2026ஆம் ஆண்டு கிண்டிலில் வெளியாகும் என் இரு சிறுகதைத் தொகுப்புகளில் முதலாவது - "வெளிச்சம்". இவை புதிய கதைகள் அல்ல. ஏற்கனவே வெளியானவற்றின் திருத்தப்பட்ட கிண்டில் பதிப்பு. ஆர்வமுள்ளோர் வாங்கிப் படித்து விட்டு கருத்துச் சொல்லவும்.
https://www.amazon.in/dp/B0GDG66G3D
புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share
Comments