எல்லாவற்றிற்கும் ஒரு academic discipline இருப்பது நல்ல விசயம் என நம்புகிறேன்..
அபியின் இந்த முயற்சி வெற்றிபெற வாழ்த்துகிறேன்...
- எழுத்தாளர், பதிப்பாளர் ஜீவ கரிகாலன்
ஆர். அபிலாஷுடன் நாவல் எழுதக் கற்றுக் கொள்ளுங்கள்
உங்களில் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு நாவல் உள்ளது. அந்த நாவலை உங்களால் மட்டுமே எழுத முடியும். அதை நீங்கள் எழுதாத பட்சத்தில் அது இந்த உலகத்துக்கும், உங்கள் பண்பாட்டுக்கும் ஒரு நட்டமாக மாறும். அதை எழுத நீங்கள் ஒரு எழுத்தாளனாக இருக்க அவசியம் இல்லை என்றாலும் கூட அதை எழுதுவதற்கான ஒரு அடிப்படையான பயிற்சி, எழுத்து வடிவத்தின் நுட்பங்கள் பற்றின அறிவு, வாசிப்பு, நேர நிர்வாகத் திறன், ஒழுக்கம் வேண்டும். இவை அனைவரிடமும் இருப்பதில்லை. அதே நேரம், உங்களிடம் எழுத ஆர்வம் மட்டும் உண்டெனில், மேற்சொன்ன தகுதிகளை நீங்கள் வளர்த்துக் கொள்ளவும் உங்கள் பெயரை நீங்கள் வாழும் காலத்திலேயே மக்கள் நினைவில் ஆழமாக பதிக்கத் தக்க நாவலொன்றை உங்களால் எழுத நிச்சயமாக முடியும். அதற்கான பயிற்சி அளிப்பதும், அந்த இடத்தை நோக்கி உங்களை அழைத்து செல்வதுமே இந்த வகுப்பின் குறிக்கோள்.
நாவலே நம் காலத்தில் அதிகம் படிக்கப்படும் கதைவடிவம். சிறுகதைகளைக் கொண்டு உங்களால் உடனடி கவனத்தைப் பெற முடியும் என்றாலும் சிறுகதைத் தொகுப்புகளை விட நாவல்களே புத்தக சந்தையில் அதிகம் விற்பனை ஆகின்றன. பெரும் கவனத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்துகின்றன. அரிதாகவே ஒரு சிறுகதைத் தொகுதி பரவலான வாசகர்களைப் போய் அடைகிறது. அடுத்து, நீங்கள் எதிர்காலத்தில் திரைக்கதையாளராக விரும்புபவர் என்றாலும் ஒரு பெரிய கதைக்கட்டமைப்பு, பாத்திரங்களின் பிரஞ்சத்தை உருவாக்கவும், தொடர்ச்சியாக எழுதவும், நம்பகத்தன்மையை ஏற்படுத்தவும், புனைவின் விதிமுறைகளைத் தெரிந்து கொள்ளவும் முக்கியமான பயிற்சியாக நாவலை எழுதிப் பார்ப்பது இருக்கும் (இரண்டின் விதிமுறைகளும் அடிப்படையில் ஒன்றுதான்.) நீங்கள் சிறுகதைகள் எழுதி பழக்கம் கொண்டவர் என்றாலோ பேஸ்புக்கில் சுவைபட எழுதும் பதிவர் என்றாலோ, அடுத்த கட்டமாக நாவலாசிரியராக விரும்பும் பட்சத்தில் உங்களுக்கு அடிப்படையான பயிற்சியும் வழிகாட்டுதலும் தேவைப்படுகிறது. இந்த வகுப்பு உங்களுக்கானதே.
இத்தகைய வகுப்புகள் ஆங்கிலத்தில் கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக மேலைநாடுகளில் அதிகமாகவும் (MFA in Creative Writing), தற்போது இந்தியாவில் கல்லூரிகளிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடத்தப்படுகின்றன. தமிழில் கடந்த சில ஆண்டுகளாக் பயிற்சிப் பட்டறை வடிவிலும், காணொளி வழியாகவும் நடந்து வருகின்றன. ஆனால் கல்விப்புல முறைமையுடன் செறிவான பாடத்திட்டத்துடன் கிட்டத்தட்ட MFA போன்றே நடத்தப்படும் நாவல் எழுத்து வகுப்பாக “நாவல் எழுதக் கற்றுக்கொள்ளுங்கள்” இருக்கும்.
“நாவல் எழுதக் கற்றுக்கொள்ளுங்கள்” வகுப்பு பங்கேற்பாளர்களின் வசதிக்காக வார இறுதி நாட்களில் மாலை வேளையில் ஒரு மணி நேரம் எனும்படி மொத்தமாக இரண்டு மாதங்கள் (மொத்தமாக 16 மணிநேரங்கள்) இணையவழியில் (gmeet) நடத்தப்படும். இவ்வகுப்பு தொடர்ச்சியாக வருடம் தோறும் ஆறு முறைகள் நடத்தப்படும். முதல் வகுப்பு ஜூன் 10, 2023 முதல் ஆரம்பமாகும். சனி மற்றும் ஞாயிறு நாட்களில் மாலை 6-7 ஆன்லைன் வகுப்புகள் நடக்கும்.
இதில் எந்த வயதினர் வேண்டுமெனிலும் கலந்துகொள்ளலாம்.
- நா. சரவணன்
Comments