நான் இவர்கள் ஆட்சி செய்யவில்லை, ஷோ காட்டுகிறார்கள் என்று திரும்பத் திரும்பச் சொல்வது இதனால்தான். ஊர்க்காவல் படையினரைத் தான் சிங்கப் பெண்கள் 2500 பேர்கள் என்று அறிவித்திருக்கிறார். அதனால்தான் இதற்கான நியமனம், செலவைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லை. ஊர்க்காவல் படையென்பது தன்னார்வலர்களால் ஆனது. அவர்கள் வேலை செய்யாவிட்டாலும் ஒன்றும் செய்ய முடியாது. அதுவும் தற்போதைய நிலைப்படி அவர்களுக்கு மாதம் 10 முதல் 15 நாட்கள் மட்டுமே பணி வழங்கப்படுகிறது. ஊதியமும் பணி நிரந்தரமும் அவர்கள் கோரினாலும் இன்னும் வழங்கப்படவில்லை. இந்த சிங்கப் பெண்கள் அடுத்தடுத்த மாதங்களில் பொதுவிடங்களில் பரவலாக தோன்றி ரோந்துப் பணியில் ஈடுபடாவிடில் (வாய்ப்பு ரொம்ப ரொம்ப கம்மி) இது மற்றொரு சினிமா காட்சி மட்டுமே என்பது உறுதியாகிவிடும்.
இதே விஜய் தன்னுடைய பாதுகாப்புக்கு ஊர்க்காவல் படையை பயன்படுத்துவாரா? மாட்டார். ஆனால் பெண்களின் பாதுகாப்புக்கு அஞ்சு காசு செலவில்லாமல் இப்படி ஒரு ஏற்பாடு. இவர் ஒவ்வொரு முறை தனிவிமானத்தில் தில்லிக்குப் பறக்கும் பணத்தைச் (தலா 50 லட்சம்) சேர்த்தாலே கோடிக்கணக்கில் வரும். அப்பணத்தில் ஆயிரம் ஊர்க்காவல் பெண் படையினருக்கு மாதம் 10,000 கொடுக்கலாம். பட்ஜெட்டில் இன்னும் ஒரு சில கோடிக்ள் ஒதுக்கினால் 20,000 கூட கொடுக்கலாம். அப்போது அவர்களுக்கு ரோந்துப் பணி கடமையாகும். தவறினால் கேட்கலாம், தண்டிக்கலாம்.
இந்த சிங்கப் படை, யானைப் படை, குதிரைப் படை நிஜத்தில் இருக்கிறார்களா, இருப்பார்களா என்று தெரியாததாலே பழைய டுரோன் திட்டத்தை ஏதோ தானே அறிமுகப்படுத்துவதாக ஒரு பாவனை செய்துவிட்டு எல்லாரும் ஒழுக்கமாக இருங்க என்று அறிவுரைத்திருக்கிறார்.
கருத்துகள்