முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

“மிஷ்கினைத் துப்பறிவோம்”: எதிர்வினைகள்

 Image result for mysskin

இம்மாத உயிர்மையில் வெளியாகியுள்ள எனது கட்டுரை ”மிஷ்கினை துப்பறிவோம்”. அதற்கு உற்சாகமான ஆர்வமுட்டும் எதிர்வினைகள் தொடர்ந்து வருகின்றன. இதழ் வெளியான அன்றே நண்பரும் எழுத்தாளரும் நடிகருமான ஷாஜி என்னை போனில் அழைத்து நீண்ட நேரம் பேசினார். அவர் மிகுந்த உணர்ச்சிகரமான நிலையில் இருந்தார். “மிஷ்கினை நீண்ட காலம் கூட இருந்து அறிந்த ஒருவர் எழுதுகிற விசயத்தை எப்படி அவரை ஒரே ஒருமுறை மட்டுமே சந்தித்த நீங்கள் எழுதினீர்கள்?” என்ற கேள்வியை திரும்பத் திரும்ப கேட்டார். அவரது வியப்பு எனக்கு மேலும் வியப்பாக இருந்தது. அந்தளவுக்கு சிறப்பாகவா எழுதியிருக்கிறேன்? மிஷ்கினின் ஆளுமையைப் பற்றின எனது ஒரு எளிய அவதானிப்பாகவே அதைக் கருதி இருந்தேன். ஒருவிதத்தில் சமீபத்தில் சாருவைப் பற்றி நான் எழுதியதன் நீட்சி தான் இது.
Image result for ஷாஜி

 எப்படியோ ஷாஜிக்கு பிடித்திருந்தது எனக்கு மிகுந்த உவகையும் திருப்தியும் அளித்தது. அவர் கூர்மையான மனிதர். ஆழமான வாசகர். அவருக்கு சரியாகப் பட்டதென்றால் நான் ஒரு நல்ல கட்டுரையைத் தான் எழுதியிருக்கிறேன் எனப் பொருள்! இக்கட்டுரையைப் பற்றி மிஷிகினிடம் அவர் பேசினதாகவும், இதை அவர் மிஷ்கின் வாசிக்கும் பொருட்டு அனுப்பித் தரப் போவதாகவும் சொன்னார். ஷாஜி “துப்பறிவாளன்” படம் பற்றி பல அற்புதமான விசயங்களை என்னிடம் அன்றிரவு பகிர்ந்து கொண்டார். அதையெல்லாம் கேட்டிருந்தது ஒரு அபாரமான அனுபவம்.

ஷாஜியுடனான உரையாடலைத் தொடர்ந்து இந்த மின்னஞ்சல்கள் வந்தது பின்னிருந்து அணைத்து காதலி அளிக்கும் முத்தங்கள் போல் இருந்தன. யமுனைச்செல்வனுக்கும் விஜயகுமாருக்கும் நன்றிகள்! என்னைப் போன்ற ஒரு எளிய எழுத்தாளன் வேறென்ன எதிர்பார்க்க முடியும்? இது போன்ற எதிர்வினைகள் தாம் என்னைத் தொடர்ந்து பித்துப் பிடித்தது போல் எழுதச் செய்கின்றன.

 தொடர்ந்து என்னை இது போல் நேசியுங்கள்!

வணக்கம் அபிலாஷ்.

மிஷ்கினை துப்பறிவோம் கட்டுரை வாசித்தேன்படைப்புகளைக்கொண்டு படைப்பாளனை அணுகுவதில் எனக்கு உடன்பாடில்லை எனினும்கட்டுரை அருமைஒரே ஒரு குறை.. கட்டுரை இன்னும் விரிவாக இருந்திருக்கலாம் என்பதேஉள்ளடக்கத்தைச் சொல்லவில்லைஒருவேளை எடிட்டிங்கில் சுருக்கப்பட்டிருக்கலாம்இதுபோன்ற கட்டுரைகளை ஆங்கிலத்திலும் நீங்கள் எழுதவேண்டும்.


நன்றி
யமுனைச்செல்வன்

அன்புள்ள அபிலாஷ் அவர்களுக்கு ,

வணக்கம் .
உயிர்மை நவம்பர் கட்டுரையை ஒரே மூச்சில் படித்தேன். நீங்கள் உளவியல் சார்ந்து எழுதும் கட்டுரைகள் வாசிக்க அதிசுவாரஸ்யமாக உள்ளன; பெண்ணுடல் குறித்தும் கோபிகிருஷ்ணன் குறித்தும் நீங்கள் முன்னர் எழுதிய, பேசியவை நினைவுக்கு வருகின்றன. உங்களின் இதைப்போன்ற பொது உளவியல் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு வெளிவரவேண்டும் என விரும்புகிறேன்.


மைக்கேல் ஹென்கேவின் Amour என்ற பிரெஞ்சு படத்தை நேரமிருப்பின் நீங்கள் பார்க்கவேண்டும். அந்தப் படத்திற்கும் கட்டுரைக்கும் தொடர்புண்டு. இது குற்றம் பார்த்தல் அல்ல; மிஷ்கினை எனக்கு மிகவும் பிடிக்கும். நாம் அறிந்த ஒன்றை நமக்குப் பிடித்த ஒருவர் சொல்வதால் வரும் இன்பம்.


The confessions of a mask எழுதிய மிஷிமா தற்கொலை செய்துகொண்டார். அந்த சாமுராய்களின் தற்கொலை முறைக்காட்சியும் படத்தில் இருந்தது. அப்போதும் உணர்ச்சி மிகுந்த ஒரு நிலைக்குச் சென்றேன். இவ்வாறாக இரண்டுமுறை.

முன்னமே அறிந்து அதைக் காண்பதால் வரும் இன்பம், அறிதலால் வரும் இன்பம்.
அது நாம் கைகோர்க்கும் புள்ளி அல்லவா?!

நன்றி.

அன்பொடு
விஜயகுமார் .


கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Hi Abolish, trust you are doing well, I'm a avid reader of your blog.wishing you good health and prosperity.. yet to read your article on myshkin..

Cheers..
jkdocdickens இவ்வாறு கூறியுள்ளார்…
அன்புள்ள அபிலாஷ் , இந்த உயிர்மை இதழை வாங்க தவற விட்டு விட்டேன் ... உங்களது கட்டுரை யை வாசிக்க முடியவில்லை ....மிஷ்கின் பற்றிய கட்டுரை .....எப்பொழுது உங்கள் வலைப்பூவில் பதிவேற்றுவீர்கள் ....பதிவேற்ற ஏதேனும் தடை உள்ளதா ?
Stalin இவ்வாறு கூறியுள்ளார்…
சமீபத்தில் நண்பர் ஒருவர் தற்செயலாக எனக்கு பிடித்த எழுத்தாளர் குறித்து கேட்ட போது,உங்கள் பெயரை தான் கூறினேன் அபிலாஷ்.மிகவும் contemporaryயாக உங்கள் எழுத்தை உணர்வதாக காரணம் கூறினேன்.
நண்பர் விஜயகுமார் கூறியதை போல் உளவியல் சார்ந்து வெளிப்படும் கூர்மையான அவதானிப்புகள் தான் உங்கள் எழுத்தை தொடர்ந்து படிப்பதற்கு என்னை ஈர்த்தது.
அதிலும் உங்களின் கடைசி புதினம் மறக்க முடியாத வாசிப்பனுவம்.அது சார்ந்து நடந்த உரையாடல்களை அறிந்துக் கொள்ள நீண்ட நாட்களாகவே விருப்பம்.
ஆர். அபிலாஷ் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி ஸ்டாலின்!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

நலத்திட்டங்களின் அடிப்படையான பிழை

  மகளிர் உதவித் (உரிமைத்) தொகைத் திட்டத்தைக் கைவிடுவதைக் குறித்து தவெக அரசு பரிசீலிக்க வேண்டும். அதற்காகச் செலவாகும் 15,000 கோடி ரூபாயை படித்து வேலை கிடைக்காமல் இருப்போரில் வருடாந்திர குடும்ப வருமானம் ஒரு அளவுக்கு மேல் குறைவாக இருப்போருக்கு அளிக்க வேண்டும். அதேபோல முறைசாரா தொழிலாளர்களுக்கு நொடிந்த தொழில்களில் ஈடுபட்டிருப்போருக்கும் கொடுப்பதை அரசு பரிலீக்க வேண்டும். அதாவது உதவி / உரிமைத் தொகையை பாலினம் சார்ந்ததாக அல்லாமல் தொழில் சார்ந்ததாகப் பார்க்க வேண்டும். மேற்சொன்ன பெண்களும் அப்போது இத்திட்டத்திற்குள் வந்துவிடுவார்கள். சொந்தமாக வீடும் சொத்தும் கொண்ட பெண்கள் இந்த தொகையைப் பெறுவதைத் தவிர்க்க இயலும். இந்த மாற்றத்திற்கான தேவைகளாக நான் கருதுவன: 1) வர்க்கரீதியாக இது திட்டமிடப்படாததால் நிறைய குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. 2) இதை அரசு மக்களுக்கு கொடுக்கும் லஞ்சமாக சிலர் காண்கிறார்கள். அதாவது பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அவர்களைத் தம் வசம் இழுப்பதற்காக அரசுகள் இத்திட்டங்களைக் கொண்டு வந்துள்ளதாக அவர்கள் நினைக்கிறார்கள். இதனால் மக்கள் நலத் திட்டத்துக்கே பெயர் கெடுகிறது. 3) தொழில்...