Skip to main content

இந்தியாவின் உலகக்கோப்பை குடை சாய்ந்தது!


ஆம், சற்றும் எதிர்பாராத வேளையில் ஒரு பெரிய கனவு முடிவுக்கு வந்து விட்டது. இந்தியாவின் உலகக்கோப்பை விருட்சம் நியூசிலாந்துக்கு எதிரான அரை இறுதியில் முளையில் கிள்ளப்பட்டது

முதல் மூன்று மட்டையாளர்களை மட்டும் சார்ந்திருத்தல், சிரமமான ஆட்டச்சூழலில் ரன் சேகரிக்க 4-6 வரையில் அனுபவம் / திறன் கொண்ட மட்டையாளர்கள் இல்லாதது இந்தியாவை முக்கியமான வேளையில் கர்ணனின் தேர்க்கால் முறிந்தது போல வந்து தாக்குகிறது. பழைய படங்களில் ஹீரோ மாரில் குண்டு பாய்ந்த பிறகு ஐந்து நிமிடங்கள் மூச்சு விடாமல் வசனம் பேசுவது போல ஜடேஜா-தோனி கூட்டணி கொஞ்சம் நம்பிக்கையை ஏற்படுத்தினாலும் முடிவு நாம் அனைவரும் ஏற்கனவே அறிந்திருந்தது தான்


மீண்டும் ஒரு வாய்ப்புக்கு அடுத்த நான்கு வருடங்கள் நாம் காத்திருக்க வேண்டும். அப்போது தினேஷ் கார்த்திக், ஜாதவ், தோனி போன்ற வயதான, ஆட்டத்திறன் மங்கியவர்களை நம்பி இராமல் புது வீரர்களை கண்டுபிடித்து மத்திய வரிசை ஆட்டத்தை மெருகேற்ற வேண்டும். பேட்டிங் ஆல்ரவுண்டர்களை உருவாக்க வேண்டும்
தலைமையிலும் ஒரு மாற்றம் நல்லது - ரோஹித் ஷர்மா என்னுடைய தேர்வு. ஏனென்றால் கோலியின் கீழ் நீண்ட ஆட்டதொடர்களில் அரை இறுதி / இறுதிப் போட்டிகளில் இந்திய அணி சொதப்புகிறது. முக்கிய காரணம் நம்மால் நெருக்கடியை சிக்கலான சந்தர்பங்களில் கையாள முடியாதது.

 நியுசிலாந்துக்கு நம்மை விட நிதானம் அதிகம் உள்ளது இன்றைய ஆட்டத்தில் தெளிவாக தெரிகிறது. இறுதிப் போட்டியை வெல்லும் திறன் அவர்களுக்கு இல்லாமல் போகலாம், ஆனால் சரியான நேரத்தில் கூலாக ஆடுகிறார்கள். இந்தியாவோ இன்று சற்று choke ஆகி விட்டது.
 நமக்கு இன்னும் நிதானமான தொலைநோக்கு கொண்ட தலைவர் தேவை. பயிற்சியாளர் ரவி சாஸ்திரி நீக்கப்படுவதும் அவசியம். கோலி-ரவிசாஸ்திரி கூட்டணியால் உச்சபட்சமாக செய்ய முடிவது இது தான். பெரிய ஆர்ப்பாட்டம் எல்லாம் பண்ணி தம்பட்டம் பண்ணி கடைசியில் பாடை தூக்கி சுடுகாட்டை நோக்கி நடைபோடுவார்கள். இது இப்போதல்ல திரும்பத் திரும்ப நடக்கிறது - சேம்பியன்ஸ் டுரோபி நினைவுள்ளது. ஒரு தலைவராக தோனி உலகக்கோப்பையை வெல்ல காரணம் அவருக்கு ஒரு அணியை இறுதி கட்டம் வரை எடுத்துச் செல்ல முடியும், அவர் ஏற்கனவே நீண்ட தொடர்களை, டி-20 உலகக்கோப்பை உட்பட, வென்றிருந்தார் என்பது. கோலியின் வரலாறு நேர்மாறானது. சீக்கிரமே உணர்வுவயப்படும், திடீர் திடீரென முடிவுகளை மாற்றும் அவரது குழப்ப மனநிலை குறுந்தொடர்களுக்கு மட்டுமே ஏற்றது. ரோஹித் ஷம்ர்மாவின் மும்பை இந்தியன்ஸ் தொடரை தொடர்ந்து பலமுறை ஒரு தலைவராக வென்றளித்துள்ள அனுபவம் அவருக்கு உலகக்கோப்பை போன்ற தொடர்களில் வெகுவாக உதவும்.மஹிள ஜெயவர்த்தனே / ரிக்கி பாண்டிங் போன்ற ஒருவரை அணியின் பயிற்சியாளராக்க வேண்டும். ரவி சாஸ்திரி கோலிக்கு ஒரு டப்பிங் கலைஞர் மட்டுமே.

வேறென்னெல்லாம் காரணங்கள், பரிந்துரைகள்? பகிருங்கள்!

Comments

மாறும் நிறங்கள் எழுதிய ஆசிரியர் அல்லவா. சுருக்கமாகவே எல்லாவற்றையும் சொல்லி விட்டிர்கள்

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...