Skip to main content

மேலும் சில வாழ்த்துகள்

 எல்லாவற்றிற்கும் ஒரு academic discipline இருப்பது நல்ல விசயம் என நம்புகிறேன்..

அபியின் இந்த முயற்சி வெற்றிபெற வாழ்த்துகிறேன்...

- எழுத்தாளர், பதிப்பாளர் ஜீவ கரிகாலன்

ஆர். அபிலாஷுடன் நாவல் எழுதக் கற்றுக் கொள்ளுங்கள்
உங்களில் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு நாவல் உள்ளது. அந்த நாவலை உங்களால் மட்டுமே எழுத முடியும். அதை நீங்கள் எழுதாத பட்சத்தில் அது இந்த உலகத்துக்கும், உங்கள் பண்பாட்டுக்கும் ஒரு நட்டமாக மாறும். அதை எழுத நீங்கள் ஒரு எழுத்தாளனாக இருக்க அவசியம் இல்லை என்றாலும் கூட அதை எழுதுவதற்கான ஒரு அடிப்படையான பயிற்சி, எழுத்து வடிவத்தின் நுட்பங்கள் பற்றின அறிவு, வாசிப்பு, நேர நிர்வாகத் திறன், ஒழுக்கம் வேண்டும். இவை அனைவரிடமும் இருப்பதில்லை. அதே நேரம், உங்களிடம் எழுத ஆர்வம் மட்டும் உண்டெனில், மேற்சொன்ன தகுதிகளை நீங்கள் வளர்த்துக் கொள்ளவும் உங்கள் பெயரை நீங்கள் வாழும் காலத்திலேயே மக்கள் நினைவில் ஆழமாக பதிக்கத் தக்க நாவலொன்றை உங்களால் எழுத நிச்சயமாக முடியும். அதற்கான பயிற்சி அளிப்பதும், அந்த இடத்தை நோக்கி உங்களை அழைத்து செல்வதுமே இந்த வகுப்பின் குறிக்கோள்.
நாவலே நம் காலத்தில் அதிகம் படிக்கப்படும் கதைவடிவம். சிறுகதைகளைக் கொண்டு உங்களால் உடனடி கவனத்தைப் பெற முடியும் என்றாலும் சிறுகதைத் தொகுப்புகளை விட நாவல்களே புத்தக சந்தையில் அதிகம் விற்பனை ஆகின்றன. பெரும் கவனத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்துகின்றன. அரிதாகவே ஒரு சிறுகதைத் தொகுதி பரவலான வாசகர்களைப் போய் அடைகிறது. அடுத்து, நீங்கள் எதிர்காலத்தில் திரைக்கதையாளராக விரும்புபவர் என்றாலும் ஒரு பெரிய கதைக்கட்டமைப்பு, பாத்திரங்களின் பிரஞ்சத்தை உருவாக்கவும், தொடர்ச்சியாக எழுதவும், நம்பகத்தன்மையை ஏற்படுத்தவும், புனைவின் விதிமுறைகளைத் தெரிந்து கொள்ளவும் முக்கியமான பயிற்சியாக நாவலை எழுதிப் பார்ப்பது இருக்கும் (இரண்டின் விதிமுறைகளும் அடிப்படையில் ஒன்றுதான்.) நீங்கள் சிறுகதைகள் எழுதி பழக்கம் கொண்டவர் என்றாலோ பேஸ்புக்கில் சுவைபட எழுதும் பதிவர் என்றாலோ, அடுத்த கட்டமாக நாவலாசிரியராக விரும்பும் பட்சத்தில் உங்களுக்கு அடிப்படையான பயிற்சியும் வழிகாட்டுதலும் தேவைப்படுகிறது. இந்த வகுப்பு உங்களுக்கானதே.
இத்தகைய வகுப்புகள் ஆங்கிலத்தில் கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக மேலைநாடுகளில் அதிகமாகவும் (MFA in Creative Writing), தற்போது இந்தியாவில் கல்லூரிகளிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடத்தப்படுகின்றன. தமிழில் கடந்த சில ஆண்டுகளாக் பயிற்சிப் பட்டறை வடிவிலும், காணொளி வழியாகவும் நடந்து வருகின்றன. ஆனால் கல்விப்புல முறைமையுடன் செறிவான பாடத்திட்டத்துடன் கிட்டத்தட்ட MFA போன்றே நடத்தப்படும் நாவல் எழுத்து வகுப்பாக “நாவல் எழுதக் கற்றுக்கொள்ளுங்கள்” இருக்கும்.
“நாவல் எழுதக் கற்றுக்கொள்ளுங்கள்” வகுப்பு பங்கேற்பாளர்களின் வசதிக்காக வார இறுதி நாட்களில் மாலை வேளையில் ஒரு மணி நேரம் எனும்படி மொத்தமாக இரண்டு மாதங்கள் (மொத்தமாக 16 மணிநேரங்கள்) இணையவழியில் (gmeet) நடத்தப்படும். இவ்வகுப்பு தொடர்ச்சியாக வருடம் தோறும் ஆறு முறைகள் நடத்தப்படும். முதல் வகுப்பு ஜூன் 10, 2023 முதல் ஆரம்பமாகும். சனி மற்றும் ஞாயிறு நாட்களில் மாலை 6-7 ஆன்லைன் வகுப்புகள் நடக்கும்.
இதில் எந்த வயதினர் வேண்டுமெனிலும் கலந்துகொள்ளலாம்.

- நா. சரவணன்




Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...