முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆச்சரியப்படுத்தும் அஸோஸியேட் அணிகள்

 தற்போது நடந்துவரும் (ஆண்கள்) டி20 உலகக்கோப்பையில் அஸோஸியேட் அணிகள் பெரிய ஓட்டலுக்கு வெளியே பெரிய கூட்டத்துடன் ஆரவாரமாக நடக்கும் நடைபாதைக் கடைகளைப் போல கலக்குகின்றன. இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா நன்றாகவே ஆடியது, இன்றைய போட்டியில் நமீபியாவும் ஆச்சரியப்படுத்துகிறது. இந்த அணிகள் முன்பு இருந்ததைப் போல மாத இறுதியில் தொப்பையைத் தள்ளிக்கொண்டு ஜாலியாக ஆடும் சல்லிசான அணிகள் அல்ல. நல்ல ஊதியத்துடன் அந்தந்த நாட்டு அரசுகள் தரும் தரமான நிதி ஒதுக்கீடு, தரமான உள்கட்டமைப்புடன் தயாராகின்றன. அத்தோடு இப்போது நேபாளத்தில் கூட தனியார் கிரிக்கெட் லீக் நடக்கிறது. கன்னாபின்னாவென லீக் தொடர்கள் பெருகிவிட்டன. அங்கு நல்ல பயிற்சியும் அனுபவமும் இந்த அஸோஸியட் அணி வீரர்களுக்குக் கிடைக்கிறது. கடைசியாக, டி20 வடிவமே பெரிய தடபுடல் அணிகளையும் அனுபவமற்ற புதிய அணிகளையும் கிட்டத்தட்ட சமப்படுத்தி விடுகிறது. கொஞ்சம் அனுபவமும் நாசூக்கும் இருந்தால் அவர்களால் இந்த உலக்கோப்பையிலே கூட சில போட்டிகளை வென்றிருக்க முடியும்.

ஐ.ஸி.ஸியும் இந்த அணிகளுக்குப் போதுமான வாய்ப்புகள் அளித்து கிரிக்கெட்டை உலக விளையாட்டாக்க தீவிரமாகவே முயல்கிறது. ஏனென்றால், பின்காலனிய, காலனிய தேசங்கள் இடையே மட்டுமே ஓரளவுக்கு மேல் ஆட்டத்தை நடத்தி பணத்தைக் கறக்க முடியாது. உலகளவில் பரவலாக ஆடப்பட்டாலே பார்வையாளர்களின் எண்ணிக்கையும் அதிகமாகும், போட்டிகளின் தீவிரமும் அதிகமாகும். என்னை வெகுவாகக் கவர்ந்த வேறு விசயங்கள்பந்து வீச்சாளர்களின் புத்திசாலித்தனம், அவர்கள் தரவுகளைப் பயன்படுத்தி களத்தடுப்பு வியூகம் அமைப்பது, மெதுப்பந்துகள், யார்க்கர்களை வீசுவது, 135-140 கிலோமீட்டர் வேகவீச்சாளர் ஒருவரையாவது வைத்திருப்பது, நல்ல சுழலர்களைக் கொண்டிருப்பது மற்றும் அவர்களுடைய மட்டையாளர்கள் வேகப்பந்தை மைசூர்வாசிகள் சாம்பாரில் ஊறிய போண்டாவை ஸ்பூனால் வெட்டுவதைப் போல நாசூக்காக எதிர்கொள்வது.
இன்றைய போட்டியில் நபீபியாவின் பந்துவீச்சைப் பார்க்கையில் அவர்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு எனத் தோன்றியது. அண்மையில் ஒரு டி20 போட்டியில் தென்னாப்பிரிக்காவை முறியடித்ததாகப் படித்தேன். அவர்களுடைய அரசு மத்திய ஒப்பந்தம் இட்டு வீரர்களுக்கு முழுநேர சம்பளம் கொடுக்கிறது. நபீபியா உயர்மத்திய வருமான தேசம். பக்கத்தில் உள்ள தென்னாப்பிரிக்காவில் அவர்களுடைய வீரர்கள் சென்று ஆடிப் பயிற்சி பெறுகிறார்கள். இவர்களைப் போன்ற வசதியும் விருப்பமும் உள்ள கிரிக்கெட் பின்னணி இல்லாத வேறு நாடுகளையும் இனி உள்ளே கொண்டு வருவார்கள். ஒன்றிரண்டு நாடுகள் மட்டுமே கிரிக்கெட்டை ஆதிக்கம் செலுத்தும் காலம் அடுத்த பத்தாண்டுகளில் முடிவுக்கு வரும் என்பது என் கணிப்பு. எப்படியும் 90% மேல் டி20 மட்டுமே ஆடுவார்கள். அதனால் மிகத்திறமையான வீச்சாளர்களும் மட்டையாளர்களும் தேவைப்பட மாட்டார்கள். சிக்ஸர் அடிக்கத் தெரிந்தவர்களும் புத்திசாலித்தனமான வீச்சாளர்களும் போதும். அனுபவமும் திறனும் குறைந்த அணிகளால் கூட இத்தகைய வீரர்களை உருவாக்க முடியும். கிரிக்கெட்டின் எதிர்காலம் நமது பர்மா பஜார், தில்லியின் சோர் பஜார் போல இருக்கும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...