முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தென்னாப்பிரிக்க டெஸ்டு தொடர் அம்பலமாக்குவது என்ன?



இந்திய அணி உள்ளூர பீதியுற்று இருக்கிறது என்பதைத் தான். 16 டிடம்பர் 2010 தொடங்கிய டெஸ்டு ஆட்டத்தின் முதல் நாளில் ஆடுகளம் பந்து வீச்சுக்கு எந்தளவுக்கு ஆதரவு அளித்தது என்பது விவாதத்துக்கு உரியது. ஸ்விங் குறைவாகவே இருந்தது.
மழைக்கால இங்கிலாந்து ஆடுதளங்களுடன் ஒப்பிட்டால் சூப்பர்ஸ்போர்ட் பார்க்க் ஆடுதளத்தின் குணாதசியம் விளங்கும். இந்த ஆடுதளம் சற்று மெதுவாக ஆனால் எகிறக் கூடியதாக இருந்தது. தென்னாப்பிரிக்க வீச்சாளர்கள் குறைவாகவே ஸ்விங் செய்தார்கள். அவர்களது ஸ்விங் அல்ல, வேகமும் பந்தின் உயரமுமே மட்டையாளர்களை அடிப்படையில் அச்சுறுத்தியவை. இந்திய மட்டையாளர்கள் உயரப்பந்தை சந்திக்கும் கச்சிதமான தொழில்நுட்பம் கொண்டவர்கள் அல்ல. இது நமக்குத் தெரிந்தது தான். ஆனால் உயரப்பந்தை ஆட ஒருவர் ரிக்கி பாண்டிங்காக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒன்றில் உயரப்பந்தை ஆடுவதில் அசௌகரியம் இல்லை என்று வீச்சாளருக்கு உணர்த்தும் படியாக தடுப்பாட்டம் ஆட வேண்டும். அல்லாவிட்டால் உயரப்பந்துகளை அடித்தாடி அதிக ஓட்டங்கள் எடுக்க வேண்டும். முதல் நாளில் தோனி இதைத் தான் செய்தார். சமன் செய்ய அவர் கத்திரிக் கோல் போல காலை தூக்க வேண்டி வந்தாலும் கூட உயரப் பந்துக்கு அவர் அதிரடியாய் ஓட்டங்கள் எடுக்க ஆரம்பித்ததும் தென்னாப்பிரிக்கர்களின் வீச்சு நீளம் முழுமையான நீளமாக மாறியது. மாறாக திராவிடும் காம்பிரும் லக்‌ஷ்மணும் ஆடுதளத்தில் ஆழமாக நின்று உயரப் பந்தை சமாளிக்க முயன்றனர். குறிப்பாக ஊக்கமற்ற தடுப்பாட்டம் இவர்களின் அச்சத்தை பட்டவர்த்தமாக்கியது. இது பந்து வீச்சாளர்களை ஊக்குவித்தது.

அச்சம் ஆட்டக்காரர்களுக்கு பொதுவானது என்றாலும் தந்திரம் அதை வெளிக்காட்டாமல் இருப்பது தான். இதனாலே கிரிக்கெட்டை ஒரு உளவியல் ஆட்டம் என்கிறார்கள். உயரப்பந்துக்கு தகுந்த பதிலை தர முடியாவிட்டால் இந்த தொடரில் இந்தியாவால் ஒரு இன்னிங்சில் நூறு ஓட்டங்களுக்கு மேல் எடுக்க முடியாது. சங்கீத மேடையில் ஊமைகளுக்கு என்ன இடம்?

கருத்துகள்

Rettaival's Blog இவ்வாறு கூறியுள்ளார்…
பொறுமை...பொறுமை...நாமும் டாஸில் ஜெயித்திருந்தால் பவுலிங் எடுத்து அவர்களை நட்டாற்றில் நிறுத்தியிருக்க முடியும்!

Lets wait and see!
Ashok D இவ்வாறு கூறியுள்ளார்…
நேர்த்தி :)
ஆர். அபிலாஷ் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி ரெட்டைவால்ஸ் மற்றும் டி.ஆர்.அஷோக்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...