இன்று காலையில் நான் மிகவும் மதிக்கும் பேராசிரியரும் சிந்தனையாளருமான கிருஷ்ணசாமி ஐயா அழைத்து "எல்லாமே பொய்யென்று சொல்வாயா?" கட்டுரையை மிகவும் பாராட்டினார். கடந்த சில நாட்களாகவே வேலை நெருக்கடி குறித்த கவலைகளில் இருந்த எனக்கு மிகவும் உற்சாகம் அளித்த உரையாடலாக அது அமைந்தது. அடுத்து இந்த வாசகர் கடிதத்தைப் பார்க்கிறேன். நெஞ்சார்ந்த நன்றிகள்!
புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

Comments