முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இளையராஜாவும் மற்றவர்களும்


இளையராஜாவோடு மற்றவர்களை ஒப்பிடுவதே சிரமமானது. ராஜா தனித்துவமான ஒரு மேதை. அவரது இசைப்படைப்புகள் ஒரு தனி உலகம். ஒரு படத்தில் ஆல்பமே அதன் கதை சொல்லும். வேறு இசையமைப்பாளர்களுக்கு இதை சொல்ல முடியாது. உதாரணமாக, "காசி" படத்தின் பாடல்களைக் கேட்கையில் மொத்த படமும் என் கண்முன் வந்ததைப் போலிருக்கும். சில பாடல்களில் காட்சியை, கதையின் அதன் இடத்தைப் பொறுத்து சப்தங்களைக் கொண்டு வருவார். பாத்திரங்களின் மனநிலை, காட்சியின் தொனி என ஒவ்வொன்றையும் கருதி பாடல்களை உருவாக்குவார். வரியின் ஸ்ருதி, ஏற்ற இறக்கம் கூட பாத்திரத்தின் அப்போதைய  உணர்வுநிலையை உணர்த்தும்படியாகவே இருக்கும். "மகராஜனோடு" பாடலைக் கேட்கும் போதெல்லாம் இருவரின் திருமணத்துக்கு வெளியே தோன்றும் உறவின் போது அவர்கள் வெளியே ஊர் சுற்றப் போகையில் கிடைக்கும் சுதந்திரம், பறந்தெழும் உணர்வு, அவர்கள்  சின்னச்சின்ன விளையாட்டுகளை தன் பாடலின் ஸ்வர அமைப்பில் கொண்டு வருவதைக் காணலாம். இப்படி எத்தனையோ பாடல்களைச் சொல்லலாம். ஒரு திரைக்கதையாளர் காட்சிகளின் கோர்வையை உருவாக்குவதைப் போன்றே ராஜாவும் தன் பாடல்களின் அமைப்பை ஒலிகளின் ஜாலங்களால்  தொகுக்கிறார்.
 பக்தி ரசத்துக்கான ராகத்தை சிருங்காரத்துக்கும், சிருங்காரத்துக்கான ராகத்தை தாய்ப்பாசத்துக்காகவும் நுட்பமாக மாற்றி பயன்படுத்துவார். தாலாட்டு மெட்டை துயர கீதமாக்குவார். எல்லாமே பொருத்தமாக வந்திருக்கும். சின்ன சின்ன இயற்கை அரவங்களைக் கூட அவை கிளர்த்தும் மன உணர்வென்ன என அறிந்து பயன்படுத்துவார். இதைப் பார்க்கும் போதே அவர் வெறுமனே பாட்டுக்கு இசையமைக்கிறவர் அல்ல ஒரு முழுமையான படைப்புக் கலைஞன் எனத் தெரியும். 
ராஜா இசையமைப்பாளர் மற்றுமல்ல, ஒரு தேர்ந்த கதைசொல்லியும் கூட. மற்ற இசையமைப்பாளர்களுக்கு இவ்வளவு பரந்துபட்ட திரைப்பார்வையோ கற்பனையோ இருப்பதில்ல. அதனாலே ராஜாவின் ஒவ்வொரு படத்தின் பாடல்களும் ஒப்பற்ற இசை ஆளுமை கொண்டிருக்கிறது எனத் தோன்றுகிறது! ஏனென்றால் அந்த ஆளுமைக்குள் கதையின் கருவும் ஒளிந்திருக்கிறது!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...