Skip to main content

நேர்மை எனும் பொய்



தமிழருவி மணியன் தான் ஒரு நேர்மையாளர், ஒழுக்கசீலர் அதனால் அரசியலில் தாக்குப்பிடிக்க முடியவில்லை என்கிறார். இது உண்மையெனில் ரஜினியை அரசியலுக்கு இழுத்து வரும் டீலிங்கில் அவருக்குப் பின்னிருந்த இயக்கியவர்கள் யார் என வெளிப்படையாக சொல்லட்டும். காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவரும் பாஜகவின் அர்ஜுனமூர்த்தியும் எப்படி ஒரே கட்சியில் இருவேறு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட முடியும் என விளக்கட்டும். அவர் செய்ய மாட்டார். ஏனென்றால் ரகசியங்களைப் பாதுகாப்பதே அவரைப் போன்ற அரசியல்வாதிகளின் பிரதான லட்சியம். ரகசியத்திற்கும் நேர்மைக்கும் தூரத்து உறவு கூட இல்லை. காந்தி ஒரு உதாரணம். அவர் எதையும் மறைத்ததில்லை, தனது பாலியல் விழைவுகளைக் கூட பிரசுரித்தார். மணியன் போன்றவர்களோ திரைமறைவு வேலைகளை செய்து அதிகாரத்தைப் பிடிப்பது, அது குறித்த உண்மைகளை வெளியே சொல்லாமல் காப்பது என இருக்கிறார். காந்தி இருந்திருந்தால் ஒரு பிய்ந்த நெருப்பை எடுத்து இவரை சாத்தியிருப்பார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.


சரி, ‘நேர்மை’ என்பதை மணியன் வேறொரு பொருளில் புரிந்து கொள்கிறார் என வைப்போம் - நிர்வாகத்தில் பொதுவான ஊழல் செய்யாமல் இருப்பது, பெரும் கட்டுமானப்பணிகளில் மறைமுக ஒப்பந்ததாரராக இருந்து பெரும்பணம் ஈட்டுவது, வெளிநாட்டு தொழில்நிறுவனங்களின் இந்திய அரசியல் முகவராக செயல்படுவது போன்றவற்றை செய்யாமல் இருப்பதை சொல்கிறார் என்றால் அந்த நேர்மையானது ஒருவித நீர்த்துப் போன போலியான சொல். நீங்கள் ஒன்றில் இருந்து விலகி இருப்பதால் நேர்மையாளர் என்பது தவறு செய்ய வாய்ப்புக் கிடைக்காததால் ஒருவர் நல்லவர் என்பதாகும். இது பொதுவாக மத்திய வர்க்கத்தினரில் பலருக்கும் உள்ள கற்பிதமே. பயந்தாங்கொள்ளித்தனம் என்பது ஒழுக்கமோ நேர்மையோ அல்ல. அப்படி நினைப்பது பத்தாம்பசலித்தனம். இவரை ஒட்டி ரஜினி கட்சி ஆரம்பித்திருந்தால் இதுவரை அரசியலில் ஈடுபடாதவர்கள் அனைவரும் ஒழுக்கமானர்கள், நேர்மையானவரக்ள் என முடிவு செய்து வேட்பாளர்களாக நிறுத்தியிருப்பார். நேர்மையை இப்படி நான்-மற்றமை எனப் பார்ப்பதும் ஒரு மத்திய வர்க்கப் பார்வையே. கொஞ்சமாவது விவரம் உள்ளவர்கள் ஊழலை ஒரு பொருளாதாரப் பிரச்சனையாகப் புரிந்து கொள்வார்கள். 


ஊழல் எப்போதும் தனியாரின் பங்கெடுப்பினாலே நிகழ்கிறது. விளம்பரத்துக்காக மட்டுமே நூற்றுக்கணக்கான கோடிகளை செலவிடும் அரசால் ஏன் ஒரு கட்டுமானப்பணியை தானாக மேற்கொள்ள முடியாது? முடியும். ஆனால் அதில் நடக்கும் தில்லுமுல்லுக்கு தானே பொறுப்பாகும் நிலையும் ஏற்படும். அதற்குப் பதிலாக பணி ஆரம்பிக்கும் முன்பே கட்டிங் வாங்கிக் கொள்ள தனியாரிடம் ஒப்படைக்கிறார்கள். தனியார் ஏன் லஞ்சம் கொடுக்கிறார்கள்? அவர்களிடம் சொத்து குவிந்திருக்கிறது. அதை மேலும் பெருக்கிக் கொள்ள அரசுடன் கைகோர்த்து வேலை செய்கிறார்கள். ஏன் பணம் கொடுக்கவும் வாங்கவும் நம்மைப் போன்றவர்கள் கூட சில நேரம் தயங்குவதில்லை? ஏனென்றால் சொத்து ஓரிடத்தில் மட்டும் குவியும் போது மக்கள் தாம் மட்டும் ஏன் கையேந்தி நிற்க வேண்டும் என நினைக்கிறோம். கலவரத்தின் போது மக்களில் சிலர் புகுந்து கொள்ளையடிப்பது போலத்தான் இது. மக்களாட்சியின் போது சமூகத்தின் எல்லா மட்டங்களிலும் சிறிதும் பெரிதுமாக பொருளாதார சுரண்டல் இருந்து கொண்டிருக்கிறது; அதற்குப் பொறுப்பு மக்களாட்சி அமைப்போ ஆளுங்கட்சியோ அல்ல. இந்த பொருளாதார அமைப்பு மட்டுமே.  


நமது பொருளாதார அமைப்பு அநீதியானது என்பதாலே ஊழல் தொடர்ந்து நிகழ்கிறது என மண்டையில் மசாலா உள்ளவர்கள் விளங்கிக் கொள்வார்கள். ரஜினி, கமல், மணியன் போன்றோரிடம் இந்த சிந்தனை இல்லை. நம்மைப் போலல்லாதவர்கள் கெட்டவர்கள், அவர்கள் திராவிட கட்சிக்காரர்கள், அவர்கள் மட்டுமே ஊழல் செய்கிறார்கள் என எளிமையாகப் புரிந்து கொள்வார்கள். அதுவே அவர்களின் சித்தாந்தம். கமல் வெளியிடும் ஊழல் பட்டியலை பாருங்கள். அதில் பல லட்சம் கோடிகளை லஞ்சமாகக் கொடுக்கும் தொழிலதிபர்களின் பெயர்கள் இருக்காது. கமலின் படங்களுக்கு முதலீடு செய்பவர்களின் பணத்தில் ஊழலின் பங்கு இல்லையா? பெரும் நடிகர்கள் கறுப்புப் பணமாக வாங்கும் பணம் எங்கே முதலீடு செய்யப்படுகிறது? பிக்பாஸில் பேசும் போது ஒரு சினிமாவின் உருவாக்கத்தில் நூற்றுக்கணக்கான பேரின் சமமான பங்களிப்பு உண்டு என்கிறார். எனில், நட்சத்திர நடிகரில் இருந்து லைட் மேன் வரை ஏன் இவ்வளவு சம்பள விகிதத்தில் வித்தியாசம்? அதைக் கூட விடுங்கள், என்றாவது ஹீரோயினுக்கும் எனக்கும் ஒரே சம்பளம் கொடுங்கள் என சொல்லியிருக்கீங்களா? இதை ரஜினி செய்திருக்கிறாரா?


இவர்களின் உலகில் “நேர்மையின்” பொருள் தான் என்ன?

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...