முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சாகித்ய அகாடெமி விருது - இரு வேண்டுகோள்கள்

இம்முறை யுவ புரஸ்கார் விருதைப் பெறும் ப காளிமுத்துவை வாழ்த்தி விட்டு இவ்விருது குறித்து இரு வேண்டுகோள்களையும் வைக்கிறேன்:
ஒன்று என் எழுத்துலக சகாக்களில் சிலருக்கு:

குறும்பட்டியலில் உள்ள சில நல்ல படைப்பாளிகளுக்கு விருது கிடைக்காதது காளிமுத்துவின் தவறல்லவே! நாம் அவரை புறவயமாக அவரது படைப்புகளை வைத்து தானே மதிப்பிட வேண்டும்? அதுதானே நியாயம்? நான் படித்த வரையில் விருதுபெறும் தகுதி அவருக்கு உண்டா எனில் உண்டு என்பேன். அதற்காக மற்றொருவருடன் ஒப்பிட்டு அவரளவுக்கு தகுதி உண்டா எனக் கேட்க அவசியம் இல்லை. குறும்பட்டியல் என்று ஒன்று உள்ளதாலே இது ஒரு போட்டி ஆகி விடாதே. மேலும் இலக்கியத்தில் என்ன மேல் கீழ் மதிப்பீடு?
ஆகையால் முன்பு மனுஷி பாரதிக்கு யுவ புரஸ்கார் கிடைத்த போது தம் நண்பர்களுக்கு கிடைக்கவில்லையே எனும் ஆற்றாமையில், எரிச்சலில் அவரை ஆளாளுக்கு கரித்துக் கொட்டி மறுத்ததைப் போல காளிமுத்துவுக்கும் செய்ய வேண்டாம். நாம் படைப்புகளை வைத்து பேசுவோம், படைப்பாளிகளை ஒப்பிட்டு வெறுப்பரசியல் பண்ண வேண்டாம். அதனால் நாம் மேலும் தனிமைப்படுவோம். ஒரு இளம்படைப்பாளியை சோர்வுறச் செய்வோம். அது தவறு!

இப்படி எதிர்மறையாக செயல்படாமல் ஜெயமோகன் செய்வதைப் போல நாம் முக்கியமெனக் கருதும் படைப்பாளிகளைப் பற்றி பல பக்கங்கள் எழுதிக் குவிப்போம். அவர்களுக்காக கருத்தரங்குகள், கூட்டங்கள், விவாதங்கள் நடத்தி ஒரு கலாச்சார அழுத்தத்தை ஏற்படுத்துவோம். அது அப்படைப்பாளிகளை உற்சாகப்படுத்தி மேலும் வெறித்தனமாக செயல்பட வைக்கும். மாறாக, எதிர்மறைக் கருத்துக்கள் நம்மை முடக்கிப் போடும்!

அடுத்து, சாகித்ய அகாடெமிக்கு:

 ஒவ்வொரு ஆண்டும் குறும்பட்டியலில் இடம்பெற்று மயிரிழையில் பரிசு வெல்லாதவர்கள் வயது வரம்பைக் கடந்த பின்னர் அவ்விருதைப் பெறும் வாய்ப்பை முழுமையாக இழக்கிறார்கள். அடுத்து பிரதான சாகித்ய அகாடெமி விருது தான் ஒரே வாய்ப்பு. ஆனால் அதற்காக அவர்கள் மேலும் 30 ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமே. இது கொடுமை இல்லையா?
இதை சரி செய்யும் பொருட்டு, இளம் படைப்பாளிகளில் ஒருவருக்கு மட்டும் கொடுக்காமல் புனைவு, கவிதை, அபுனைவு என வருடத்திற்கு மூன்று யுவ புரஸ்கார் விருதுகளை கொடுக்கலாமே? தேசிய திரைப்பட விருதுகள் இப்படி தனித்தனியாகத் தானே வழங்கப்படுகின்றன? இலக்கியத்தை ஒரு கூட்டு முயற்சியாகக் கொண்டால் அதில் கவிதை, கதை, நாவல், கட்டுரை என ஒவ்வொன்றும் நடிப்பு, பாடல், இயக்கம் போலத்தானே?
இவ்வாறு செய்தால் அடுத்த பத்தாண்டுகளில் 30 இளம் படைப்பாளிகள் யுவ புரஸ்கார் பெறுவார்கள். மேலும் பலர் ஊக்கம் பெற்று எழுத வருவார்கள். ஏற்கனவே எழுதுவொரும் நாம் வயது வரம்பு காரணமாக தவற விட்டோமே என ஆயுசுக்கும் வருந்தத் தேவையிருக்காதே. செலவென்று பார்த்தாலும் கூட ஒரு லட்ச. ஆகப் போகிறது. அது இன்றைய காலத்தில் ஒரு பெரிய செலவா? பின்னர் இந்நடைமுறையை பிரதான சாகித்ய அகாடெமி விருதுக்கும் பரிசீலித்துப் பார்க்கலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...