Skip to main content

சமவயதுத் திருமணங்களின் சிக்கல்



ரிச்சர்ட் ரீவ்ஸ் தனது நூலில் ஆண்களுக்கும் பெண்களுக்குமான மூளை வளர்ச்சி சார்ந்த வித்தியாசத்தைப் பற்றிப் பேசும்போது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த, கவனம் செலுத்த உதவும்பல்வேறு தேவைகளை ஒரேசமயத்தில் கருதி சமநிலையுடன் முடிவெடுத்து நடக்கும் பண்பைத் தீர்மானிக்கும் மூளையின் முன்மடல் பகுதி பெண்களுக்கு ஆண்களை விட 1-2 ஆண்டுகளுக்கு முன்பே வளர்ந்து முதிர்ந்து அதிக ஆற்றல் பெற்றதாக மாறுகிறது என்று குறிப்பிடுகிறார். பெண்கள் ஆண்களை விட சீக்கிரமாகவே பூப்பெய்துவதால் ஹார்மோன்கள் சீக்கிரமாகவே வேலைசெய்வதால் அவர்களுக்கு கிடைக்கும் அனுகூலம் இது. இதன் பொருள் 20 வயது ஆண் தன் மனதளவில் 18 வயதுக்குரியவன். ஆனால் 20 வயதுப் பெண்ணோ 22 வயதினளுக்கு சமமானவள். ஒரே வயதைச் சேர்ந்த இளைஞனும் இளம்பெண்ணும் மணக்கும்போது மனதளவில் அக்கா தம்பியை மணப்பதைப் போலத்தான் அது இருக்கும். இது அப்பெண்ணால் அந்தரங்கமான விசயங்களில், உணர்ச்சிக் குவிப்பிலும் கட்டுப்பாட்டிலும் அந்த ஆணை விஞ்சிவிடவும் வழிநடத்தவும் செய்யும். உறவுக்குள் சமநிலையைக் குலைக்கும்.

சமவயது ஆணும் பெண்ணும் மணமுடிக்கும்போது உணர்வளவில் அவர்களிடையே ஏற்படும் மோதல்களையும் சமநிலையின்மையையும் அதிகமாக இன்று காண்கிறோம். நான் விருந்தினராகப் பங்கேற்ற ஒருநீயா நானாவிவாதத்தில் தமது கணவர்கள் முதிர்ச்சியற்றவர்களாக, குழந்தைகளைப் போல நடந்துகொள்வதாக பெண்கள் பரவலாக புகார் தெரிவித்தனர். அது உண்மையாகவும் தெரிந்தது. பெரும்பாலானவர்கள் சமயவயதினராக இருந்ததும் இதற்கான காரணங்களில் ஒன்று (இன்னொரு காரணம் தாழ்வுணர்வு காரணமாக இன்று ஆண்கள் தம்மைக் குழந்தைகளாக பாவிக்கும் பண்பாட்டுச் சூழல் உருவாகியுள்ளது). தன்னை விட பக்குவம், உணர்ச்சிக்கட்டுப்பாடு, கவனம் குறைவாக உள்ளவரை மணக்கும் பெண் அவரை சில விசயங்களில் மிகவும் பலவீனமானவராக உணர்ந்து தலைமைப் பண்பை எடுக்கும்போது அது சார்புநிலை கொண்ட உறவாகிறது. ஆணுடைய தாழ்வுணர்வு இன்னும் அதிகரிக்கிறது. அவன் இதை என் மனைவி எனக்குத் தாய் மாதிரி எனச் சொல்லி போலிச் சமாதானம் கொள்கிறான். இதுவே இப்படியென்றால் 25 வயதுப் பெண்ணை 22 வயது ஆண் காதலிக்கும்போது அது அவன் 27 வயதினளைக் காதலிப்பதற்கோ அவள் 20 வயதினனைக் காதலிப்பதற்கோ சமம். இன்னும் அதிகச் சமநிலையற்ற உறவாக அது மலரும்


இதை அனுபவரீதியாக உணர்ந்த நமது முன்னோர் சில ஆண்டுகளாவது வயதில் மூத்த ஆணைப் பெண்ணுக்கு மணமுடித்து வைத்தனர். நிலவுடைமைச் சமூகத்தில் ஆணுக்குள்ள நிலம்சார்ந்த பொறுப்புகளும், தங்கையின் மணத்துக்கான அசையும் சொத்துக்களைச் சம்பாதித்துக் கொடுக்கும் ஆவலும் அவர்களை இருபதுகளின் பிற்பகுதியிலோ முப்பதுகளில் மணம்புரிய வைத்திருக்கலாம். ஆனால் வயது வித்தியாசம் எந்த வயதில் திருமணமானாலும் சமநிலையைப் பேண உதவியது. ஆனால் நிலவுடைமைச் சமூகத்திலிருந்து விலகி நவமுதலீட்டிய சமூகத்திற்குள் பிரவேசித்துள்ள நாம் இந்த நுணுக்கத்தைப் புரிந்துகொள்ளத் தவறிவிட்டோம். பெண்ணியம் தொடர்ந்து ஆணைபயங்கரமானவன்’, ‘ஆபத்தானவன்’, ‘டாக்ஸிக்கானவன்எனப் பொதுமைப்படுத்துவதால் ஆண் இன்று தன் பங்குக்கு மனதளவில் தன் வயதைக் குறைத்துக் காட்டும்படியான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறான். ஆக 18 வயது ஆண் மூளைவளர்ச்சியில் 16 வயதினன் என்றால் அவன் கூடுதலாக தன் நடவடிக்கைகளின் வழியாக இன்னும் சில ஆண்டுகளைக் குறைத்து 14 வயது சிறுவனாகத் தன்னைப் பாவிக்கிறான். இது சமூகத்தில் அங்கீகாரம் பெற்றுத்தரும் என அவன் வியர்த்தமாக நம்புகிறான். சொல்லப்போனால் இதனால் சமூகத்தில் அவனுக்கு இடர்களும் அவப்பெயருமே அதிகமாகிறது. அடுத்து, வயது பொருட்டேயில்லை எனும் அறிவியலுக்குப் புறம்பான சிந்தனை இன்று அதிகரித்து வருகிறது. ஆம் எந்த வயது வித்தியாசத்துடனும் எதிர்பாலினத்தவர் இருவர் சேர்ந்து வெற்றிகரமாக வாழலாம், ஆனால் அதற்குள் ஒருவர் தொடர்ந்து தாழ்ந்து சென்றபடியே இருக்கவேண்டும். “டாக்ஸிக் ஆண்எனும் கருத்தாக்கம் ஏற்படுத்தும் விஷமத்தனமான எதிர்விளைவுதான் இது. எல்லாரும் டாக்ஸிக்கானவர்கள் அல்ல, யாரையும் பொதுமைப்படுத்தாதீர்கள் என நாம் வலியுறுத்தவேண்டிய காலம் வந்துவிட்டது.


இது கூடாதா, ஏன் முடியாது, சச்சின் பண்ணிக்கலையா என்பதான விவாதங்களை விட நாம் சமத்துவமான உறவை விரும்புகிறோமா எனும் கேள்வியே முக்கியம். ஆம், சிலநேரங்களில் காதலுக்காக நாம் சமத்துவத்தையும் சிறிது விட்டுக்கொடுக்கத் தலைப்படுவோம். அது நமது விருப்பம். எதைச் செய்கிறோம் எனும் தெளிவு இருந்தால் சிக்கல் குறைவாக இருக்கும்.


உசாத்துணை


Laureys, Felien et al. “The Effects of Age, Biological Maturation and Sex on the Development of Executive Functions in Adolescents.” Frontiers in physiology vol. 12 703312. 10 Sep. 2021, doi:10.3389/fphys.2021.703312


Koolschijn, P. Cédric M. P., and Eveline A. Crone. "Sex Differences and Structural Brain Maturation from Childhood to Early Adulthood." Developmental Cognitive Neuroscience, vol. 5, July 2013, pp. 106-118.


Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

போலி அறச்சீற்றம்

  ஜெயமோகனின் அறச்சீற்றப் பதிவில் ஒரு அரசியல் உள்ளோட்டத்தைப் பலரும் கவனிக்கவில்லை. வைரமுத்து துணை-ஜனாதிபதியின் செல்வாக்கில் விருதை வென்றார் என ஒரு கூற்று. அதேசமயம் இதற்கு முன்பு வைரமுத்து இவ்விருதுக்காக முயன்றபோது தான் கடுமையாக எதிர்த்ததாகவும், விருது அவருக்கு நழுவிப் போனதாகவும் சொல்கிறார். இதன் பொருள் ஜெயமோகன் இங்கு பேசுவது வைரமுத்துப் பிரச்சினை அல்ல உட்கட்சி மோதல் பிரச்சினையைத் தான் என்பது. அதாவது. ஆர்.எஸ்.எஸ், பாஜகவுக்குள் இருக்கும் உட்குழுக்களில் எதையோ ஜெயமோகனைப் போன்றவர்கள் பிடித்து செல்வாக்கு செலுத்த முயல வைரமுத்து இவர்களையும் மீறி ராதாகிருஷ்ணனைப் பிடித்து காரியம் சாதித்துவிட்டார் என்று ஜெயமோகன் எண்ணுகிறார். இது அவரது குறிப்புக்குள் ஓடுகிற உள்ளோட்டம். வெளியே வைரமுத்து இலக்கிய மதிப்பற்ற சகதி, அவருக்கெல்லாம் தகுதியில்லை, அவருக்கு எதிராக நாம் திரண்டு வேலை செய்ய வேண்டும் எனும் உணர்ச்சிகரமான அறைகூவல் வருகிறது. நாம் இந்த அறைகூவலையே அதிகம் கவனிக்கிறோம். ஜெயமோகன் வேறு யாருக்கோ ஏதோ ஒரு செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறார். அவர் தன்னை செல்வாக்கு மிக்க ஒரு அதிகார முகவராகக் காட்டிக் கொள்ள ...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...