முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ரோஹித்தும் கம்பீரும்

ரோஹித் ஷர்மா திரும்ப வந்ததுமே அனைத்து டெஸ்ட் போட்டிகளையும் நாம் இழப்போம் என நான் எழுதியதுதான் இப்போது நடந்துகொண்டிருக்கிறது - ஏனென்றால் அவர் வந்ததும் இளைஞர்களைத் தூக்கிவிட்டு முதியவர்களுக்குத் திரும்பவும் வாய்ப்பு அளிப்பது, மோசமான களத்தடுப்பு, பந்துவீச்சாளர்களை எதிர்மறையாக வழிநடத்துவது என மீண்டும் மோசமான ஆட்டத்தைக் கொண்டு வந்தார். மேலும் அவருக்கு எதிர்கால இலக்கே இல்லை. நிரூபிக்க ஒன்றுமேயில்லாத அவரைப் போல ஒருவரைத் தலைவராக நீடிக்கவிடுவதே அபத்தமென நினைக்கிறேன். கோலிக்கும் இது பொருந்தும்.

நாம் கவனிக்காமல் விடும் இன்னொரு பிரச்சினை உண்டு - அது ரோஹித்துக்கும் கம்பீருக்கும் மனச்சேர்க்கை, பொருத்தப்பாடு இல்லை. இலங்கையில் சூர்யகுமார் யாதவின் தலைமையில் இந்திய அணி இலங்கையை டி20 தொடரில் ஓடவிட்டது. ஆனால் ரோஹித் தூக்கக்கலக்கத்துடன் ஒருநாள் அணிக்கு வந்ததும் ஆட்டம் மிகமிக மோசமாகியது. அடுத்து இந்தியாவில் நடந்த டெஸ்ட் தொடர்களிலும் ரோஹித் தட்டுத்தடுமாறிக் கொண்டிருந்தார். நியுசிலாந்த் தொடரில் மிக மட்டமாக தலைமை செய்தும், மட்டையாடியும் தொடரை இழக்கக் காரணமானார். அப்போதே அவரையும் கோலியையும் ஓய்வுபெறும்படி வாரியம் கேட்டிருக்க வேண்டும். மிகமிக சொதப்பலாக முடிவெடுத்து அவர்களை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பினார்கள். கம்பீருக்கு ஒன்று ரோஹித்தின் தலைமையுடன் உடன்பாடில்லை அல்லது கம்பீரின் பயிற்சித் தத்துவத்துடன் ரோஹித்தால் உடன்பட முடியவில்லை. இதுதான் ரோஹித்தின் பெரும் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம் என நினைக்கிறேன். ஏனெனில் ரோஹித் தலைமையில் இல்லாதபோது கம்பீரால் அணியை சிறப்பாக வழிநடத்தவும் வெற்றிகளைக் கொய்யவும் முடிகிறது.
இந்த டெஸ்ட் போட்டியை இழந்தபிறகேனும் ரோஹித் தன் தலைமையை விட்டுக்கொடுத்து, அவரும் கோலியும் ஓய்வை அறிவித்தால் இந்த அணியில் மீண்டும் இளைஞர்களைக் கொண்டு சிறப்பாக ஆடமுடியும் என நினைக்கிறேன்.
இதற்குப் பதிலாக மே.இ தீவுகள், வங்கதேசம் போன்ற அணிகளுடன் ஒரு தொடரை அறிவித்து தட்டையான ஆடுதளங்களைக் கொடுத்து ரோஹித், கோலிக்கு இறுதித்தொடர்களைக் கொடுத்திருக்கலாம். அதற்கு ஆஸ்திரேலியத் தொடரை இந்திய கிரிக்கெட் வாரியம் தியாகம் பண்ணியிருக்க வேண்டியதில்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...