முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மாலனைச் சுற்றியுள்ள வெறுப்பரசியல்



ஒரு எழுத்தாளனுக்கு பல முகங்கள் இருக்கும். அவை அனைத்தும் அவனுடைய எழுத்துடன் தொடர்புள்ளவை அல்ல. ஒரு எழுத்தாளன் தொண்டு செய்பவனாகவோ பொறுக்கியாகவோ பலாத்காரம் பண்ணுகிறவனாகவோ கட்சிக்காரனாகவோ போராளியாகவோ ஆன்மீகவாதியாகவோ இருக்கலாம். வியாபாரியாக கூலி வேலை செய்பவனாக குமாஸ்தாவாக ஆணாக பெண்ணாக இயல்பான உடல்பெற்றவனாக ஊனனாக இருக்கலாம் - இவை எவையும் அவனுடைய எழுத்துடன் சம்மந்தம் கொண்டவை அல்ல. எதனாலும் அவனுக்கு சலுகைகள் தரப்படவோ அவன் பழிக்கப்படவோ அவசியம் இல்லை. அவனுடைய அடையாளங்கள் முன்னுக்குப் பின் முரணாக இருக்கலாம். அது அவனுடைய இலக்கிய தகுதியை பாதிக்காது. அப்படி பாதிக்குமெனில் அது இலக்கிய அரசியல், அல்லது இலக்கியம் எனும் அரசியல் மட்டுமே, இலக்கியம் அல்ல.

 மீண்டும் சொல்கிறேன் - இலக்கியத்தில் அரசியல் இல்லை என்பது என் பார்வை அல்ல; இலக்கிய பிரதிக்குள் பல அரசியல் ஊடுபாவல்கள், கதையாடல்கள் இருக்கலாம், ஆனால் அவை நடைமுறை அரசியல் அல்ல. இரண்டுக்கும் பாரித்த வேறுபாடுகள் உள்ளன. ஒரு பிரதிக்குள் ஒலிக்கும் படைப்பாளனின் குரலே அவனுடைய தனிப்பட்ட அனுபவங்களின் அடிப்படையில் உருவானது எனும் ஒரு பார்வை வெகுமக்கள் தரப்பில் உள்ளது. சில வருடங்களுக்கு முன் நான் விஷ்ணுபுரம் கூட்டத்திற்கு சென்றிருந்த போது அங்கு சிலர் இதன் அடிப்படையில் மட்டுமே ஒரு பிரதியை படிக்க வேன்டும் என வலியுறுத்திக் கொண்டிருந்தார்கள் - ஒரு கதையோ நாவலோ ஒரு எழுத்தாளனின் அனுபவம், கருத்து மட்டுமே என அவர்கள் வலுவாக நம்பினார்கள். இன்னொரு பக்கம், இடதுசாரி கருத்தியல் கொண்டோர் சிலரிடமும் இப்பார்வை உள்ளது - “சாணிக் காயிதம்எடுத்த அருண் மாதேஸ்வரனிடம்தமி ஸ்டுடியோயூடியூப் சேனலில் ஒரு பேட்டி எடுத்து வெளியிட்டிருந்தார்கள். அதில் பேட்டியாளர்கள் இருவரும் திரும்பத் திரும்ப அருணிடம்வன்முறை சார்ந்து உங்கள் அனுபவத்தைத் தான் படமாக எடுக்கிறீர்களா?” எனக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அதற்கு அவரும் சலிக்க சலிக்கஅதுக்கு அவசியம் இல்லீங்க, நான் வெளியே பார்ப்பதற்குத் தான் வேறு விதமாக எதிர்வினையாற்றுகிறேன், என் பாத்திரம் நான் அல்லஎனச் சொல்லிக் கொண்டிருந்தார். இது எப்படியான வன்முறை!

 இப்படி படைப்பாளனும் தனிமனிதனும் ஒன்றே என சிந்திப்பது ஒரு மோசமான ஒழுக்கவியல் அரசியலுக்கு நம்மை இட்டுச் செல்லும். ஒரு படைப்பாளி பேசுவது, சித்தரிப்பது அத்தனையையும் அவனுடைய சொந்த ஆளுமை, அடையாளத்துடன் பிணைப்பது அவனை கண்காணித்து கட்டுப்படுத்துவதற்கான முயற்சியே அன்றி அப்பாவித்தனமோ அறிவீனமோ அல்ல.


கோட்பாட்டு ரீதியாகவும் இங்கு என் தரப்பை இவ்வாறு விளக்குகிறேன்: தனிமனிதனுக்கு என எந்த ஒரு அடையாளமோ முகமோ இல்லை. அரிஸ்டாட்டில் தனதுகவிதையியல்நூலில் இதை அற்புதமாக விளக்குகிறார். அவர் ஒருவருடைய செயலே அவரது அடையாளம், அவருடைய சொல்லோ சிந்தனையோ அல்ல என்கிறார். அதாவது சொல்லும் சிந்தனையும் கூட ஒரு செயலாகும் போதே அது அடையாளமாகிறது; ஆனால் செயலானது தொடர்ந்து மாறிக் கொண்டே இருப்பது. நீங்கள் ஒரு போராட்டத்தில் கலந்து கொள்ளும் போது போராளி. நீங்கள் வாழைப்பழத்தை உரித்து தின்னும் போது? நீங்கள் சாலையில் போகும் பெண்ணின் மாரைப் பார்க்கும் போது? நீங்கள் யாரையாவது வன்மத்தில் திட்டும் போது? நீங்கள் சுயமைதுனம் செய்யும் போது? வேலையிடத்தில் தலையாட்டிக் கொண்டு ஒரு அவமானத்தை சகித்துக் கொள்கையில்? ஒரு அநீதியை அனுமதிக்கையில்? இதனால் தான் ஒரு மனிதனின் அடையாளத்தை நிறுவுவதில் அடுத்தவர்களுக்கு எப்போதுமே ஒரு நெருக்கடி, ஒரு தவிப்பு இருக்கிறது, அதனாலே அவர்கள் அவன் மீது ஏதாவது ஒரு முகமூடியை திணித்து விட வேண்டும் எனத் திணிக்கிறார்கள் அவர்கள். ஆனால் அடிப்படையில் மனிதன் தொடர்ந்து முரண்பட்டுக் கொண்டே, எந்த அடையாளத்துக்குள்ளும் நிற்க முடியாதவனே. நியாயமாக நாம் அவனை ஒவ்வொரு சமயமும், ஒரு சந்தர்பத்தில் எப்படி வெளிப்படுகிறானோ அவனை அந்தந்த நேரம், சூழலுக்கு ஏற்ப மட்டுமே மதிப்பிட வேண்டும்  என்கிறார் அரிஸ்டாட்டில். இல்லாவிடில் நாம் கண்காணிப்பு அரசியல் ஈடுபட்டு முத்திரை குத்தி தண்டிக்க விரும்பும் லும்பன் கும்பலாகிறோம். இதுவே பின்நவீனப் பார்வையும் கூட.


நான் இந்த இடத்தில் இருந்தே எந்த இலக்கியவாதியையும் மதிப்பிட விரும்புகிறேன். அவன் இடதுசாரியோ வலதுசாரியோ, நான் அவனை நேசிக்கிறேனோ வெறுக்கிறேனோ அந்த அடிப்படையில் அவனது இலக்கிய தகுதியை முடிவு செய்ய மாட்டேன். இலக்கியம் முழுக்க வேறொரு தளம். அங்கு அவன் இலக்கிய அரசியலாக வெளிப்படுத்தும் கருத்தியலுக்கு நான் உடன்படாவிடினும் அவன் ஏதோ ஒரு விதத்தில் இலக்கியத்துக்கு பங்களித்திருந்தால் நான் அவனை ஏற்கிறேன், மதிக்கிறேன், அல்லது மௌனமாக அங்கீகரிக்கிறேன். இந்த நிலைப்பாட்டில் நின்று தான் நான் சாகித்ய அகாடெமி விருதைப் பெறும் மாலனுக்கு என் வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்


அவர் என் மொழிக்கும் பண்பாட்டுக்கும் பங்களித்தவர். நீண்ட காலமாக இங்கு எங்களுடன் நிற்பவர். அவரது நடைமுறை அரசியலை விமர்சித்தாலும் அவரை நாங்கள் இலக்கியவாதிகள் புழுதி வாரித்தூற்றி இகழ மாட்டோம். அவர் எங்களில் ஒருவர். அவரை நான் நேரில் பார்த்தாலும் ஒரு சகமனிதனாகத் தான் நடத்துவேன். துவேஷத்துடன் ஒதுங்கிப் போக மாட்டேன். இந்த நிலைப்பாட்டையே ஜெயமோகன் மீது புளிச்ச மாவு அவமதிப்புகளை நமது சமூகம் முன்னெடுத்த போது நான் முன்வைத்தேன். அவ்வப்போது எஸ்.ரா தூற்றப்படும் போதும் இதையே சொன்னேன் - எல்லாரையும் நடைமுறை அரசியல் சட்டகத்துக்குள் வைக்காதீர்கள். அது உங்களை பாஸிஸ்டுகளாக்கும். இன்று மாலன் சரமாரியாக தாக்குதலுக்கு உள்ளாவதைப் பார்க்கும் போது என் மனம் கசந்து போகிறது. இந்த சமூகவலைதளத்தில் தரம் தாழ்ந்து போவது, உயர்ந்த இடத்தில் நிற்பதில் முழுக்க உங்கள் கையில் தான் இருக்கிறது.


 எனக்கு நன்றாக நினைவிருக்கிறது - நான் பதின்வயதினனாக கலை இலக்கிய பெருமன்ற கூட்டங்களுக்கு செல்லும் போது எங்களுடன் அரசியல் ரீதியாக முழுக்க எதிர்நிலையில் இருப்பவர்களும் எங்கள் கூட்டங்களுக்கு பேச்சாளர்களாக அழைக்கப்படுவார்கள். அவர்களுடன் நாங்கள் கண்ணியமாக, மரியாதையுடன் உரையாடுவோம், முரண்படுவோம், தேநீர் அருந்தி கைகுலுக்கி கலைந்து விடுவோம். அப்படித்தான் கலை இலக்கிய பெருமன்ற களத்தில் தான் நான் முதன்முதலாக ஜெயமோகனை சந்தித்தேன்; மன்றத்தில் உள்ள எவருமே அவருடைய அரசியலை ஏற்க மாட்டார்கள். ஆனால் அவர்கள் அவரை மதித்தார்கள். அவர்களில் ஒருவனான நான் ஜெயமோகனின் வாசகன் ஆனேன். அவர்களுடனான உரையாடலின் வழி தான் நான் சு.ராவை அறிந்து அவரிடம் தொடர்ந்து ஒரு நல்லுறவை பேணினேன், நிறைய கற்றுக் கொண்டேன். என்றுமே என் தோழர்கள் அது குறித்து என்னை விமர்சித்ததில்லை, அவர்கள் மாறாக என்னை ஊக்கப்படுத்தினார்கள். லஷ்மி மணிவண்ணன் எங்கள் மன்றத்தில் இருந்தே சு.ராவிடம் சென்று, இன்று ஜெ.மோவுடன் இருக்கிறார்; அதனால் ஒரு எழுத்தாளனாக லஷ்மி மணிவண்ணனை நாங்கள் ஒதுக்குவதோ வெறுப்பதோ இல்லை. என் அரசியல் இன்று வரை உறுதியாக இருக்கிறது, அதே நேரம் என் தோழர்களிடம் இருந்து கற்றுக் கொண்ட கண்ணியத்தையே நான் இன்று எதிர்தரப்பிடமும் பின்பற்றுகிறேன், ஆனால் எங்களுக்கு அடுத்த தலைமுறைகளுக்கு, பழைய தலைமுறையில் இருந்து திடீரென சமூகவலைதளத்துக்குள் வந்தவர்களுக்கு இந்த பண்பாடு இல்லை.   


இந்த வெறுப்பரசியலை நான் கடுமையாக கண்டிக்கிறேன்.


பி.கு: அகாடெமியின் ஆலோசனைக் குழுவில் உள்ளவர் பரிசைப் பெறலாமா என்பதில் அவர்களுக்கு என நிச்சயமாக ஒரு வழிமுறை, நெறிகள் இருக்கும், அதன்படியே மாலனையும் தேர்ந்திருப்பார்கள் என நம்புகிறேன். பாஜக ஆதரவுக்காக அவர் விருதைப் பெற்றார் எனில் வெளிப்படையாக திமுகவை ஆதரிக்கும் இமையம் எப்படி வென்றார்? இமையம் நம் காலத்தின் தலைசிறந்த புனைவெழுத்தாளர் என்பதால் பரிசு பெற்றார். அவரது அரசியலை அகாடெமி ஒரு வரைமுறையாக வைக்கவில்லை. இதையே மாலன் விஷயத்திலும் கடைபிடித்திருக்கும் என நம்புகிறேன். மேலும் மாலன் மொழியாக்கியுள்ள நூலானஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள்ஒரு முக்கியமான புத்தகம். எதையும் பரிசீலிக்காமல் நம்மைப் போல சாகித்ய அகாடெமியினர் கும்மியடிப்பதில்லை.

கருத்துகள்

silviamary.blogspot.in இவ்வாறு கூறியுள்ளார்…
/எதையும் பரிசீலிக்காமல் நம்மைப் போல சாகித்ய அகாடெமியினர் கும்மியடிப்பதில்லை./ அப்படியெனில் இதுவரை சாகித்திய அகாடெமி விருது பெற்றிருக்கும் எல்லோருமே நியாயமாகவும் அவர்களின் படைப்பின் தரத்திற்காகவும் மட்டுமே விருது பெற்றிருக்கிறார்கள்; அதில் பாரபட்சம் அரசியல் எதுவும் இல்லை என்கிறீர்களா? அப்படி நீங்கள் நம்பினால் மிக்க சந்தோஷமே.....!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...