முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தென்னாப்பிரிக்க டெஸ்டு தொடர் அம்பலமாக்குவது என்ன?



இந்திய அணி உள்ளூர பீதியுற்று இருக்கிறது என்பதைத் தான். 16 டிடம்பர் 2010 தொடங்கிய டெஸ்டு ஆட்டத்தின் முதல் நாளில் ஆடுகளம் பந்து வீச்சுக்கு எந்தளவுக்கு ஆதரவு அளித்தது என்பது விவாதத்துக்கு உரியது. ஸ்விங் குறைவாகவே இருந்தது.
மழைக்கால இங்கிலாந்து ஆடுதளங்களுடன் ஒப்பிட்டால் சூப்பர்ஸ்போர்ட் பார்க்க் ஆடுதளத்தின் குணாதசியம் விளங்கும். இந்த ஆடுதளம் சற்று மெதுவாக ஆனால் எகிறக் கூடியதாக இருந்தது. தென்னாப்பிரிக்க வீச்சாளர்கள் குறைவாகவே ஸ்விங் செய்தார்கள். அவர்களது ஸ்விங் அல்ல, வேகமும் பந்தின் உயரமுமே மட்டையாளர்களை அடிப்படையில் அச்சுறுத்தியவை. இந்திய மட்டையாளர்கள் உயரப்பந்தை சந்திக்கும் கச்சிதமான தொழில்நுட்பம் கொண்டவர்கள் அல்ல. இது நமக்குத் தெரிந்தது தான். ஆனால் உயரப்பந்தை ஆட ஒருவர் ரிக்கி பாண்டிங்காக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒன்றில் உயரப்பந்தை ஆடுவதில் அசௌகரியம் இல்லை என்று வீச்சாளருக்கு உணர்த்தும் படியாக தடுப்பாட்டம் ஆட வேண்டும். அல்லாவிட்டால் உயரப்பந்துகளை அடித்தாடி அதிக ஓட்டங்கள் எடுக்க வேண்டும். முதல் நாளில் தோனி இதைத் தான் செய்தார். சமன் செய்ய அவர் கத்திரிக் கோல் போல காலை தூக்க வேண்டி வந்தாலும் கூட உயரப் பந்துக்கு அவர் அதிரடியாய் ஓட்டங்கள் எடுக்க ஆரம்பித்ததும் தென்னாப்பிரிக்கர்களின் வீச்சு நீளம் முழுமையான நீளமாக மாறியது. மாறாக திராவிடும் காம்பிரும் லக்‌ஷ்மணும் ஆடுதளத்தில் ஆழமாக நின்று உயரப் பந்தை சமாளிக்க முயன்றனர். குறிப்பாக ஊக்கமற்ற தடுப்பாட்டம் இவர்களின் அச்சத்தை பட்டவர்த்தமாக்கியது. இது பந்து வீச்சாளர்களை ஊக்குவித்தது.

அச்சம் ஆட்டக்காரர்களுக்கு பொதுவானது என்றாலும் தந்திரம் அதை வெளிக்காட்டாமல் இருப்பது தான். இதனாலே கிரிக்கெட்டை ஒரு உளவியல் ஆட்டம் என்கிறார்கள். உயரப்பந்துக்கு தகுந்த பதிலை தர முடியாவிட்டால் இந்த தொடரில் இந்தியாவால் ஒரு இன்னிங்சில் நூறு ஓட்டங்களுக்கு மேல் எடுக்க முடியாது. சங்கீத மேடையில் ஊமைகளுக்கு என்ன இடம்?

கருத்துகள்

Rettaival's Blog இவ்வாறு கூறியுள்ளார்…
பொறுமை...பொறுமை...நாமும் டாஸில் ஜெயித்திருந்தால் பவுலிங் எடுத்து அவர்களை நட்டாற்றில் நிறுத்தியிருக்க முடியும்!

Lets wait and see!
Ashok D இவ்வாறு கூறியுள்ளார்…
நேர்த்தி :)
ஆர். அபிலாஷ் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி ரெட்டைவால்ஸ் மற்றும் டி.ஆர்.அஷோக்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.