முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

என் கோபம்

Tvk maanadu portraits of president vijay 

தவெக ஆட்சியை ஏன் இப்படிச் சாடுகிறீர்கள், உங்களுக்கு எப்படி அப்படி வெறுப்பு என்று நண்பர் ஒருவர் கேட்டார். நான் அவரிடம் சொன்னேன், "எனக்கு தவெக ஆட்சி மெல் எந்த வெறுப்பும் இல்லை. ஏனென்றால் அப்படி ஒரு ஆட்சியே இல்லை. என் பிரச்சினை தவெக அல்ல, என் பிரச்சினை தவெகவே இல்லை என்பதே. நான் சொல்வது நிஜம். யார் வேண்டுமானாலும் சோதித்துப் பார்க்கலாம்.

இங்கு நடப்பது லாட்டரி மார்ட்டின் ஆட்சி. 25 நாட்களில் 5000 கோடிக்கு மேல் கனிம வள முதலாளிகளிடம் இருந்து கமிஷன் வாங்கி மார்ட்டினின் தொழில் முதலீட்டுக்காக அனுப்புகிறார்கள் எனும் குற்றச்சாட்டைப் பாருங்கள். அதில் ஒரு பங்கை தவெக தலைமைக்கும் கொடுத்திருப்பார்கள். நான் மறுக்கவில்லை. அதனாலே அது தவெக தலைமை ஆட்சி செய்வதாக ஆகாது. தவகவை வைத்து மார்ட்டின் ஆள்கிறார் என்பதே பொருள் ஆகும். மார்ட்டின் பல மோசடிகள் வழியாக சம்பாதித்த பணத்தை ("காட்பாதர்" படத்தில் வருவதைப் போல) நேரடியாக வணிகத்தில் முதலீடு செய்யத் தொடங்கினார். கூடவே மோசடித் தொழிலையும் தொடர்ந்தார். அவருக்கு அது போதவில்லை. அரசியல் கட்சிகளுக்குக் கொடுத்து பாதுகாப்புத் தேடுவதை விட கட்சி தொடங்கலாம் என நினைத்து ஆதவை அனுப்பினார். அவர் பல கட்சிகளில் புகுந்து புறப்பட்டு விஜய்யை அடைந்தார். அப்படி நிகழ்ந்ததே தவெக. தவெகவை வைத்து வெறுமனே பேரம் பேசி கமிஷனை ஈட்டி இன்னொரு பக்கம் தன் தொழிலை விருத்தி செய்கிறார். இப்பணத்தை நாளை அவர் தன் கட்சியில் கூட முதலீடு பண்ண மாட்டார். இம்முறை பாஜகவுக்கு விஜய் தேவைப்பட்டதைப் போல அடுத்த தேர்தலில் பயன்படவில்லை என்றால் வாக்குப்பதிவு எந்திரம் மக்கர் பண்ணும். அப்படி நிகழ்ந்தால் மார்ட்டின் மொத்த கமிஷன் வருமானத்தையும் (லட்சம் கோடிகளில்) அள்ளியெடுத்து இன்னொரு மாநிலத்தில் முதலீடு பண்ணுவார். லாட்டரி, அது இதுவென பொதுமக்கள் இந்தியா முழுக்க சுரண்டப்படுவர்.
மார்ட்டின் மட்டுமல்ல, விஜய்யை வைத்து வேறு சில மோசடி தொழிலதிபர்களும் இங்கு கொள்ளையடிக்கிறார்கள்.
முன்பெல்லாம் கமிஷன் இருக்கும். ஆட்சியும் பண்ணுவார்கள். இப்போது ஆட்சியோ நிர்வாகமோ இல்லை. ஏனென்றால் இது கட்சியே அல்ல. இவர்கள் ஒரு தோற்றம் மட்டுமே.
நாளை இவர்கள் மீது விசாரணை நடத்தவும் முடியாது. மார்ட்டின் தனக்கும் இந்த கட்சிக்கும் சம்மந்தமே இல்லை என்பார். விஷ்ணு ரெட்டி உள்ளிட்ட பிறரும் அவ்வாறே கையை விரிப்பார்கள். அமைச்சர்களிடமும் கேட்க முடியாது. அவர்களுக்குத் தம் துறையே என்னவென்று தெரியாது. அவர்களும் பெரிதாக அடிக்க முடியாது. கீழே விழுபவற்றைப் பொறுக்கவே முடியும். முதலமைச்சருக்கு எம்.எல்.ஏவா அமைச்சரா ஒன்றுமே தெரியாது. சந்தேகமிருந்தால் அவரிடமே கேட்டுப் பாருங்கள். அதனாலே அவரால் எந்தப் பிரச்சினைக்கும் தெளிவாக நடைமுறைத் தீர்வு சொல்ல முடிவதில்லை.
உங்களுக்கு இன்னும் தெளிவாகப் புரிய வேண்டும் என்றால் கேரள சட்டமன்றத்தில் முதலமைச்சர் வி.டி சதீஷன் பேசுவதைக் கேட்டு அதை விஜய்யின் பேச்சுடன் ஒப்பிடுங்கள். அவர் தன் முடிவுகளை நியாயப்படுத்துவதைப் பாருங்கள். புள்ளிவிபரங்களுடன் சட்டசபையில் நேராகவே விவாதிக்கிறார். சரியோ தவறோ அவர்களுக்கு ஆட்சியில் நடக்கிற விசயங்கள் தெரிகின்றன.
தவெகவுக்கு உள்ளது ஒரு ஸ்டார்ட்டிங் டிரபிள், முதிர்ச்சியின்மை என்று நான் நினைக்கவில்லை. நடப்பது ஒரு கட்சியின் ஆட்சியல்ல, ஒரு நாடகம். நாடகத்தை வைத்து பின்னால் நடக்கும் கொள்ளை. முறைகேடாக முதலீடு செய்யப்பட்ட பணத்தை திரும்ப முறைகேடாக பல மடங்குகளில் எடுக்கிற ஆவேசமான முயற்சிகள். போகப் போக இவர்களுக்கு முதிர்ச்சியும் நேர்த்தியும் வராது. நாடகம் போடுவதில் முதிர்ச்சி அதிகரிக்கும். அவ்வளவுதான்.
எனக்கு இதைப் பார்த்துதான் கோபம். எனக்கு மார்ட்டின் மீதும், ஆதவ் மீதும், வேறு 'முதலீட்டாளர்கள்' மீதும்தான் கோபம். இதையெல்லாம் நாம் விஜய், தவெக என திசைதிருப்புவதைப் பார்த்து கோபம். இல்லாத நபர்களை, கட்சியை வைத்து எனக்கு கோபம் இல்லை.
எனக்குத் தெரிந்து முதல்வரே இல்லாத, ஆளுங்கட்சியே இல்லாத ஒரே ஆட்சி தமிழ்நாட்டில்தான் நடக்கிறது. அதைப் பார்த்து கோபம்!
சாலையில் ஒரு உடல் நடந்து போகிறது. அதற்கு தலையே இல்லை. அது தாறுமாறாக நடக்கிறது. ஆனால் தைரியமாக நடக்கிறது. தன் பெயர் தமிழ்நாடு என்கிறது. அதைப் பார்த்து கோபம்."

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...