முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்தியா இங்கிலாந்து மூன்றாவது டெஸ்ட்: நாள் இரண்டு



இந்த டெஸ்ட் தொடரில் என் கவனத்தை தொடர்ந்து ஈர்ப்பது ஆடுதளங்கள் தாம். அவை இங்கிலாந்தில் உள்ள வறட்சி காரணமாய் காய்ந்து தளர்ந்து போயுள்ளன.

 ஒரு நல்ல ஆடுதளத்துக்குள் மண் அடுக்குகள் உறுதியாய் இருக்க வேண்டும்; அவை நெகிழவோ தளரவோ கூடாது. அது ஆடுதளத்தை மிக மெத்தனமாக்கும்; பவுன்ஸ் இல்லாமல் பந்து ஊர்ந்து வரத் தொடங்கும். இதைத் தவிர்க்கவே இங்கிலாந்து ஆடுதள தயாரிப்பாளர்கள் கூடுதலாய் நீர் தெளிக்கிறார்கள். ஆனால் கடும் வெப்ப அலைகள் காரணமாய் நீரை தளங்கள் வேகமாய் உறிஞ்சுகின்றன. ஆடுதளம் வெடிக்காமல் இருக்கும் பொருட்டு தொடர்ந்து நீர் தெளிக்கிறார்கள். விளைவாக, ஆடுதளம் ஒரு பாதி ஈரமாயும் மறு பாதி காய்ந்து போய் வறண்டும் இருக்கும். மேலும் உறுதித்தன்மை கொடுக்க புற்களை அதிகம் மழிக்காமல் விட்டு வைப்பார்கள். இத்தகைய ஆடுதளங்களில் (புற்பரப்பு காரணமாய்) பந்து தொடர்ந்து ஸ்விங் ஆகும். ஆடுதளத்துக்குள் காயாத அடுக்குகள் மீது பந்து பட்டால் ஓவராய் பவுன்ஸ் ஆகும்; காய்ந்த அடுக்குகள் என்றால் பந்து முட்டிக்கு கீழே பம்மிப் போகும்.
இந்தியா மட்டையாடிய போது பந்து மெத்தனமாய் இருந்ததால் சமாளித்து விட்டார்கள். ஆனால் இன்று இங்கிலாந்து மட்டை ஆடிய போது வானம் மேகமூட்டமாய் இருந்திட பந்து நன்றாய் ஸ்விங் ஆனது. 161க்கு இங்கிலாந்து ஆல் அவுட் ஆனது உண்மையிலேயே ஆச்சரியம் என்றாலும், இன்றைய சீதோஷ்ண நிலையும் இதற்கு ஒரு காரணம்.
 நாளையும் மேகமூட்டமும் சாரலும் தொடரும். ஆகையால் நாளைக் காலை முதல் முப்பது ஓவர்களுக்குள் நிச்சயம் 3-4 இந்திய விக்கெட்டுகள் சரியும் என ஊகிக்கிறேன். அப்படியே நடந்தாலும் இந்தியாவுக்கு அதனால் பெரிய பாதிப்பு இராது. 400 சுமாருக்கு இலக்கு நிர்ணயித்தாலே நான்காவது இன்னிங்ஸில் இங்கிலாந்தால் அதை சுலபத்தில் தாண்ட முடியாது.
ஆனால், இங்கிலாந்துக்கு இரண்டு விசயங்கள் அனுகூலமானவை:
1)   நான்காவது மற்றும் ஐந்தாவது நாட்கள் மழையோ மேகமூட்டமோ இன்றி சீதோஷ்ண நிலை மட்டையாட்டத்துக்கு சிறப்பாக இருக்கும்
2)   அஷ்வினின் காயம்
அதேவேளை, கடைசி இரு நாட்கள் இந்த ஆடுதளம் இரு விதங்களில் மாற்றமடையலாம்.
1)   இங்கிலாந்து நாளை ஐந்துக்கு மேல் விக்கெட்டுகள் இழந்தால் நான்காவது நாள் ஆடுதளம் மட்டையாட்டத்துக்கு வசதிப்படும் போது அதில் லாபம் கொய்ய முடியாது போகும்.
2)   ஆனால் ஒருவேளை இங்கிலாந்து நாளை நன்றாக மட்டையாடினால், நான்காவது நாள் வெயிலில் மட்டையாட்டம் சிறப்பாக அமையலாம். அப்போது அஷ்வின் காயத்தில் இருந்து மீளவில்லை எனில் நான்கு பவுலர்களைக் கொண்டு நூற்றுக்கு மேல் ஓவர்கள் வீசுவது சிரமமாகும். ஆடுதளம் நன்றாய் மாறும், பவுலர்கள் களைப்பாவார்கள். ஆட்டம் தலைகீழாய் மாறலாம்.
ஆட்டத்தின் போக்கை தீர்மானித்த நாள் இன்று. ஆட்டத்தை சீல் வைக்கும் நாள் நாளை. இந்தியாவின் வெற்றி வாய்ப்பு இப்போதைக்கு 60-40.

கருத்துகள்

ஸ்ரீராம். இவ்வாறு கூறியுள்ளார்…
விவரங்கள் தெரிந்து கொண்டேன்.

ஆனால் இந்தியா வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...