Skip to main content

அதிமுகவின் உண்மையான விரோதிகள்



அண்மையில் வெளியான ரவீந்திரன் துரைசாமியின் யுடியூப் பேட்டி ஒன்றை குதூகலமாக பார்த்துக் கொண்டிருந்தேன். திமுக கூட்டணி பலத்த வெற்றி பெறப் போகிறது எனும் தேர்தல் கணிப்புகளால் மனிதர் நொடிந்து போய் பரிதாபமாக இருந்தார். கேள்விகள் வேறு கூர்மையாக வந்தன. அதற்கு அவர் அளித்த வழக்கமான “இந்த சாதிக்கு இவ்வளவு சதவீதம் வாக்குவங்கி, அந்த சாதிக்கு...” ஜோசியக்கார பதில்களுக்கு நடுவே ‘ஏன் மோடியின் பெயரை, படத்தை பாஜக வேட்பாளர்கள் கூட தமிழக தேர்தல் பிரச்சாரத்தின் போது பயன்படுத்த தயங்குகிறார்கள்?’ எனும் அணுகுண்டு கேள்விக்கான தடுப்பாட்டம் தான் அட்டகாசம்:

 ‘மோடியின் பெயரை தமிழக பாஜக தலைவர்கள் கெடுத்து விட்டார்கள், அவருடைய நலத்திட்டங்களை கொண்டு சேர்க்கவில்லை’ என்று சொல்லி விட்டு, தேவேந்திர குல வேளாளர் பெயர் மாற்றத்தை ஒட்டி அச்சமூக மக்களிடையே பாஜகவுக்கு நல்ல பெயர் ஏற்பட்டது, அதை அறுவடை செய்யும் விதமாக அவர்களை அதிமுக வேட்பாளர்களாக நிறுத்தாமல் எடப்பாடி எப்படி தன் சமூக (கவுண்டர்) வேட்பாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கலாம், இத்தகைய செயல்களையே ‘பாஜக’ தலைமையிலான கூட்டணிக்கு பாதகமாகின்றன என்றார். இந்த social engineering அரசியல் எல்லாம் சரி தான். ஆனால் இதைப் பேசுவதே ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தை முன்னெடுக்க அல்ல, அவர்களுடைய வாக்குகளை இந்துத்துவாவுக்கு கொண்டு வரவே ரவீந்திரன் துரைசாமி போன்ற புரோக்கர்கள் துடிக்கிறார்கள் என்பது புரிகிறது. ஆனால் எனக்கு புரியாத ஒன்று அவர் எப்படி அதிமுக தலைமை பாஜகவின் சொற்படி தன் கட்சி வேட்பாளர்களை தீர்மானிக்க வேண்டும் எனக் கோருகிறார் என்பதே.

 இந்த கூட்டணியில் பாஜகவே மிக மிக சிறிய கட்சி. அதிமுகவாவது நாற்பது, ஐம்பது இடங்களை வெல்லலாம், ஆனால் இரண்டு இடங்களைக் கூட பெறுமா என தொங்கிக் கொண்டிருக்கிறது பாஜக. கூட்டணியில் பாமகவை விட பலவீனமான கட்சியே பாஜக. யாரை வேட்பாளராக அதிமுக தேர்ந்தெடுக்க வேண்டும் என ராமதாஸ் எடப்பாடிக்கு உத்தரவிட முடியுமா? அவரளவுக்கு கூட செல்வாக்கில்லாத பாஜக தலைவர்களால் அது செய்ய முடியும் என மேற்சொன்ன புரோக்கர் நிறுவ விரும்புகிறார். அப்படி அவர்களுடைய கட்டளைக்கு அதிமுக அடிபணியாததே அக்கட்சியின் வீழ்ச்சிக்கு காரணமாம். உங்கள் வீட்டில் உங்கள் பிள்ளைகளை எந்த பள்ளியில் சேர்க்க வேண்டும், நீங்களூம் மனைவியும் ஒரே படுக்கையில் படுக்கலாமா போன்ற விவகாரங்களில் உங்கள் பக்கத்து வீட்டுக்காரர் தலையிட்டு முடிவெடுத்தால் ஏற்றுக் கொள்வீர்களா? ரவீந்திரன் துரைசாமி போன்றவர்கள் எப்படி இவ்வளவு எகத்தாளமாக பேசுகிறார்கள் என்றால் இதுவே பாஜக தலைவர்களின் மனத்தில் உள்ள கருத்தும். அவர்களுடைய முகவரான இவர் அதை வெளிப்படையாக சொல்கிறார்.

 இதையெல்லாம் கேட்டுக் கொண்டு அதிமுகவின் அடிமட்ட தொண்டர்கள் எப்படி உயிருடன் வாழ்கிறார்கள் என தெரியவில்லை. ஜெயலலிதா சிறை சென்ற போது தீக்குளிக்க முயன்றதெல்லாம் அர்த்தமற்றது, நீங்கள் இப்படியான அத்துமீறல்களை எதிர்த்து ஒரு படத்தையாவது எரியுங்களேன், மானமுள்ளவர்கள் என ஒப்புக் கொள்கிறேன்.

இதிலிருந்து ஒன்று தெரிகிறது - அதிமுகவின் மிகப்பெரிய எதிரி திமுக அல்ல, பாஜக தான். 

சரி, இந்த புரோக்கர்கள் இப்படி கோருவதற்கு ஏதாவது ஒரு சிறிய நியாயமாவது உள்ளதா? ஆம், வடக்கிலும், வடகிழக்கிலும் அவர்கள் இந்த ‘ஆள்கடத்தல்’, ரிமோட் கண்டுரோல் அரசியலை கூட்டணிக்குள் செய்திருக்கிறார்கள். எந்த வாக்குவங்கியும் இல்லாத போதும் சிறிய எதிர்க்கட்சிகளை திரட்டி, நிறைய பணத்தை அள்ளி இறைத்து, ஆளுகிற மாநில கட்சிகளின் தலைவரக்ளை விலைக்கு வாங்கி, பெரிய மாநில கட்சிகளில் முழுமையாக பிரதிநுத்துவம் கிடைக்காத சாதிகளை மனத்தை கலைத்து அவர்களை தம் வசம் இழுத்து தேர்தலில் வென்று ஆட்சியை பிடித்திருக்கிறது. இந்த வியூகங்களை வகுத்து செயல்படுத்தும் போது மாநிலத்தில் எந்த செல்வாக்கும் இல்லாத போதே பாஜக வெளியில் இருந்து கூட்டணிக் கட்சிகளை கராறாக தம் சொற்படி நடக்க வைத்துள்ளது. மக்களையும் இதை வைத்து சுலபத்தில் ஏமாற்றி இருக்கிறது. ஆனால் தமிழத்தில் வலுவான மாநில எதிர்க்கட்சி இருக்கிறது. வாக்காளர்களும் வடக்கத்திய, வடமாநில தத்திகளை போல் அல்லாமல் அரசியல் உணர்வும், இன உணர்வும் கொண்டவர்களாக, ஆரியர்கள் மீது ஐயம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அதனாலே என்னதான் முயன்றாலும் அதட்டினாலே காலில் விழுகிற எடப்பாடியார் கூட சில நேரங்களில் பாஜகவை எதிர்த்து நின்று தன் விருப்பத்துக்கு முடிவுகள் எடுத்திருக்கிறார். ரவீந்திரன் துரைசாமிகளின் கவலையே தம்மால் முழுமையாக இன்னும் அதிமுகவை “ஆடுரா ராமா” என ஆட வைக்க முடியவில்லை என்பதே. என்னதான் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற நடிகர்களால் வளர்த்தெடுக்கப்பட்டவர்கள் என்றாலும் அதிமுகவினர் இங்கிருந்து போனவர்கள் தானே? ஒரு அளவுக்கு மேல் அவர்களுடைய முதுகும் வளையாது, மேலும் அவர்களுக்கு இங்கு ஒரு கட்டமைப்பு, தொண்டர் பலம் உள்ளது. இதையெல்லாம் பாஜகவால் நிர்மூலமாக்க முடியவில்லை. 


கொஞ்சமாவது மானமுள்ள அதிமுகவினர் முதலில் இந்த புரோக்கர்களை எதிர்க்க வேண்டும்! ஏனென்றால் உங்களை கேவலப்படுத்தியது அ.ராசா அல்ல, இவர்களைப் போன்ற இந்துத்துவ புரோக்கர்கள் தாம். அவர்கள் உங்களை ஆடு, மாடு போல கால்நடையாக பாவிக்கிறார்கள். இந்த ஆட்சி முடிந்த பிறகு இந்த புரோக்கர்களுக்கு ஊடகங்களில் தடைவிதிக்க வேண்டும். (ஏனென்றால் தொடர்ந்து சாதியை நியாயப்படுத்தி பேசி சனாதனத்தை வளர்க்க முயன்று கொண்டு வரும் இவர் இதற்கு சமூகநீதி என்று வேறு பெயரிட்டு நம்மை அசிங்கப்படுத்துகிறார்.) ரோட்டில் எங்கு பார்த்தாலும் அதிமுக தொண்டர்கள் இவர்களை கட்டி வைத்து அடிக்க வேண்டும்!   


பி.கு: இதில் உச்சபட்ச நகைச்சுவை ரவீந்திரன் துரைசாமி பிற பாஜக தலைவர்களை புரோக்கர்கள் என சாடுவது தான். தொழில் போட்டி போல இருக்கிறது!

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...