முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பெரும்பான்மையினர் தனிமைப்படும் சூழல்


செய்திச் சேனல்களின் அரசியல் பிரச்சார சார்பைப் பற்றி வாசு முருகவேலின் நிலைத்தகவலைப் பார்த்தபோது எனக்கு 2016 வரை இந்நிலை இல்லை என்பது நினைவுக்கு வந்தது - பாஜக மும்முரமாக களத்துக்கு வந்ததும், திமுகவின் கசந்த மாநிலத் தேர்தல் பிரச்சார காலமும் நிலைமையை முழுக்க மாற்றியது. பாஜகவுக்கு நிறைய மறைமுக ஆதரவாளர்களும், திமுகவுக்கு கட்சி உறுப்பினர் அல்லாத நேரடிப் பேச்சாளர்களும் தோன்றினார்கள். ஆட்சி அமைந்ததும் அவர்களுக்கு பொறுப்புகள், விருதுகள் வழங்கப்பட்டன. இதே கட்டத்தில்தான் செய்திச் சேனல்களும் பொதுவான சிந்தனையாளர்களைத் தம் விவாத மேடைகளுக்கு அழைப்பதை நிறுத்தினர். ஆங்கில ஊடகங்களிலும் நிலை இதுதான். நீங்கள் கடந்த அமெரிக்க தேர்தலின்போதான சன் டிவி  விவாத மேடை நிகழ்வைப் பார்த்தால்கூட அதிலும் டெமொக்ரெட்டுகள், ரிபப்ளிகன் ஆதரவாளர்களே பேசினார்கள். இது ஒரு பரவலான போக்கு. இது உள்ளிருந்து அரசியல் விவாதத்தை அழித்துவிட்டது - பொதுமக்களும் இதைப் பார்க்கையில் தாம் விவாதங்களில் பங்குபெற ஒரு தரப்பை எடுத்தாக வேண்டும் எனும் கட்டாயத்தை ஏற்படுத்துகிறது, அப்படி எந்த தரப்புடனும் உடன்படாதவர்கள் மனதளவில் வெளியேற்றப்படுகிறார்கள். இன்று யுடியூபில் ஒரு சாதாரண சமையல் நிகழ்ச்சிக்கு பத்து லட்சம் பார்வையாளர்கள் கிடைக்க டிவி விவாத நிமழ்ச்சிகள் 50,000-80,000 எனத் திணறுவது இதனால்தான். 

ஆனால் கட்சி சார்பு கொண்ட ஒரு தரப்பு மக்கள் இந்த பிரச்சார விவாத நிகழ்வுகள் நிச்சயமாகத் தாக்கம் செலுத்துகின்றன. சமூக வலைதளங்கள் வழியாக விஜய்யும் சீமானும் இம்மக்களைத்தாம் இலக்காக்குகிறார்கள். இச்சூழலை வைத்தே சவுக்கு, அவரது சகாக்கள், இன்னொரு பக்கம் திமுக சார்பாக செந்தில் வேல், அவரை ஒத்தவர்கள் என கொழுத்து விட்டார்கள். அவர்கள் ஒருவித சாம்ராஜ்ஜியம் - பிரச்சாரம், சமரசம், பிம்ப உருவாக்கம், உடைப்பு எல்லாமே இங்கு கட்டணத்துக்கு செய்து தரப்படும் எனும் அட்டை தொங்குகிறது. இவர்களைக் கொண்டு ஒருவித அரசியல் கதையாடல் இங்கு கட்டமைக்கப்படுகிறது. சமூக வலைதளங்களில் தமக்கான இடத்தை, சமூக பிம்பத்தை உருவாக்கவும் உதவுகிறது. இக்கதையாடல் ஏதோ ஒருவிதமாக சமூகத்தை ஊடுருவுகிறது என்பதை மாணவர்களின் சம்பாஷணைகளில் கவனிக்கிறேன். இப்படி எல்லாருக்கும் ஏதோ ஒரு சின்ன கொடுக்கல் வாங்கல் சாத்தியமாகிறது. ஆனால் பெரும்பான்மை ஜனங்கள் இதில் இருந்து அந்நியமாகிறார்கள் - அவர்கள் தேர்தலின்போது எப்படி முடிவெடுப்பார்கள் என்பது எப்போதுமே மர்மம்தான்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...