முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாலச்சந்தரின் காட்சிமொழி: கூடைப்பந்து












இயக்குநரின் பாலச்சந்தரின் படக் காட்சிகளில் உருவகங்கள் தடுக்கி விழ வைக்கும் அளவுக்கு இருக்கும் என்பது நாம் அறிந்ததே. அண்மையில் அவரது “வானமே எல்லை” படத்தை மீண்டும் பார்த்துக் கொண்டிருக்கையில் ஒரு சுவாரஸ்யமான விசயத்தை கவனித்தேன்: பாத்திரங்களின் முன்கதை கூறல், பிளேஷ்பேக், எண்ணவோட்டத்தை சுருக்கமாக கச்சிதமாக சொல்வதற்கு இந்த உருவகங்கள் - குறிப்பாக பின்னணியில் வரும் பொருட்களை foreground பண்ணுவது - அவருக்கு வெகுவாக உதவுகிறது. முன்னர் நான் இந்த பாணி ஒரு கவர்ச்சிக்காக, ஸ்டைலுக்காக அவர் பயன்படுத்துவது என தவறாக நினைத்திருந்தேன். வேறு இயக்குநர்களை விட அதிக பாத்திரங்களை ஒரு கதைக்குள் கொண்டு வருபவராக பாலச்சந்தர் இருக்கிறார், ஆனால் இப்பாத்திரங்களின் போக்கில் மையக் கதையை தொலைக்காமல் கராறாக, சிக்கனமாக அவர்களை இந்த காட்சிமொழியே அவருக்கு வெகுவாக உதவுகிறது. “வானமே எல்லையில்”ஊழல் பெருச்சாளியான நீதிபதி ஒருவர் தன் மகன் தனது சீர்கேட்டுக்கு எதிராக கத்தி கொந்தளித்துக் கொண்டிருப்பதை வீட்டில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார். வெளியே மழை கொட்டிக் கொண்டிருக்கிறார். மகன் முழுக்க நனைந்த நிலையில் இளமையின் ஆவேசத்துடன் அப்பாவின் நடவடிக்கையால் புண்பட்டு கத்துகிறான். அம்மா அவனை சமாதானப்படுத்துகிறாள். நீதிபதி ஒன்றையும் சொல்வதில்லை. அவர் பாட்டுக்கு பொறுமையாக கண்னாடியைப் பார்த்தபடி சவரம் செய்து கொண்டிருக்கிறார். இது போதும்! ஆளாளுக்கு முழநீளத்துக்கு வசனம் பேசி தம் தரத்தை நியாயப்படுத்த ஒரு காட்சியை அவர் வைக்கத் தேவையில்லை. 


இப்படியான ஏராளமான ‘பேசும்’ காட்சிகளை பாலச்சந்தர் உருவாக்கி இருக்கிறார். இக்காட்சிகளில் வசனங்களை எடுத்து விட்டு இசையால் நிரப்பினால் கூட பார்வையாளர்களுக்கு அந்த உணர்ச்சிகளும் பிரச்சனைகளும் புரிந்து போகும். ஆனால் பாலச்சந்தர் பஞ்ச் வசனங்களை வைப்பதாலே நமக்கு சற்று மிகையாகத் தெரிகிறது. 


மேற்சொன்னதை விட எனக்குப் பிடித்த மற்றொரு காட்சி “வானமே எல்லையில்” வருகிறது. படம் முழுக்க ஆனந்த பாபு, பப்லுவின் பாத்திரங்கள் மோதிக் கொண்டே இருக்கும், ஆனால் சீக்கிரமே சமாதானமாகி சேர்ந்து விடுவார்கள். இந்த குறிப்பிட்ட காட்சியில் தற்கொலைக்காக காத்திருப்பவர்கள் காதல் செய்யலாமா கூடாதா என்பது குறித்த சச்சரவு அவர்களுக்குள் தோன்றுகிறது. கவுதம் வந்து விலக்கி விட சமாதானமாகிறார்கள். இது தான் காட்சி. காட்சி துவங்கும் போது இருவருமாக கூடைப்பந்து ஆடுகிறார்கள். ஒருவர் பேச மற்றவர் பதில் சொல்ல பந்து கூடைக்குள் விழுந்தபடி இருக்கிறது. அடுத்து பந்தை தரையில் தட்டிக் கொண்டே கத்தி கூச்சல் போட ஆரம்பிக்கும் அவர்கள் கூடைப்பந்து கோர்ட்டுக்கு வெளியே போகிறார்கள். இக்காட்சி முழுக்க கூடைப்பந்து தான் foreground ஆகும் பொருள். கவுதம் உள்ளே வந்து அவர்களை சமாதானப்படுத்த அவர்கள் மீண்டும் கோர்ட்டுக்குள் வந்து பந்தை தரையில் தட்டிக் தட்டி விளையாட ஆரம்பிக்கிறார்கள். இருவருக்கும் இடையிலான உரையாடலில் வரும் தொந்தரவு, அதனால் ஒரு மோதல், அது மீண்டும் இயல்புநிலை அடைவதை எவ்வளவு அழகாக அவர் இந்த கூடைப்பந்தால் காட்டி விட்டார் பாருங்கள். வசனங்களை நீக்கி விட்டு பின்னணி இசையுடன் மட்டும் பார்த்தால் அக்காட்சி இன்னும் கூர்மையாக வலுவாக ஒரு உலக சினிமா காட்சியைப் போல் இருக்கும் என நினைக்கிறேன். ஆனால் வெகுஜன சினிமாவின் கட்டாயம் இயக்குனரை அங்கு அதிக வசனங்களை திணிக்க வைக்கிறது.  


தமிழில் இப்படி பின்னணியை, பொருட்களை கதைசொல்ல காட்சி பூர்வமாக பயன்படுத்திய மற்றொரு இயக்குநர் ஶ்ரீதர். அவருடைய திரையுலகும் உன்னிப்பாக கவனித்து அலசத்தக்கது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...