Skip to main content

நடிகை சித்ராவின் மரணத்திற்கு யார் காரணம்?



இடம்: காவல் நிலையம்

வேலை: முதல் தகவல் அறிக்கையை தயாரிப்பது


“யோவ் ரிப்போர்ட் ரெடியா?”

“ஆமாங்கய்யா. இன்னும் கொஞ்சம் வேலை இருக்கு. முடிச்சிரலாம். நீங்க சொன்ன மாதிரி தற்கொலைன்னே போட்டுட்டோம்.”

“அந்த பொண்ணோட அம்மா என்னவோ தனக்கு எல்லாம் தெரியுங்கிற மாதிரி என் பொண்ணை அடிச்சு கொன்னுட்டாங்கன்னு கேமரா முன்னாடி ஒப்பாரி வைச்சுது. அப்போ நாம என்னா .... ? அசிங்கமா போச்சுய்யா. முதல்ல, தற்கொலைக்கு தூண்டினவங்கன்னு அந்த அம்மா மேலேயே கேஸைப் போடுறோம்.”

“ஐயா சொந்த அம்மாவா?”

“ஆமா, அப்போ தான் அது படிஞ்சு வரும். இனி மீடியாவுக்கு போக மாட்டேன்னு சமரசம் பண்ணிக்கும். அப்புறமா கழற்றி விட்டுரலாம்.”

“என்ன காரணமுய்யா?”

“அவள் கட்டிக்க இருந்தாளே ஹேம்நாத் அவனை விட்டு பிரிஞ்சு வந்திருன்னு இந்தம்மா தினமும் மெண்டல் டார்ச்சர் கொடுத்திருக்கு. ஓக்கேவா?”

“சரிய்யா.”

“அடுத்தது, தற்கொலைக்கு தூண்டின பிரதான குற்றவாளி நம்பர் 2 அந்த ஹேம்ராஜ்.”

“அதுக்கு என்ன காரணமுய்யா?”

“இதே தான் - என்னை கண்டிப்பா நீ கட்டிக்கணமுன்னு இந்தாளு மெண்டல் டார்ச்சர் கொடுக்கிறான். எப்படி?”

“சூப்பர் ஐயா. ஆனா நம்பும்படியா இல்லியே?”

“அந்தம்மாவை மட்டும் குற்றவாளி ஆக்கினா நாம் இந்தாளு கிட்ட பணத்தை வாங்கிட்டு தப்பா ரிப்போர்ட் கொடுக்குறோமுன்னு வந்திரும். அதான் அந்தாளையும் குற்றவாளி ஆக்குறோம். குற்றம் சாட்டுறவனும், சாட்டப்பட்டவனும்  இப்போ உள்ள வந்தாச்சு. எப்படி?”

“கோர்ட்டில....?”

“அதான் தற்கொலைன்னு ஆயிருச்சில்ல, அப்புறம் இவங்களை கோர்ட் விடுதலை பண்ணுனா என்னய்யா?”

“சூப்பருங்கய்யா.. ஐயா எனக்கு ஒரு சந்தேகம்.”

“கேளு.”

“தற்கொலைன்னா என்னய்யா?”

“தானே தன்னை கொலை பண்ணிக்கிறது.”

“ஐயா நான் சொல்றது தப்புன்னா மன்னிச்சிருங்க.”

“சொல்லுய்யா கேட்போம்.”

“தன்னையே கொல்லுறதும் கொலைதான்.”

“ஆமா, தற்கொலை.”

“ஆமாங்கய்யா. அப்படி கொல்லுறவங்க தானே கொலையாளி? இப்போ முதல் குற்றவாளி அந்த கொலையாளி தானே. அதனால இந்த ரிப்போர்ட் படி பிரதான குற்றவாளி எண் 1 சித்ரா தான். எப்படிங்கய்யா?”

“அடடா, நான் கூட இப்படி யோசிக்கலையே? மூணு பேரு சம்மந்தப்பட்டிருக்காங்க. அந்த அம்மாவும், ஹேம்நாத்தும் தப்பிச்சா கூட இந்த பொண்ணை விடக் கூடாது.”

“விட மாட்டேனுய்யா. சித்ரா கொலைக் குற்றவாளி துப்புத்துலக்கு. விரைவில் கைதுன்னு நியூஸ் கொடுத்திருவோம்யா.”

“முதல்ல போய் டீயும் வடையும் வாங்கிட்டு வா.”

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

போலி அறச்சீற்றம்

  ஜெயமோகனின் அறச்சீற்றப் பதிவில் ஒரு அரசியல் உள்ளோட்டத்தைப் பலரும் கவனிக்கவில்லை. வைரமுத்து துணை-ஜனாதிபதியின் செல்வாக்கில் விருதை வென்றார் என ஒரு கூற்று. அதேசமயம் இதற்கு முன்பு வைரமுத்து இவ்விருதுக்காக முயன்றபோது தான் கடுமையாக எதிர்த்ததாகவும், விருது அவருக்கு நழுவிப் போனதாகவும் சொல்கிறார். இதன் பொருள் ஜெயமோகன் இங்கு பேசுவது வைரமுத்துப் பிரச்சினை அல்ல உட்கட்சி மோதல் பிரச்சினையைத் தான் என்பது. அதாவது. ஆர்.எஸ்.எஸ், பாஜகவுக்குள் இருக்கும் உட்குழுக்களில் எதையோ ஜெயமோகனைப் போன்றவர்கள் பிடித்து செல்வாக்கு செலுத்த முயல வைரமுத்து இவர்களையும் மீறி ராதாகிருஷ்ணனைப் பிடித்து காரியம் சாதித்துவிட்டார் என்று ஜெயமோகன் எண்ணுகிறார். இது அவரது குறிப்புக்குள் ஓடுகிற உள்ளோட்டம். வெளியே வைரமுத்து இலக்கிய மதிப்பற்ற சகதி, அவருக்கெல்லாம் தகுதியில்லை, அவருக்கு எதிராக நாம் திரண்டு வேலை செய்ய வேண்டும் எனும் உணர்ச்சிகரமான அறைகூவல் வருகிறது. நாம் இந்த அறைகூவலையே அதிகம் கவனிக்கிறோம். ஜெயமோகன் வேறு யாருக்கோ ஏதோ ஒரு செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறார். அவர் தன்னை செல்வாக்கு மிக்க ஒரு அதிகார முகவராகக் காட்டிக் கொள்ள ...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...