முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

"நாவல் எழுதும் கலை" - விமர்சனம் - மா. அண்ணாமலை

 நாவல் எழுதும் கலை - ஆர்.அபிலாஷ் - எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing  | panuval.com

நூலனுபவம் (28)

தான் எடுத்துக்கொண்ட களத்தை முழுவதுமாக ஆராய்ந்து எழுதுவது அபிலாஷின் பாணி. நாவல் எழுதும் கலை நூலிலும் அதனையே செய்திருக்கிறார். நாவலாசிரியரின் மனநிலை, உளவியல், நாவலின் வகைகள், நாவலின் உத்திகள், பிரசுரம் என விரிவான தலைப்புகளுடன் எழுதியுள்ளார். நாவலின் வரலாற்றையும் நாவலினை எழுதும் போதும். எழுதிய பிறகும் ஒரு நாவலாசிரியர் அடையும் உளச்சிக்கல்கள் என விரிகிறது நூல். ஒரு நாவலாசிரியராக இருப்பதன் சாதகங்களை முதலில் பேசி இருக்கிறார். உண்மைதான் ஒரு படைப்பாளியாக தன் படைப்புக்குள் நுழையும் அவன் புற உலகின் சிடுக்குகளை கவனம் கொள்வதில்லை. தன் படைப்பின் சிக்கல்களை பேசுவதில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொள்கிறான். அதனாலயே மிகுந்த மனமகிழ்வும் மனத்துன்பமும் அடைகிறான். இம் மனஉணர்வுகள் ஒரு படைப்பாளியால் மட்டுமே அடைய முடிபவை. பிறகு வாசகன் அதன் பலனை அனுபவிக்கிறான்.
நாவலின் அடிப்படைகளாக காலம், சொல்லடுக்குகள், நம்பகத்தன்மையான வசனங்கள், எல்லாவற்றிலும் முதன்மையாக கதையின் உண்மைத்தன்மையின் இருக்க வேண்டும் என கூறுகிறார். நூல் முழுக்கவே ஆசிரியர் வலியுறுத்தும் செய்தி, எழுதுங்கள். அதன் மூலமே அக்கதையில் நீங்கள் திருத்தம் செய்ய ஏதாவது இருக்குமென்கிறார். அதேபோல் நாவலை எழுதிய பின்பு திருத்தம் செய்வது மிக முக்கியம் என்கிறார். அது நாவலில் உள்ள தேவையற்ற பிசிறுகளை வெளியேற்றும் என்கிறார்.
எனக்கு வியப்பளித்த விஷயம் நாவல் என்றால் கதை, அதனைக் கொண்டு விரியும் கதைகளும். இறுதியாக சுபம் என்றிருந்தேன். ஆனால் நாவல் என்பதன் சுவாரசியம் கதையில் இல்லை; சிறு சிறு சம்பவங்களை தகவல்களைக் கொண்டு விரித்து எழுதுவதில் உள்ளது என்று விளக்குகிறார். அதேபோன்று கதைக்கான மொழியே வேண்டுமென்கிறார்.
போலவே சிறு சிறு சம்பவங்களை ஒன்றிலிருந்து இன்னொன்று தூண்டுவதாய் அமையாமல் ஒவ்வொன்றுக்குள்ளும் ஆழமாய் உறைய வைப்பது நாவலாசிரியரின் பணி என்கிறார்.
நூலின் வியப்பான விஷயம் அபிலாஷ் தமிழ், ஆங்கிலம் என கலந்து கட்டி எண்ணற்ற நாவல்களை வாசித்திருப்பது. 'மோகமுள்' அவருக்குள் அதீத தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை அவர் நூலில் அந் நாவலை சிலாகிப்பதைக் கொண்டு உணர முடிகிறது. ஆனால் பெருமாள் முருகனின் ஒரு நாவல் கூட இடம்பெறவில்லை என்பது ஆச்சரியமே.
அபிலாஷிடம் எனக்குள்ள பிரச்சனை அவர் நூல்களை இருமுறை வாசிக்க வைத்து விடுகிறார். ஒரு தரமான வாசிப்பின்பத்தை அனுபவிக்க அவை தேவைதான் போலும்.
என்னதான் நாவல்களைப் பற்றி, அதை எழுதுவதைப் பற்றி பேசினாலும் புத்தகத்தின் நீளம் சற்று அதிகமோ எனப்படுகிறது. கூடவே எழுத்தாளனின் ஞாபகம் மறதி இதில் நாவலாசிரியனின் ஞாபக மறதியாக படி எடுக்கிறது.
எப்படி ஆயினும் நாவல் எழுதுவோர் எத்தனிப்போர், எழுதியோர் என எல்லோருக்குமான ஒரு நூலாக ஆசிரியர் இதை படைத்திருக்கிறார். நூலின் இறுதியில் ஆசிரியர் சொல்லி இருப்பது நாவலாசிரியர் ஆகும் எல்லோருக்கும் பயன்படும். "இன்று நாம் செய்ய வேண்டியது சோம்பித் திரியாமல் தன்னொழுக்கத்துடன், ஊக்கத்துடன் தொடர்ச்சியாக எழுதுவதும் செயல்படுவதுமே; இன்று பலருக்கும் எழுத நேரமில்லை. ஏனென்றால் நேர மேலாண்மை செய்ய தெரியவில்லை அத்திறனையும் ஒரு இளம் நாவலாசிரியர் வளர்த்துக் கொண்டால் வெற்றி படிக்கட்டுகள் அவன் முன் புலப்படுவது நிச்சயம்."

நூல் : நாவல் எழுதும் கலை
ஆசிரியர் : ஆர். அபிலாஷ்
வெளியீடு : எழுத்து பிரசுரம்
வகை : துறைசார் நூல்
பக்கங்கள் : 324

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...