முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்தியாவின் உலகக்கோப்பை குடை சாய்ந்தது!


ஆம், சற்றும் எதிர்பாராத வேளையில் ஒரு பெரிய கனவு முடிவுக்கு வந்து விட்டது. இந்தியாவின் உலகக்கோப்பை விருட்சம் நியூசிலாந்துக்கு எதிரான அரை இறுதியில் முளையில் கிள்ளப்பட்டது

முதல் மூன்று மட்டையாளர்களை மட்டும் சார்ந்திருத்தல், சிரமமான ஆட்டச்சூழலில் ரன் சேகரிக்க 4-6 வரையில் அனுபவம் / திறன் கொண்ட மட்டையாளர்கள் இல்லாதது இந்தியாவை முக்கியமான வேளையில் கர்ணனின் தேர்க்கால் முறிந்தது போல வந்து தாக்குகிறது. பழைய படங்களில் ஹீரோ மாரில் குண்டு பாய்ந்த பிறகு ஐந்து நிமிடங்கள் மூச்சு விடாமல் வசனம் பேசுவது போல ஜடேஜா-தோனி கூட்டணி கொஞ்சம் நம்பிக்கையை ஏற்படுத்தினாலும் முடிவு நாம் அனைவரும் ஏற்கனவே அறிந்திருந்தது தான்


மீண்டும் ஒரு வாய்ப்புக்கு அடுத்த நான்கு வருடங்கள் நாம் காத்திருக்க வேண்டும். அப்போது தினேஷ் கார்த்திக், ஜாதவ், தோனி போன்ற வயதான, ஆட்டத்திறன் மங்கியவர்களை நம்பி இராமல் புது வீரர்களை கண்டுபிடித்து மத்திய வரிசை ஆட்டத்தை மெருகேற்ற வேண்டும். பேட்டிங் ஆல்ரவுண்டர்களை உருவாக்க வேண்டும்
தலைமையிலும் ஒரு மாற்றம் நல்லது - ரோஹித் ஷர்மா என்னுடைய தேர்வு. ஏனென்றால் கோலியின் கீழ் நீண்ட ஆட்டதொடர்களில் அரை இறுதி / இறுதிப் போட்டிகளில் இந்திய அணி சொதப்புகிறது. முக்கிய காரணம் நம்மால் நெருக்கடியை சிக்கலான சந்தர்பங்களில் கையாள முடியாதது.

 நியுசிலாந்துக்கு நம்மை விட நிதானம் அதிகம் உள்ளது இன்றைய ஆட்டத்தில் தெளிவாக தெரிகிறது. இறுதிப் போட்டியை வெல்லும் திறன் அவர்களுக்கு இல்லாமல் போகலாம், ஆனால் சரியான நேரத்தில் கூலாக ஆடுகிறார்கள். இந்தியாவோ இன்று சற்று choke ஆகி விட்டது.
 நமக்கு இன்னும் நிதானமான தொலைநோக்கு கொண்ட தலைவர் தேவை. பயிற்சியாளர் ரவி சாஸ்திரி நீக்கப்படுவதும் அவசியம். கோலி-ரவிசாஸ்திரி கூட்டணியால் உச்சபட்சமாக செய்ய முடிவது இது தான். பெரிய ஆர்ப்பாட்டம் எல்லாம் பண்ணி தம்பட்டம் பண்ணி கடைசியில் பாடை தூக்கி சுடுகாட்டை நோக்கி நடைபோடுவார்கள். இது இப்போதல்ல திரும்பத் திரும்ப நடக்கிறது - சேம்பியன்ஸ் டுரோபி நினைவுள்ளது. ஒரு தலைவராக தோனி உலகக்கோப்பையை வெல்ல காரணம் அவருக்கு ஒரு அணியை இறுதி கட்டம் வரை எடுத்துச் செல்ல முடியும், அவர் ஏற்கனவே நீண்ட தொடர்களை, டி-20 உலகக்கோப்பை உட்பட, வென்றிருந்தார் என்பது. கோலியின் வரலாறு நேர்மாறானது. சீக்கிரமே உணர்வுவயப்படும், திடீர் திடீரென முடிவுகளை மாற்றும் அவரது குழப்ப மனநிலை குறுந்தொடர்களுக்கு மட்டுமே ஏற்றது. ரோஹித் ஷம்ர்மாவின் மும்பை இந்தியன்ஸ் தொடரை தொடர்ந்து பலமுறை ஒரு தலைவராக வென்றளித்துள்ள அனுபவம் அவருக்கு உலகக்கோப்பை போன்ற தொடர்களில் வெகுவாக உதவும்.மஹிள ஜெயவர்த்தனே / ரிக்கி பாண்டிங் போன்ற ஒருவரை அணியின் பயிற்சியாளராக்க வேண்டும். ரவி சாஸ்திரி கோலிக்கு ஒரு டப்பிங் கலைஞர் மட்டுமே.

வேறென்னெல்லாம் காரணங்கள், பரிந்துரைகள்? பகிருங்கள்!

கருத்துகள்

????????? ?????? (Balachandar Ganesan) இவ்வாறு கூறியுள்ளார்…
மாறும் நிறங்கள் எழுதிய ஆசிரியர் அல்லவா. சுருக்கமாகவே எல்லாவற்றையும் சொல்லி விட்டிர்கள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...