Skip to main content

கடவுள் இருக்கிறார் என்பது எப்படி கடவுள் மறுப்புவாதமாகிறது?


 


நாகார்ஜுனரின் “மூலமத்யமகாகாரிகா” நூலின் முக்கியமான அவதானிப்புகளில் ஒன்று இறைநம்பிக்கையாளர்களின் (குறிப்பாக வைதீக பக்தர்களின்) கடவுள் குறித்த கருத்துரு எவ்வளவு அபத்தமானது என அவர் நிறுவுகிற இடம். குறிப்பாக முதல் அத்தியாயத்தில் வரும் இந்த ஆறாவது சுலோகத்தை பாருங்கள்.

“For neither an existent nor a nonexistent thing
Is a condition appropriate.
If a thing is nonexistent, how could it have a condition?
If a thing is already existent, what would a condition do?”

“இருக்கிற அல்லது இல்லாத ஒன்றுக்கு
ஒரு நிலை தேவையிருக்காது.
ஒன்று இல்லையெனில், அதற்கு நிலை இருக்காது அல்லவா?
அது ஏற்கனவே இருக்கிறதெனில், அதற்கு ஒரு நிலையின் அவசியம் என்ன?”


முந்தின சில சுலோகங்களில் நிலைகள் சாராம்சமானவையாய் இருக்கக் கூடும் எனும் வாதத்தை முறியடிக்க முயன்ற நாகார்ஜுனர் இப்போது மீண்டும் நிகழ்த்தப்படும் விசயங்களின் சாராம்சம் பற்றி பேச வருகிறார்.
இங்கு முக்கியமான குறிப்பு ‘இருப்பது’, ‘இல்லாதது’ என்பதற்கு நிஜத்தில் இருப்பது, இல்லாதது எனப் பொருள் இல்லை. சாராம்சமாக இருப்பது, சாராம்சமாக இல்லாதது என்றே புரிந்து கொள்ள வேண்டும் (சம்ஸ்கிருதத்தில் சத் - அசத் போன்ற சொற்கள் இதற்கு பயன்படுகின்றன.) இப்போது படித்தால் இந்த சுலோகம் உங்களுக்கு தெளிவாக விளங்கும்:
ஒன்று சாராம்சமானதாய் உள்ளதென்றாலோ இல்லையென்றாலோ அதற்கு ஒரு நிலை அவசியமில்லை. ஒன்று சாராம்சமாய் இல்லையென்றால் அதற்கு என ஒரு சாராம்சமான நிலை இருக்க முடியாது தானே என பின்னோக்கி வாதிட்டு நிறுவுகிறார் நாகார்ஜுனர். அதே போல ஒன்று சாராம்சமாய் இருக்கிறதென்றால், அது காலத்தைக் கடந்து இருப்பது, அதனாலே அது ஏற்கனவே இருக்கிறது எனப் பொருளாகி விடும். ஏற்கனவே இருக்கிற ஒன்றை மற்றொன்று நிகழ்த்த முடியாது, எனில் அதற்கு நிலையே இருக்க முடியாது தானே எனக் கேட்கிறார்.
இந்த வாதத்தை நாம் கடவுளைப் பெற்றது யார் எனும் கேள்வியின் பின்னணியில் இருந்து பார்த்தால் இன்னும் ஆழமானதாக ஆகும் - கடவுள் இருப்பதும் இல்லை, இல்லாமல் ஆவதும் இல்லை என (கீதையில் கண்ணன் சொல்வதைப் போல) கூறப்படுவது உண்மையெனில், கடவுளுக்கு நிலைகளே இருக்க முடியாது. எனில் கடவுள் சாத்தியமே இல்லை என ஆகிறார். நிலைகளால் மட்டுமே ஒன்று சார்புநிலையில் தோன்ற முடியும் என்பது நாகார்ஜுனரின் அடிப்படையான வாதம். நிலைகளே இல்லாத ஒன்று இருக்கவே முடியாது தானே? எனில் கடவுள் தோற்றமும் முடிவும் அற்றவர், சாராம்சமானவர் எனச் சொல்வது கடவுள் இல்லை என்பதற்கு சமானமானது என நாகார்ஜுனர் இங்கு நிறுவுகிறார்.
கடவுளுக்கு நிலையே இல்லை எனில் அவர் தன்னையே தோற்றுவித்தாரா? கடவுள் தன்னையே தோற்றுவித்தார் எனில் அவர் நிலையா அல்லது நிகழ்வா? அவர் நிலையும் நிகழ்வுமெனில் எவ்வளவு அபத்தம்? கடவுள் காலத்துக்கு அப்பாலானவர், காலதீதமானவர் எனில் காலத்தை யார் ஏற்படுத்தியது? (காலத்துக்கு அப்பால இருப்பதற்கும் அங்கு காலம் இருக்க வேண்டுமல்லவா?) கடவுளே காலத்துக்கு வெளியே நின்று காலத்தையும் உண்டாக்கினார் எனில் கடவுள் காலத்தின் நிலையாகிறார், எனில் அவர் சாராம்சமற்றவர் ஆகிறார். இப்படி இந்த சுலோகம் மற்றும் இதற்கு முந்தையவற்றின் வாதத்தை கடவுளின் இருப்பை அலச பயன்படுத்தும் போது பல ஓட்டைகள் புலப்படுகின்றன.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...