லேட்டரல் எண்டிரி எனும் பெயரில் மோடி நிறைய 'படிக்காத மேதைகளை' அமைச்சக செயலர்களாக நியமித்து வருகிறார். அவர்களில் ஒருவரான கொட்டேச்சே தான் அண்மையில் 'இந்தி தெரியாவிட்டால் வெளியே போ' என தென்னிந்திய மருத்துவர்களை அவமதித்தது.
கொட்டேச்சே மட்டுமல்ல அவரது தலைவர் மோடி, ஆர்.எஸ்.எஸ் சகபாடிகளில் பலருக்கும் படித்தவர்கள், கேள்வி கேட்பவர்கள், ஆங்கிலப் புலமை கொண்டவர்கள், அறிவியல் அறிவு கொண்டவர்களைப் பிடிக்காது.
இந்த கொட்டேச்சே ஒரு ஆர்.எஸ்.எஸ் காரர். மோடியைப் போன்ற படிக்காமலே இந்துத்துவ அரசியல் வழியாக அதிகாரத்தை எட்டியவர். தான் நிர்வகித்த பல்கலைக்கழகத்திலேயே பட்டம் பெற்றவர். இப்படி ஒரு வினோதத்தை எங்காவது பார்க்க முடியுமா? ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் தான் வேலை பார்க்கும் பள்ளியிலே பத்தாம் வகுப்பு தேர்வானால் அது எப்படி இருக்கும்? கொடுமை இல்லையா! இவருக்கு 2015இல் பத்மஸ்ரீ வேறு கொடுத்திருக்கிறார்கள். இப்போது ஆயுஷ் அமைச்சகத்தின் செயலராக இருக்கிறார்.
எனக்கு வருத்தமெல்லாம் ஒன்றுதான். நம்ம ராமர்பிள்ளை குஜராத்தில் 'ராம் ஜெயினாகப்' பிறந்திருந்தால், லேட்டரலாக ஆர்.எஸ்
எஸ் வழி அதிகாரவட்டத்துள் புகுந்து, 'உலகத்தின் வரலாற்றையே' மாற்றிய விஞ்ஞானியாக கொண்டாடப்பட்டு இந்நேரம் பெட்ரோலிய அமைச்சர் ஆகியிருப்பார்.
எல்லாம் தலையெழுத்து ஐயா தலையெழுத்து!
Comments