Skip to main content

இருவர்: ஒளிப்பதிவு சொல்லும் உளப்பாங்கு (2)



இனி வரும் தாழ் கோண தூர காட்சியும் (low angle long shot) “செவன் சாமுராயில்வருவதே.




செவன் சாமுராயில்இந்த சமாதி காட்சியின் எழுச்சியில்-இருந்து-வீழ்ச்சிஇறுதியில்-வெறுமை எனும் போக்கு தான் கடைசி காட்சி வரை தொடரும். இதே போல் ஒரு சமாதிக் காட்சியுடன் படம் முடியும். சாமுராய் தலைவர் கம்பெய் தன் சகாக்களிடம் சொல்கிறார்: “நாம் மற்றொரு சமரில் தோற்று விட்டோம். இந்த வெற்றி நமதல்ல, விவசாயிகளுக்கானதே”. அவர் ஏன் தோற்று விட்டோம் என்கிறார், அதுவும் கொள்ளையர்களை முழுக்க கொன்றொழித்த பின்? 1) அந்த சமர் முடிந்ததும் சாமுராய்களின் இடம், அவர்களுக்கான தேவை இல்லாமல் ஆகிறது. அதற்கு மேல் விவசாயிகள் சாமுராய்களுக்கு உணவளித்து கவனித்துக் கொள்ள மாட்டார்கள். ஒரு வாய் சோற்றுக்காக சாமுராய்கள் மீண்டும் அலைய வேண்டும். 2) கொள்ளையர்களை கொன்றதற்கு இணையாய் சாமுராய்களும் கொல்லப்பட்டார்கள். இரு தரப்புக்கும் இழப்புகள். விவசாயிகள் மட்டுமே பெரிய இழப்புகள் இன்றி தப்பித்துக் கொண்டார்கள்.


பாரதப் போர் முடிந்த பின்னர் பாண்டவர்களிடம் காந்தாரி கேட்டாளாம்: “விதவைகளும் பிணங்களும் எஞ்சிய இந்த தேசத்தை, சொந்த பிள்ளைகள் இன்றி, உறவினர்கள் இன்றி, நண்பர்கள் இன்றி நீங்கள் இனி மகிழ்ச்சியாய் ஆள முடியுமா?”. பாணடவர்கள் வென்றதும் கௌரவர்கள் தோற்றதும் ஒன்று தான் என மகாபாரதம் அவதானிக்கிறது. போர் முடிவில் பாண்டவர்கள் வெறுமையை எதிர்கொள்கிறார்கள்வெற்றியின் புளகாங்கிதத்தை அல்ல. ”செவன் சாமுராயின்முடிவும் இப்படியான ஒரு இன்மையையே தொட்டுணர்த்துகிறது.
இருவர்இந்தளவுக்கு ஒரு கசப்பான அர்த்தமின்மையை சுட்டவில்லை என்றாலும் தொடர்ந்து விதியால் கைவிடப்படுகிற ஒரு கையாலாகாத துன்பியல் நாயகனின் கதையாகவும் அது உள்ளது. மனைவியை இழந்த பின் ஆனந்தனுக்கு மீண்டும் அதிர்ஷ்டம். அவனது நின்று போன படம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு அது நன்றாக ஓடி அவன் பெரிய ஹீரோ ஆகிறான். அடுத்து அவன் திராவிட கட்சியில் முக்கிய தலைவன் ஆகிறான். தமிழ்ச்செல்வனை முதல்வர் ஆக்குவதற்கான திரைமறைவு வேலைகளை ஆனந்தன் செய்கிறான். ஆனால் தமிழ்ச்செல்வன் ஆனந்தன் தன் நண்பன் அல்ல அரசியல் போட்டியாளன் என அஞ்சுகிறான். இது உள்ளூர பகைமையை வளர்க்கிறது. தொடர்ந்து ஆனந்தன் கட்சியில் இருந்து நீக்கப்படுகிறான். படத்தில் அவன் அழுகிற மூன்றாவது தருணம் இது. ஆனாலும் அவன் இந்த தோல்வியில் இருந்து மீண்டு வர போராடுகிறான். புதுக்கட்சி ஆரம்பித்து நண்பனை தேர்தலில் முறியடிக்கிறான். ஆனால் அதுவும் அவனுக்கு முழுமையான வெற்றி அல்ல என்பதை நண்பனுடனான அரசியல் மோதல்களில் அவனுக்கு முழு திருப்தியோ உவப்போ இல்லை என்பதில் நமக்கு தெரிய வருகிறது. அது மட்டுமல்ல அவனது காதலி கல்பனா விபத்தில் மாண்டு போகிறாள். தமிழ்ச்செல்வனுக்கு ஆட்சி எப்படி அதிருப்தியும் கவலையும் நிறைந்ததாக இருக்கிறதோ ஆனந்தனுக்கும் அப்படியே. இருவருமே ஊழலுக்கும் சமூக தீமைகளுக்கும் எதிராய் பேசி ஆட்சிக்கு வந்து அதே சீரழிகளுக்கு இடம் கொடுக்கிறார்கள். அவற்றை தம்மால் முறியடிக்க முடியாது என தோல்வியை ஏற்கிறார்கள்.
 அடுத்த தேர்தலுக்கு முன் ஆனந்தன் இறந்து போக அச்செய்தி தமிழ்ச்செல்வனை எட்டுகிறது. இனி தமிழ்ச்செல்வனுக்கு யாரும் போட்டி இல்லை. அவனே நீண்ட காலம் ஆட்சிக்கட்டிலில் இருக்கலாம். ஆனால் அவன் மகிழ்ச்சியாய் இல்லை. தனது அதுவரையிலான அரசியல் வியூகங்கள் மீது கசப்பும் இழப்புணர்வும் தோன்ற அவன் தளர்ந்து போகிறான். தன் நண்பனைப் பற்றின நினைவுகளில் அலைகழிகிறான். அதாவது தமிழ்ச்செல்வனின் வெற்றி இனிமேல் முழுமையான வெற்றியாக இருக்காது. படத்தின் துவக்கம் முதல் முடிவு வரை யாருக்கும் எதுவும் முழுமையாய் கிடைப்பதில்லை. ஒருவித சாய்ந்தாடி (seesaw) ஆட்டமாக வாழ்க்கை இருக்கிறது.
இருவரில்இந்த சாய்ந்தாட்டத்தை பாத்திரங்களின் வளர்ச்சி, மாற்றம், எழுச்சி, வீழ்ச்சியை ஒட்டி எப்படி திரைமொழி சித்தரிக்கிறது என பார்ப்போம்.
ஆனந்தன் தமிழ்ச்செல்வனை முதலில் சந்திப்பது திரைப்பட செட்டில். பெரிய அரண்மனை அமைக்கப்பட்டிருக்கிறது. ஒரு அரியணை. ஆனந்தன் அதில் அமர்ந்து பார்க்கிறேன், மிகுந்த தயக்கத்துடன். அடுத்து தனக்கு எதிரே வைக்கப்பட்டுள்ள கத்தியை எடுத்து வீசிப் பழகுகிறான். பார்வையாளர்களை நோக்கிபடத்தில் பார்வையாளர்களை நோக்கி அவன் செய்யும் ஒரே சைகை இது மட்டுமே. இனி தான் எதிர்கொள்ளப் போகும் வாழ்க்கையை இப்படித் தான் அடித்து நொறுக்கப் போகிறான் என சொல்கிறானோ? ஆனால் அவனது இந்த தன்னம்பிக்கையும் முழுமையானது அல்ல. செட்டில் ஒரு கல்விளக்கைக் காண்கிறான். உடனே பணிந்து வணங்குகிறான். அடுத்து மதவழமைகளை கேலி செய்து கவிதை பாடியபடி தமிழ்ச்செல்வன் அங்கு வருகிறான். ஆனந்தன் அவனது திசை நோக்கி திரும்புகிறான். இக்காட்சி முழுக்க ஆனந்தன் தமிழ்ச்செல்வனுக்கு பணிந்து அடிபணிந்து செல்கிறவனாக வருவான். தன்னை தமிழ்ச்செல்வனின் ரசிகன் என்றே அறிமுகப்படுத்துவான். ஆனந்தனின் இந்த பலவீனமான உடல்மொழியை குறிப்புணர்த்தும்படியே கீழ் வரும் காட்சியில் foregroundஇல் உள்ள தீபங்கள் நெகிழ்ந்து சாய்வதைப் பாருங்கள்.






மேலே உள்ள காட்சிகள் தாழ் கோண மிட் (low angle mid) ஷாட்கள். இரண்டிலும் கோபுர முகடுகளை, அதைத் தாண்டி விரியும் அந்தி வானை சந்தோஷ் சிவன் சட்டகத்துள் கொண்டு வந்துள்ள விதம் அபாரமானது. தமிழ்ச்செல்வன் ஒரு கோயில் முகட்டில் நின்று கடவுள் மறுப்பு பேசுகிறான் என்பதில் ஒரு நகைமுரண் உள்ளது (வசனங்கள் நடுவே கோயில் மணி ஓசை வேறு சன்னமாய் கேட்கிறது). அதை விட முக்கியமாய், தாழ் கோணத்தில் இருவரையும் விஞ்சி கோயில் முகடுகளும் அவற்றை விஞ்சி ஆகாயமும் உள்ளன. வரலாற்று சிறப்பு மிக்க அரசியல் கூட்டங்கள் நடக்கும் நாயக்கர் மஹாலும் இப்படத்தில் இவ்வாறே காட்டப்படுகிறது. வரலாற்றை மாற்றி அமைப்பேன் எனும் மனிதனின் அகந்தையை அதே வரலாறு சிறு கேலியுடன் அமைதியாய் நோக்குவது போல் இதே தாழ் கோணத்தில் தனித்த பிரம்மாண்ட கட்டிடங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. அவற்றுக்குள் தனியே அலையும் ஆனந்தனும் தமிழ்ச்செல்வனும் பாரதப்போர் முடிந்த பின் குருஷேத்திர களத்தில் திரியும் பாண்டவர்களை நினைவுபடுத்துகிறார்கள். மேலே தரப்பட்ட காட்சிகளில் தமிழ்ச்செல்வனின் அரசியல் உறுதிப்பாடும் ஆனந்தனுக்கு அவன் மீதுள்ள பற்றும் தெரிய வந்தாலும் இருவரின் காலத்தின் முன் வெறும் தூசு எனும் அவதானிப்பும் நுணுக்கமாய் வருகிறது. சந்தோஷ் சிவனின் படைப்பூக்கமிக்க காட்சிமொழி வெளிப்படும் இடம் இது.

Comments

Unknown said…
very nice analysis

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...