முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்துத்துவர்கள் யாரை நிஜத்தில் வெறுக்கிறார்கள்?

இந்துத்துவாவின் விரோதிகள் உண்மையில் சிறுபான்மையினர் அல்லர். இந்துக்கள்தாம். தம்மை ஏற்காத இந்துக்களை மாற்றவே இந்துத்துவர்கள் ஒரு நூற்றாண்டுக்கு மேலாகப் போராடி வந்துள்ளனர் என்பதை வரலாற்றைப் பார்த்தால் புரியும். தமிழ்நாட்டில் பாஜக ஏன் கிறித்துவ, இஸ்லாமிய குருமார்களை, சின்னங்களைத் தாக்காமல் பெரியாரைத் தாக்குகிறது? அவர்கள் ஏன் இஸ்லாமிய தலைவர்களைக் கொல்லாமல் காந்தியைக் கொன்றார்கள்? இவைதான் முக்கியமான கேள்விகள். மோடியின் இதுவரையிலான பாராளுமன்ற உரைகளை, மேடைப் பேச்சுகளை கவனித்தால் இது புரியும். அவர்கள் மசூதியை இடித்தது இஸ்லாமியர்களைத் தாக்கவோ காயப்படுத்தவோ அல்ல. இந்துக்களை அச்சுறுத்தி தம் வசப்படுத்தவே. அவர்கள் கண்முன் இருந்த பெருந்திரளான இந்துத்துவா வழிப்படாத இந்துக்களை 'நெறிப்படுத்தவே'. அவர்கள் இதுவரையிலும் அர்பன் நக்சல்கள் என்று சிறையில் அடைத்தவர்கள் அதிகமும் இந்துக்களே. தொடர்ந்து அவர்கள் அதிகம் கவலைப்படுவதும் நிறுவனமயப்படாத இந்துக்களைக் குறித்தே.

இந்து மதத்தை கிறிஸ்துவமாகவும் இஸ்லாமாகவும் மாற்றுவதே இந்துத்துவத்தின் செயல்திட்டம். மற்றமையாக்குவது அல்ல என்பது என் பார்வை. அதாவது இந்து மதத்தை இந்துக்களிடம் இருந்தே அந்நியப்படுத்துவது. மதத்தை நிறுவனமாக்குவது - ஒற்றை நம்பிக்கை, ஒற்றைக் கடவுள், ஒற்றை வேதம்.

முருகன் திமுக கையில் தமிழ் தெய்வமாகவும், மக்களின் தெய்வமாகவும், உணர்வுரீதியாக அணுகக் கூடிய தெய்வமாகவும், இந்துத்துவர்களின் கையில் பெருமத உபதெய்வமாகவும் இருப்பான். திமுகவின் கையில் முருகன் தெய்வம், பாஜகவின் கையில் முருகன் மோடியின், அண்ணாமலையின் மற்றொரு அவதாரம். ரஜினி தொடர்ந்து தன்னை சிவனின், பாபாவின் அவதாரமாக காட்ட முயன்றதைப் போல தீவிர பக்தர்களான வேறு முன்னணி நடிகர்கள் செய்ததில்லை. தெய்வத்தை கருவியாக்குவது பக்தியல்ல. அது அரசியல். அதனாலே ரஜினியால் பாஜகவுடன் இசைவாகப் போக முடிந்தது. 

இந்த இரண்டு போக்குகளுக்குமான வித்தியாசத்தை உணர்ந்திருப்பது அவசியம்! 

மீண்டும் சொல்கிறேன், பாஜக ஒரு இந்து விரோதக் கட்சி. திமுகவையும் காங்கிரஸையும் இடதுசாரிகளையும் விட இந்துமதத்தை உள்ளிருந்து செல்லரித்து உருமாற்றுவது இந்துத்துவர்களே. வரலாறு கருணை காட்டாவிடில் அவர்கள் இந்துமத்தை கிறிஸ்துவம், இஸ்லாம் போன்ற முறைப்படுத்தப்பட்ட மதமாக்கி விடுவார்கள். அதாவது இம்மதங்களின் நகலாக இந்துமதத்தை மாற்றுவார்கள். அது கொடூரமாக இருக்கும்!

இந்துத்துவத்தால் இஸ்லாத்துக்கோ கிறிஸ்துக்கோ உண்மையில் ஆபத்து குறைவே!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...