முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாஜகவின் புதிய உத்தி



அண்ணாமலை பாஜகவை விட்டு வெளியேறுவதான சேதியும் அவர் புது கட்சி ஆரம்பிப்பதான சேதிகளும் சுவரொட்டிகளும் அவராகப் பணம் கொடுத்துப் பரப்புவதுதான். அவர் எப்போதுமே ஊடகங்களுக்கு நிறைய செலவு செய்பவர்.

இது நிகழுமெனில் பாஜக தவெகவை நேரடியாக எதிர்க்க தான் மட்டும் போதாது, அண்ணாமலையையும் ஒரு மாற்று விஜய்யாக வைத்து ஒரு மாற்றுக் கட்சியை உருவாக்கி பாஜக எதிர்ப்பு மனநிலையில் இருந்து தப்பிக்கலாம் எனக் கருதுகிறது எனப் பொருள். அதாவது இனி தவெக எனும் பாஜக (திமுக எதிர்ப்பு), தவெக எனும் திமுக (பாஜக எதிர்ப்பு), அண்ணாமலையின் கட்சியான மாற்று பாஜக, நிஜ பாஜக என பல கட்சிகள் களமாடும். மிகுதியான தகவல்கள், உணர்வுத் தூண்டுதலைத் தரும் பிம்பங்கள், காணொளிகளைக் கொண்டு மக்களின் மூளையை நிரப்பி சிந்திக்க விடாமல் பண்ணுவதும், அரசியல் மாய்மாலங்களால் கவனத்தைத் தொடர்ந்து திருப்பி திராவிட அரசியல் இல்லை எனும் பிரமையை ஏற்படுத்துவதும், விஜய் எதிர்ப்பு வாக்குகளைப் பிரிப்பதுமே அவர்களுடைய உத்தேசமாக இருக்கும்.
முக்கியமாக, இங்குள்ள பாஜக ஆதரவு ஊடகங்களும் பத்திரிகையாளர்களும் ஐடி விங் கூட்டத்தினரும் தீவிரமாக அண்ணாமலையின் கட்சியை ஆதரிப்பர்.
விஜய்யைப் போல இன்னொரு விஜய்யை இங்கு உருவாக்குவது சுலபம். அதற்கான டூல் கிட் தயாராக உள்ளது.
முதலில் ஊடகங்கள் மூலமாக ஒரு தலைவருக்குப் பெரும் ஆதரவு உள்ளதாகக் காட்ட வேண்டும்.
அடுத்து அவரைக் கொண்டு ஆளும் அரசை நேரடியாக எதிர்க்க வைக்க வேண்டும்.
அவர் ஊழலற்றவர், தூய்மையானவர், அதிரடியானவர், மக்கள் ஆதரவு கொண்டவர், பாஜக அவரை ஏமாற்றிவிட்டது எனப் பிரச்சாரம் செய்ய வேண்டும்.
மேற்சொன்ன ஊடக பிரமை, திரட்டப்பட்ட கூட்டம், ஐடி விங் பரபரப்பைக் கொண்டு போலி மக்கள் ஆதரவு பிம்பத்தைக் கட்டமைத்த பின், அவருக்கு அடுத்த மாநிலத் தேர்தலில் 30-40 இடங்களை வாக்கு எந்திரத்தை டியூன் செய்து வைத்துக் கொடுத்து விடுவார்கள். இந்த இடங்கள் அதிமுக திமுகவுக்கான இடங்களாக இருக்கும். இதை ஏற்க வைத்துவிட்டால் அவர்களால் அதற்கடுத்த தேர்தலில் இந்தப் புதிய கட்சிக்கு 120 இடங்களைக் கொடுத்து ஆட்சியமைக்க வைக்க முடியும்.
இப்போது இவையெல்லாம் ஹேஷ்யம்தான். அவ்வப்போதுள்ள சூழலைப் பொறுத்து முடிவெடுப்பார்கள் என நினைக்கிறேன். ஆனால் நான்கு விசயங்கள் நிச்சயம்:
1) விஜய்க்கு மட்டும் வாக்கு எந்திர சொகுசால் வாக்குகளை அள்ளிக் கொடுத்து ஆட்சிக்குக் கொண்டு வந்தது அண்ணாமலையின் ஆசையையும் தூண்டிவிட்டது. தான் உருவாக்கிய அலையை விஜய் பயன்படுத்தி வென்றுவிட்டார் என்று கூட அவர் நம்பலாம். பாஜக தலைமையிடம் இதைக் குறித்து ஏதோ ஒரு பேச்சுவார்த்தையை நடத்திக் கொண்டிருக்கிறார்.
2) பாஜக ஆதரவாளர்கள் சட்டென பாஜக தலைமை அண்னாமலையை ஏமாற்றியது தவறு, அவர் கடுமையாக உழைத்திருக்கிறார், அவர்கள் ஒரு உள்ளூர் தலைவர் வலுவாக உருவாகி வருவதை வெறுக்கிறார்கள் என ஒரு பொய்ப் பிரச்சாரத்தை ஆரம்பிப்பார்கள். பாஜகவுக்கு எதிர்முகமாக அவர்கள் அண்ணாமலையைக் கட்டமைப்பார்கள். இன்னொரு பக்கம் அவர் தவெகவையும் கடுமையாக எதிர்ப்பார். அதே சமயம் அவர் பாஜகவின் அரசியலையோ கொள்கையையோ எதிர்க்க மாட்டார்.
3) பாஜக தன்னை நேரடியாக 'ஆட்சிக்குக் கொண்டு வர' உத்தேசிக்கவில்லை. அதற்கான எதிர்ப்பு கடுமையாக உள்ளது எல்லாருக்கும் தெரியும். அதற்குப் புதுத் தலைமைகள் எனும் பல பொய் முகங்கள் தேவையுள்ளன. இத்தலைமைகள் உள்ளூர் பிரபல முகங்களாக, கறுப்பான தோற்றம் கொண்டவர்களாக, மத்திய சாதியைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். இவர்களுக்கு அரசியல் பின்னணி, வரலாறு இருக்கக் கூடாது. கறைபடியாதவர் என்பதே இவர்களின் பிரதான வசீகரமாக இருக்கும். இதன் மூலம் பாஜக, இந்துத்துவா, மோடி எதிர்ப்பு எனும் கதையாடலைத் தகர்த்துவிட முடியும் என நம்புகிறார்கள்.
4) மேற்சொன்ன அசைவுகளை விஜய் விரும்பவில்லை. அதனாலே அவர் சண்டை தனக்கும் திமுகவுக்கும் மட்டும்தான் என திருச்சியில் மீண்டும் மீண்டும் வலியுறுத்திப் பேசுகிறார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...