முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்துத்துவர்கள் யாரை நிஜத்தில் வெறுக்கிறார்கள்?

இந்துத்துவாவின் விரோதிகள் உண்மையில் சிறுபான்மையினர் அல்லர். இந்துக்கள்தாம். தம்மை ஏற்காத இந்துக்களை மாற்றவே இந்துத்துவர்கள் ஒரு நூற்றாண்டுக்கு மேலாகப் போராடி வந்துள்ளனர் என்பதை வரலாற்றைப் பார்த்தால் புரியும். தமிழ்நாட்டில் பாஜக ஏன் கிறித்துவ, இஸ்லாமிய குருமார்களை, சின்னங்களைத் தாக்காமல் பெரியாரைத் தாக்குகிறது? அவர்கள் ஏன் இஸ்லாமிய தலைவர்களைக் கொல்லாமல் காந்தியைக் கொன்றார்கள்? இவைதான் முக்கியமான கேள்விகள். மோடியின் இதுவரையிலான பாராளுமன்ற உரைகளை, மேடைப் பேச்சுகளை கவனித்தால் இது புரியும். அவர்கள் மசூதியை இடித்தது இஸ்லாமியர்களைத் தாக்கவோ காயப்படுத்தவோ அல்ல. இந்துக்களை அச்சுறுத்தி தம் வசப்படுத்தவே. அவர்கள் கண்முன் இருந்த பெருந்திரளான இந்துத்துவா வழிப்படாத இந்துக்களை 'நெறிப்படுத்தவே'. அவர்கள் இதுவரையிலும் அர்பன் நக்சல்கள் என்று சிறையில் அடைத்தவர்கள் அதிகமும் இந்துக்களே. தொடர்ந்து அவர்கள் அதிகம் கவலைப்படுவதும் நிறுவனமயப்படாத இந்துக்களைக் குறித்தே.

இந்து மதத்தை கிறிஸ்துவமாகவும் இஸ்லாமாகவும் மாற்றுவதே இந்துத்துவத்தின் செயல்திட்டம். மற்றமையாக்குவது அல்ல என்பது என் பார்வை. அதாவது இந்து மதத்தை இந்துக்களிடம் இருந்தே அந்நியப்படுத்துவது. மதத்தை நிறுவனமாக்குவது - ஒற்றை நம்பிக்கை, ஒற்றைக் கடவுள், ஒற்றை வேதம்.

முருகன் திமுக கையில் தமிழ் தெய்வமாகவும், மக்களின் தெய்வமாகவும், உணர்வுரீதியாக அணுகக் கூடிய தெய்வமாகவும், இந்துத்துவர்களின் கையில் பெருமத உபதெய்வமாகவும் இருப்பான். திமுகவின் கையில் முருகன் தெய்வம், பாஜகவின் கையில் முருகன் மோடியின், அண்ணாமலையின் மற்றொரு அவதாரம். ரஜினி தொடர்ந்து தன்னை சிவனின், பாபாவின் அவதாரமாக காட்ட முயன்றதைப் போல தீவிர பக்தர்களான வேறு முன்னணி நடிகர்கள் செய்ததில்லை. தெய்வத்தை கருவியாக்குவது பக்தியல்ல. அது அரசியல். அதனாலே ரஜினியால் பாஜகவுடன் இசைவாகப் போக முடிந்தது. 

இந்த இரண்டு போக்குகளுக்குமான வித்தியாசத்தை உணர்ந்திருப்பது அவசியம்! 

மீண்டும் சொல்கிறேன், பாஜக ஒரு இந்து விரோதக் கட்சி. திமுகவையும் காங்கிரஸையும் இடதுசாரிகளையும் விட இந்துமதத்தை உள்ளிருந்து செல்லரித்து உருமாற்றுவது இந்துத்துவர்களே. வரலாறு கருணை காட்டாவிடில் அவர்கள் இந்துமத்தை கிறிஸ்துவம், இஸ்லாம் போன்ற முறைப்படுத்தப்பட்ட மதமாக்கி விடுவார்கள். அதாவது இம்மதங்களின் நகலாக இந்துமதத்தை மாற்றுவார்கள். அது கொடூரமாக இருக்கும்!

இந்துத்துவத்தால் இஸ்லாத்துக்கோ கிறிஸ்துக்கோ உண்மையில் ஆபத்து குறைவே!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...