முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நான் வரும் போது…


Image result for child playing painting
உன்னைப் பார்த்து பல நாட்கள் ஆகின்றன
ஆனாலும்
இதோ இந்த நொடி
நான் எதிர்வந்தால்
குளியலறை பக்கெட்டில் நீ முக்கி
நசுக்கிக் கொல்லும் அந்த பொம்மைகளை
பாதி தவிப்பில் விட்டு விட்டு
என்னிடம் ஓடி வருவாய் என அறிவேன்.


நான் மடியில் தூக்கி வைத்து
முத்தமிட்டு விசாரித்து முடிக்குமுன்
நீ உனது பாதி வாக்கியம் ஒன்றில் இருந்து
உன் இடையறா பேச்சை நீ தொடர்வாய் என அறிவேன்
நான் அப்பேச்சுக்கு எதிர்கேள்வி கேட்குமுன்
நீ மீண்டும்
பாதி தவித்து மூச்சு வாங்கிக் கொண்டிருக்கும்
அந்த பொம்மைகளிடம் போய் விடுவாய்
என அறிவேன்

ஆகையால்
அந்த விளையாட்டு முடியட்டுமென காத்திருக்கிறேன்

நான் வரும் போது
புதிதாய் சில அப்பா பொம்மைகளை கொண்டு வருவேன்
முடிவற்று
குமிழ் குமிழாய் மூச்சு விட்டு
சுவாசம் சுவாசம் எனக் கேட்கும் போது
உன் சிரிப்பைப் பார்த்து
அதைக் கேட்க மறந்து
நீரில் கரணம் அடிக்கும்
அப்பா பொம்மைகள்
விளையாட்டு என்பதே
ஒருவருக்கு உயிர்கொடுப்பதாய் கொடுத்து
அதை பறிப்பதும்
உயிர்பறிப்பதாய் பறித்து
அதைக் கொடுப்பதும் தானே
கண்ணே!
நீ இல்லாத உலகில்
இந்த இரண்டுமே இல்லை.
அங்கு மகிழ்ச்சியும் இல்லை
தவிப்பும் இல்லை.
அங்கு தா தா எனும் பாய்ச்சலும்
விடு விடு எனும் கெஞ்சலும் இல்லை
இது ஒரு தட்டையான உலகம்
இது உயிரற்ற உலகம்
அந்த நாளுக்காய் காத்திருக்கிறேன்
நான் வரும் போது
நீ ஓடி வருவாய் தானே?

கருத்துகள்

சிகரம் பாரதி இவ்வாறு கூறியுள்ளார்…
சிறப்பான கவிதை. படித்தேன், ரசித்தேன். உங்கள் கவிதை எமது தளத்தில்... மின்னற் பொழுதே தூரம் | கவிதை | நான் வரும் போது… : சிகரம்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...