கிட்ட பணத்தை வாங்கிட்டு தப்பா ரிப்போர்ட் கொடுக்குறோமுன்னு வந்திரும். அதான் அந்தாளையும் குற்றவாளி ஆக்குறோம். குற்றம் சாட்டுறவனும், சாட்டப்பட்டவனும்  இப்போ உள்ள வந்தாச்சு. எப்படி?”

“கோர்ட்டில....?”

“அதான் தற்கொலைன்னு ஆயிருச்சில்ல, அப்புறம் இவங்களை கோர்ட் விடுதலை பண்ணுனா என்னய்யா?”

“சூப்பருங்கய்யா.. ஐயா எனக்கு ஒரு சந்தேகம்.”

“கேளு.”

“தற்கொலைன்னா என்னய்யா?”

“தானே தன்னை கொலை பண்ணிக்கிறது.”

“ஐயா நான் சொல்றது தப்புன்னா மன்னிச்சிருங்க.”

“சொல்லுய்யா கேட்போம்.”

“தன்னையே கொல்லுறதும் கொலைதான்.”

“ஆமா, தற்கொலை.”

“ஆமாங்கய்யா. அப்படி கொல்லுறவங்க தானே கொலையாளி? இப்போ முதல் குற்றவாளி அந்த கொலையாளி தானே. அதனால இந்த ரிப்போர்ட் படி பிரதான குற்றவாளி எண் 1 சித்ரா தான். எப்படிங்கய்யா?”

“அடடா, நான் கூட இப்படி யோசிக்கலையே? மூணு பேரு சம்மந்தப்பட்டிருக்காங்க. அந்த அம்மாவும், ஹேம்நாத்தும் தப்பிச்சா கூட இந்த பொண்ணை விடக் கூடாது.”

“விட மாட்டேனுய்யா. சித்ரா கொலைக் குற்றவாளி துப்புத்துலக்கு. விரைவில் கைதுன்னு நியூஸ் கொடுத்திருவோம்யா.”

“முதல்ல போய் டீயும் வடையும் வாங்கிட்டு வா.”

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...