Skip to main content

Posts

Showing posts from June, 2025

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

மணிரத்னம் - உணர்வு மொழியில் இருந்து தன்னையே 'வெளியேற்றியவர்'

மணிரத்னத்தின் திரைமொழியின் அழகியலில் 'சுற்றுத்துறை விளம்பரப்படத் தன்மை' உண்டென ஏற்கனவே ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன். இதை நான் அண்மையில் ரோஜா படத்தின் "சின்னச்சின்ன ஆசை"பாடலைத் திரும்பப் பார்க்கையில் உணர்ந்தேன். அதாவது ரோஜாவின் அக உலகத்தில் வரும் கிராமம் அல்ல அது. வெளியே இருந்து பார்ப்பவருக்காக கிளர்ச்சியூட்டப்பட்டு அந்நியப்படுத்தப்பட்ட (exociticized) பிம்பங்கள் அவை. "ஒரு வெள்ளை மழை" பாடலும் அப்படித்தான். அது தன் மனைவிக்கு பனிவெளியை நாயகன் காட்டுவதாகத் தான் ஆரம்பிக்கிறதே. அப்படியே பார்வையாளர்களுக்கு காஷ்மீரை மணிரத்னம் அறிமுகப்படுத்தி விளம்பரப்படுத்துவதாக காட்சிகள் உருக்கொள்கின்றன. முத்தக்காட்சிகள் வழியாக அவர் காஷ்மீர் உலகை இச்சிக்கத்தக்கதாகவும் மாற்றுகிறார் (தர்காவஸ்கி எப்படிப் புறவுலகை பாத்திரத்தின் அகவுலகின் நீட்சியாகச் சித்தரிக்கிறார் என்பதுடன் ஒப்பிட்டால் இது இன்னும் துலங்கும்). அவரது மிகச்சிறந்த காட்சி பிம்பங்களைக் கொண்ட "அக்னி நட்சத்திரமும்" கூட பாத்திரத்தின் அகவுலகில் இருந்தும், உணர்வுகளில் இருந்து பார்வையாளனை வெளியேற்றி அவனை ஒரு பயணி ஒர...

ஆன்லைன் நாவல் வகுப்பு

 

துன்பியலை எழுதக் கற்றுக் கொள்ளுங்கள்

  தன் பிரச்சனையை (துன்பியல் வழுவை) உணர்ந்து சரியான நேரத்தில் நாயகனோ நாயகியோ தன்னை மீட்டுவிட்டால் அது கதையை பலவீனமாக்கி விடும் என்று அரிஸ்டாட்டில் தன் “கவிதையியல்” நூலில் ஓரிடத்தில் சொல்லுகிறார். இது உண்மையா? எல்லா நாயகர்களும் மீளமுடியாதபடி வீழ்ந்து தான் ஆக வேண்டுமா? இது தான் எதார்த்த உலகில் நடக்கிறதா? இல்லையே! இங்கு தான் அரிஸ்டாட்டில் கதையை வாழ்க்கையை போலச்செய்தல், ஆனால் வாழ்க்கை அல்ல என்று சொல்லுவதை நாம் கவனிக்க வேண்டும். கதை வாழ்க்கையை விட வசீகரமானது, சுவாரஸ்யமானது (நான் வாழப்படும் வாழ்க்கையை சொல்லுகிறேன், கதையாக மீளநினைக்கப்படும் வாழ்க்கையை அல்ல.) அதனாலே சரியான நியாயங்கள் இல்லாமல் திடீர் திருப்பமொன்றின் மூலம் ஒரு பாத்திரம் மீட்கப்படுமானால் அது கதையின் தீவிரத்தை மழுங்கடித்து விடும், கதையின் அமைப்பே பாத்திரங்கள் போக்கை தீர்மானிக்க வேண்டும், பார்வையாளர்களுடைய (வாசகர்கள்), எழுத்தாளனுடைய விருப்பம் அல்ல என்று அவர் வலியுறுத்துகிறார். தல்ஸ்தாயின் “அன்னா கரெனினா” நாவலில் வரும் இரு முக்கிய பாத்திரங்களான லெவின் மற்றும் கிற்றி (Levin, Kitty) இதற்கு சிறந்த உதாரணங்கள். தங்களுடைய மிகையான கற்பன...

குற்றவிசாரணைப் பிரச்சாரம்

  நாங்கள் டீக்கடையில் இருந்தோம். விஜய்க்கும் போதை மருந்து குழுவுக்குமான தொடர்பு, அவரது வீட்டில் நடக்கும் விருந்துகள் குறித்த செய்திகளை ஆளுங்கட்சி சார்பு யுடியூபர்களும் பத்திரிகையாளர்கள் ஏன் கசிய விடுகிறார்கள் என நண்பர் ஒருவர் கேட்டார். அப்போது எங்கள் உரையாடலைக் கேட்ட டீ மாஸ்டர் சொன்னார், "அவரைப் பார்த்து ஆளும் அரசு பயப்படுகிறது". அவர் ஒரு விஜய் அண்ணா விசிறி. ஆனால் எனக்கு இது விஜய் மீதான அரசியல் வன்மத்தில் நடக்கிறது என நினைக்கவில்லை. மாறாக, திமுக அரசு விஜய் மீது கைவைக்காது என்றே நினைக்கிறேன். வரும் தேர்தலில் அவருக்கு பாஜக கொடுத்துள்ள அசைன்மெண்ட் திமுக அரசை ஊழல் அரசு எனக் கடுமையாக விமர்சிப்பது. அதை சற்று விஜய் இனி மட்டுப்படுத்துவார். ஒரு பக்கம் பாஜகவின் அமலாக்கத்துறை, இன்னொரு பக்கம் இவர்களின் போதை ஒழிப்பு நடவடிக்கை. அமலாக்கத்துறை நடவடிக்கையை விட இது விஜய்யின் பிம்பத்தை மோசமாகப் பாதிக்கும். ஆகையால் இந்தப் பிரச்சினையை இவர்களுடன் இத்துடன் விட்டுவிடுவார்கள், அவரும் தம் கூரம்புகளை மலரம்புகளாக மாற்றிக்கொள்ளும்படி தனக்கு பிரச்சார உரை எழுதும் உதவியாளர்களிடம் சொல்வார். திமுக அரசு எதிரண...

ஜி.நாகராஜனும் நாவல் வடிவமும்

  ஜி.நாகராஜனின் “நாளை மற்றுமொரு நாளை” நாவலின் எதிர்-நாயகனான கந்தன் வழக்கமான ஜி.நாகராஜனின் பாத்திரங்களைப் போன்று எந்த உயர்பண்புகளிலும் நம்பிக்கை வைக்காதவன் என்றாலும் அவனுடைய உறுதி, துணிச்சல், வாழ்க்கை மீதான அலட்சியம் நமக்கு ஒருவித மரியாதையை அவன் மீது ஏற்படுத்துகிறது. ஜி. நாகராஜனின் பாத்திரங்களில் உள்ள இருத்தலிய தன்மை காரணமாக அவர்கள் காலத்துடனே மோதுகிறவர்கள் என்பதால் துன்பியல் வழு (சமூகத்தின் தாம் எதிர்திசையில் செல்வதால் ஏற்படும் பிரச்சனைகளை அறியாத பாசாங்கற்ற குணம்) அறிந்தேற்றல் சாத்தியமாவதில்லை. எஸ்.ராவின் “உறுபசி” நாவலின் சம்பத் இதே போல அறிந்தேற்றல் சாத்தியப்படாத ஒரு துன்பியல் நாயகன் எனலாம். ஜெ.ஜெயின் லட்சிய சிறகுகளை உதிர்த்த, ஜி.நாகராஜனின் பாத்திரங்களின் சாயலில் தோன்றிய ஒரு பலவீனமான ‘தேவனைப்’ போல இந்த சம்பத் இருக்கிறான். லட்சிய சாயல்களை அண்ட விடாத சாமான்யத்தின் பல பரிமாணங்களை இருத்தலியல் கோணத்தில் சித்தரித்த அசோகமித்திரனின் நாயக, நாயகி பாத்திரங்களும் கூட அரிஸ்டாட்டிலின் துன்பியல் நாயக வகைமைக்குள் வருகிறவர்கள் என்பதே ஆச்சரியம். “தண்ணீர்” நாவலின் ஜமுனா விழுமியங்களும், நம்பிக்கைகளு...

தங்கிலிஷின் தத்துவப் பிரச்சினை

தங்கிலிஷ் பயன்பாடு குறித்த நீயா நானா விவாதத்தைப் பார்த்தேன். நல்ல விவாதம் - தங்கிலிஷில் எழுதப்படுவதால் தமிழ் லிபியின் புழக்கம் குறைவதாகவும் அழிவதாகவோ கருதும் முன்பு நாம் இருபதாண்டுகளுக்கு முன்பு நாம் அதிகமாக இந்த லிபியைப் பரவலாகப் பயன்படுத்தியதாகக் கூற வேண்டும். அது உண்மையா? இல்லை. முதலில், 90கள் வரைக்கும் தினசரி நாம் தமிழில் தகவல் பரிமாற்றத்துக்கு அதிகமாக எழுதிக் கொண்டிருந்தோமா? இல்லை. நாம் (வெகுமக்கள்) உச்சபட்சமாக எழுத்து மொழியைப் பயன்படுத்தியது கடிதங்களின்போதே. ஏனெனில் மொழியின் ஜீவநாடி பேச்சிலே உள்ளது. மக்கள் தமிழில் பேசுவதைக் குறைக்கும்போதே நாம் அஞ்ச வேண்டும். எழுதுவதைக் குறைக்கும்போதல்ல. அடுத்து, கடந்த இருபதாண்டுகளில்தாம் நாம் அதிகமாக 'எழுதத்' தொடங்கியுள்ளோம். திறன்பேசியும் சமூகவலைதளமும் நம்மை இன்று மிக அதிகமாக எழுத வைக்கின்றன. தமிழில் பரவலாக எல்லாரும் எழுதுவதில்லை. சில ஆயிரம் பேர்களே எழுதுகிறோம். சில லட்சம் பேர்கள் படிக்கிறோம். 1-2%தாம். ஆகப் பரவலாக தமிழில் வாசிக்கவோ எழுதவோ நம்மால் முடியாமல் போவதே நெருக்கடி. நான் கவனித்தவரையில் அடுத்தடுத்த தலைமுறைகள் ஆங்கிலத்தில்கூட சரிவர...

நிகழாமையின் குழப்பம்

எனக்கு கடந்த புதன் கிழமை “பல்லைக் பிடுங்கினார்கள்”. ஆங்கிலத்தில் extraction என்று நளினமான அறிவியல்தனமாக அழைத்தாலும் அது நிஜத்தில் பிடுங்குவதுதான் என்பதை ‘உணர்ந்தேன்’. மருத்துவர் என் பல்லைக் கிடுக்கியால் பற்றி இழுத்தபோது இவர் ஏன் இழுக்கிறார் என வியந்தேன். அதன்பிறகு அதை அங்குமிங்குமாக அசைத்து ‘உடைத்தார்’. ஆம், நல்லவேளையாக அதற்கு முன்பு வலிமரப்பு ஊசியைப் போட்டார். நமக்குள் எதையோ உடைத்துப் பிடுங்கி எடுப்பதன் பயம் இருக்கிறதே அது தனியானது. எனக்குத் துளிகூட வலிக்கவில்லை, ஒரு சிறு கூச்சம், கண்ணை இறுக்க மூடவைக்கிற எலும்பு வலியைப் போல ஒன்று அவ்வப்போது இருந்தது என்றாலும், முறுகிக் கொள்கிற என் முஷ்டியைக் கட்டுப்படுத்துவதே கடினமாக இருந்தது. எங்கே என் பிரக்ஞையை மீறி அவரது மூக்கைக் குத்திவிடுவேனோ என பயமாக இருந்தது. ம்ம்ம்ம் என உறுமியபடி அதைக் கடந்தேன். சுவற்றில் ஆணியைப் பிடுங்குவதைப் போன்ற இச்செயலைச் செய்ய மருத்துவருக்கு அநாயசமான மனநிலையும் முரட்டுத்தனமான புத்திசாலித்தனமும் வேண்டும். பார்த்து பதவிசாகச் செய்பவர்களால் முடியாது. அது மனித உடம்பல்ல, அது ஒரு இடிபாடு, அதற்குள் நீண்டிருக்கும் மரத்தை சுத்தியா...

போதை ஒரு நோய், குற்றமல்ல

  போதை மருந்து பயன்பாட்டுக்கு ஒருவரைக் கைது பண்ணுவது நோய்த்தொற்று ஏற்பட்டதற்காக ஒரு நோயாளியைக் கைது செய்வதற்குச் சமம். பெரும்பாலான சட்டங்கள் அபத்தமானவை எனில் மிக அபத்தம் இந்த போதைப் பொருள் பயன்பாட்டுச் சட்டம்தான். முதலில், ஒருவர் ஏதோ சில காரணங்களுக்காக போதை மருந்திற்கு அறிமுகமாகி அதற்குப் பழகினபின்னர் அவர் நோயாளியாகிறார் எனில் அவரால் பிரக்ஞைபூர்வமாக அதைத் தவிர்க்க இயலாது. அவருக்கு போதை மருந்தும் ஒருவித மருந்தாகிவிடும். எனில் அத்தகையவரைப் பிடித்து ஆறுமாதங்கள் சிறையில் அடைப்பதால் என்ன பயன்? அடுத்து, போதை மருந்தை எடுத்துக்கொள்ளும் ஒருவர் சமூகத்திற்கு பாதிப்பை நேரடியாக உண்டுபண்ணுவதில்லை (திருட்டு, அடிதடி, கொலைக் குற்றங்களைச் செய்பவரைப் போல). இந்தியாவில் மொத்தமாக ஏழரை கோடி பேர்கள் போதை மருந்து அடிமைகள் என்று அரசின் அறிக்கையே சொல்கிறது ( https://socialjustice.gov.in/.../Magnitude_Substance_Use... ). இதை விட நிச்சயமாக பலமடங்கு அதிகமாகவே இருப்பார்கள். இளைஞர்கள், பதின்வயதினர் இடையே இன்று மது போதையை விட போதை மருந்து போதையே அதிகம் என்பதை அறிவோம். இத்தனை பேர்களையும் பிடித்து சிறையில் அடைக்க இய...

ஆன்லைனில் நாவல் வகுப்பு - தவற விடாதீர்கள்

  அரிஸ்டாட்டில் தனது “Poetics” (“கவிதையியல்”) நூலில் காரண-விளைவு தொடர்ச்சி இன்றி கதையே இல்லை என்பதை வலியூறுத்துகிறார். அவர் அத்துடன் நிற்பதில்லை; ஒரு முக்கிய பாத்திரத்தின் அமைப்புக்குள் காரண-விளைவு எப்படி செயல்பட வேண்டும் என்றும் விளக்குகிறார். அதாவது கதைக்குள் காரண-விளைவு தர்க்கப்படி சம்பவங்கள் நாமே நகர்வதில்லை, அவை ஒரு பிரதான பாத்திரத்தின் செயல்களின் ஊடாகத் தான் உயிர்பெறுகின்றன, ஆகையால் காரண-விளைவு என்பதன் மையமே இந்த பாத்திரம் தான் என்று வலியுறுத்துகிறார் அரிஸ்டாட்டில். இங்கிருந்து தான் அவர் ஒரு மனிதனின் அடிப்படையான கோளாறு, பிரச்சனை, தவறான புரிதல் (துன்பியல் வழு - tragic flaw) என்பது துன்பியல் கதைகளை முன்னகர்த்த அவசியமான ஒன்று எனும் ஒரு முடிவுக்கு வந்து சேருகிறார். துன்பியல் நாடகத்தின் அடிப்படையே ஒரு மகத்தான மனிதனின் வீழ்ச்சி என்பது அவருடைய நம்பிக்கை. ஏன் மகத்தானவனின் வீழ்ச்சி என்றால் ‘சல்லிப்பயல்களின்’ வீழ்ச்சியைப் பற்றி யாருக்கும் பெரிய அக்கறை இல்லை என்று அரிஸ்டாட்டில் கூறுகிறார். இது ஓரளவுக்கு நிஜம் தான். வீழ்ச்சி என்றாலே உயரத்தில் இருந்து கீழே விழுவது தானே. நான் என் படுக்கைய...

நாவல் வகுப்பு 2025

  பேருந்தோ ஆட்டோவோ கிடைக்காமல் அலுவலகத்துக்கு தாமதமாகப் போவது ஒரு எரிச்சலான அனுபவம் தான், ஆனால் அது ஒரு கதைக்குரிய வீழ்ச்சி அல்ல. அந்த தாமதத்தால் வேலை இழப்பு, அதனால் குடும்பத்தில் பல நெருக்கடிகள், தாமதத்தால் ஒரு உறவு முறிவது, உங்களைப் பற்றி நிர்வாகத்தில் மோசமான அபிப்ராயம் ஏற்படுவது, அதனால் ஒரு இழப்பு ஏற்படுவது அல்லது நட்பொன்று முறிந்து அதன் விளைவாக உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடுகிற பிரச்சனைகள் ஏற்பட்டால அது வீழ்ச்சியாகிறது. ஆனால் இது மட்டும் போதாது என்கிறார் அரிஸ்டாட்டில். இதைக் குறித்து மேலும் என்னிடம் விவாதித்துத் தெரிந்துகொள்ள என் நாவல் வகுப்பில் இணையுங்கள். தொடர்புக்கு 9790929153.

நாவல் எழுதக் கற்பிக்கும் வகுப்பு 2025

  இப்போது இலக்கிய வாசகர்கள் லட்சிய மனிதர்களை பிரதான பாத்திரங்களாக ஏற்றுக் கொள்ள சிரமப்படுகிறார்கள். அப்படியான பாத்திரங்களை செயற்கையானவர்கள், சினிமாத்தனமாவர்கள் என்றே அவர்கள் கருதுகிறார்கள். இந்த பின்னணியில் இருந்து நாம் அரிஸ்டாட்டிலின் கூற்றை எதிர்கொள்ளக் கூடாது என்பது இங்கு முக்கியம். அரிஸ்டாட்டில் தனது நூலிலேயே ‘உயர்ந்த மனிதனை’ ஒரு “தங்க பதக்கம்” எஸ்.பி சௌத்ரியாக அல்லது ராஜ்பாட் ரங்கதுரையாக மட்டும் முன்வைக்கவில்லை. அவர்கள் லட்சிய மனிதர்கள் அல்ல, மாறாக தமது பணியில் உயர்ந்த திறனுடன் விளங்குகிறவர்கள், சமூகத்தில் தம் செயல்பாட்டால் நல்ல மரியாதையுடன் விளங்குகிறவர்கள் என்று தான் வரையறுக்கிறார். (அந்த விதத்தில் மேற்சொன்ன சிவாஜி பாத்திரங்கள் கச்சிதமான அரிஸ்டாட்டிலிய நாயகர்கள்.) உ.தா., அவர் ஒரு நல்லாசிரியராக இருக்கலாம். மாணவர்களிடமும், பள்ளியிலும் மதிப்பு பெற்றவராக இருக்கலாம். அவர் ஒரு சிறந்த கவிஞராக, பாடகராக, சமூக சேவகராக இருக்கலாம். அல்லது தன் வேலையில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்து தன்னுடைய சிறிய வட்டத்தில் நல்ல பெயர் பெற்ற ஒரு குமாஸ்தாவாக கூட இருக்கலாம். அவர் திறமையளவில் குறைபட்டவராக இரு...

தொழில்முனைவோர் நீயா நானா

  வேலை செய்துகொண்டே வியாபாரம் ஆரம்பித்து பலத்த நட்டமடைந்த தொழில்முனைவோரைக் குறித்த இவ்வார நீயா நானா நன்றாக இருந்தது. எந்த அடிப்படை ஆய்வும் இல்லாமல் எப்படி இன்ஸ்டாகிராம் விளம்பரத்தை நம்பி முதலீடு செய்து மாட்டிக்கொள்கிறார்கள் என்று வியப்பாக இருந்தது. ஒருவர் மதுரையில் இருந்து சென்னையில் தேநீர் கடை ஆரம்பிக்க தன் குடும்பத்தை அழைத்து வருகிறார். ஆனால் வந்த பிறகே சென்னை கடை வாடகை அதிகமெனத் தெரிய வருகிறது. இது கூடத் தெரியாமலா முடிவெடுத்தார் என வியப்பாக இருந்தது. இன்னும் சிலர் கடன் வாங்கி பெரிய முதலீடு பண்ணி சிக்கிக் கொள்கிறார்கள். கருப்பட்டிக் காப்பி, வெரைட்டி தோசைக்கெல்லாம் பிராஞ்சைஸி எடுக்கிறார்கள் என்பதையும் நம்ப முடியவில்லை. அவசரம், சோம்பல், தொழில்முனைவோர் மோகம். அதனால் சமையலுக்கான மளிகைச் சாமானில் இருந்து பிற பொருட்கள், சமையற்காரர், வேலையாள், பிராண்ட் வரை யாராவது பண்ணிக் கொடுத்தால் பணம் முதலீடு செய்து லாபம் ஈட்டுவதை மட்டும் தாம் செய்துவிடலாம் என கனவு காண்கிறார்கள். எந்த அடிப்படையான திட்டமிடலோ pilot projectகளோ செய்து பார்க்காமல் தவறாக சில சமயங்களில் முதலீடு செய்கிற பெரிய நிறுவனங்களும் உ...

நாவல் எழுத்தாளர்களைப் பயிற்றுவிக்கும் வகுப்பு 2025

  ஒரு பிரதான பாத்திரத்தின் அமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு தமிழ் நவீன இலக்கியத்தில் சு.ராவின் “ஜெ.ஜெ சில குறிப்புகள்” நாவலை ஒரு தோதான உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். ஜெ.ஜெ கேரளத்தை சேர்ந்த ஒரு லட்சிய நாயகன். அவன் தன் இளமையில் ஒரு சிறந்த கால்பந்தாட்ட வீரனாக விளங்கி, பின்னர் இலக்கிய விமர்சகனாக மாறி ஒரு முக்கிய இலக்கிய ஆளுமையாக உருப்பெறுகிறான். அவனை தமிழகத்தை சேர்ந்த ஒரு இளம் எழுத்தாளன் சென்று சந்திக்கிறான். அவனுடைய வாழ்க்கைப் போக்கில் ஆர்வம் கொண்டு பின் தொடரும் இந்த தமிழ் எழுத்தாளனின் ஆய்விலும் பார்வையிலும் ஜெ.ஜெயின் வாழ்க்கை நாட்குறிப்புகளாக தொகுக்கப்படுகிறது. வெளியான போது அதன் வடிவ புதுமைக்காகவும், லட்சிய தெறிப்புகளுக்காகவும் பெரிய அலைகளை தோற்றுவித்த “ஜெ.ஜெ சில குறிப்புகளை” இப்போது படிக்கும் போது சிறப்புகளும் குறைகளும் துலங்குகின்றன. என்னதான் நான்லீனியராக எழுதப்பட்டிருந்தாலும் ஜெ.ஜெயின் சமரசம் செய்யாத துணிச்சலும், இலக்கிய விழுமியங்களின் மகத்துவம் மீது அவன் வைக்கும் நம்பிக்கையும், தன்னை அழித்து இலக்கியத்தை வளர்க்க அவன் தயங்காததும் நம்மை கவர்கின்றன. தன்னுடைய சூழலுடன் பொருந்தி...

கத்தரிக்காய் வியாபாரிகள்

  முன்னாள் பேராசிரியர் ஜான் ஜோசப் கென்னடி இக்கட்டுரையில் பேசியிருப்பது அப்பட்டமான உண்மை - தனியார்மயமாக்கலில் வெகுவாக குழம்பிப் போயிருப்பது கல்வித்துறைதான். மாணவர்களை நுகர்வோராகப் பாவிப்பதால் அவர்களை முதிர்ச்சியும் பயிற்சியும் அற்றவர்களாகப் பார்க்க உயர்கல்வித்துறை தயாரில்லை. பதிலுக்கு மாணவர்களை அனைத்தும் கற்றறிந்த மேதைகளாகவும், அவர்களை வேலைக்குத் தயாரித்து அனுப்பும் பொறுப்பு மட்டுமே ஆசிரியர்களுடையது எனும் நம்பிக்கை பரவலாகத் தோன்றியுள்ளது. யு.ஜி.ஸியே அதைத்தான் பரிந்துரைக்கிறது - அவர்கள் மாணவர்கள் வேலை செய்து கற்பதை ஊக்கப்படுவது கல்வி போதனை குறித்து அவநம்பிக்கையினாலே. கல்லூரியில் கற்பிக்கப்படும் எதுவும் இளைஞர்களுக்கு வேலை செய்யப் பயன்படுவதில்லை என்று அதிகமாக தொழிற்துறையைச் சார்ந்தவர்களும் முதலீட்டாளர்களும் நம்புகிறார்கள். மெல்லமெல்ல உயர்கல்வியே தேவையில்லை, பள்ளிப்படிப்புக்குப் பின்பு நேரடியாக வேலைக்கு எடுக்கலாம் என்பதே திட்டம். மிகமிக அடிப்படையான திறன்களை மட்டுமே கொண்ட எந்திரத்தனமான கூட்டம் இன்றைய தொழிற்துறைக்கு, தனியார் நிறுவனங்களுக்குப் போதும். செயற்கை நுண்ணறிவு பொறியியலில் கைவைத்து...

நாவலில் நனவோடை உத்தியும் காலமும

  நீங்கள் வெர்ஜீனியா வூல்பின் நாவல்களில் (Mrs Dalloway; To the Lighthouse) வரும் நனவோடை உத்தியைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். இதை தமிழில் நகுலனும் வெற்றிகரமாக பயன்படுத்தினார். இது வாசிக்க மிகவும் சுவையானது; நமது மனத்தின் காலம், அதன் போக்குக்கு, நமது பிரக்ஞையின் செயல்பாடு குறித்த ஆர்வம் கொண்டோருக்கு இந்த உத்தியிலான புனைவுகள் படிக்க உவப்பாக இருக்கும். “மிஸஸ் டேலோவேய்” நா வலில் உதாரணமாக டேலோவேய் எனும் பெண்மணி தன் வீட்டில் இருந்து வெளியே நடப்பதற்காக வருகிறார். அதற்கு அவரது பார்வையிலும், புலன்களிலும் பல விசயங்கள் பட்டு பாதிப்பை ஏற்படுத்துகின்றன, இவை பல நினைவுகளை முன்னுக்குப்பின்னாய் கிளர்த்துகின்றன. ஐந்தே வினாடிகளில் நம் மனம் நாமே அறியாமல் ஐம்பது விசயங்களைப் பரிசீலித்து விடுகிறது என்பதை இந்த வகை எழுத்து காட்டுகிறது. ஆனால் நான் லீனியரும் சரி நனவோடையும் சரி நேர்கோட்டு காலத்தை மறுக்கின்றனவே ஒழிய காரண-விளைவு தர்க்கத்தை மறுப்பதில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும். நாவல் எழுதும் கலையை மேலும் நுணுக்கமாகக் கற்க எனது ஆன்லைன் நாவல் வகுப்பில் இணையுங்கள். தொடர்புக்கு 979092915.

"அந்நியனில்" செயல்படும் காலம்

  காரண-விளைவு தர்க்கத்தை கடுமையாக மறுபரிசீலனை செய்ய முயன்ற நாவல் ஆல்பர்ட் காமுவின் “அந்நியன்”. இதில் ஒரு அட்டகாசமான ஆரம்ப காட்சி வருகிறது. மெர்சால்ட்டின் தாய் இறந்து போகிறார். அவனுக்கு செய்தி வருகிறது. ஆனால் என்று சரியாக அவர் இறந்து போனார் என்பதில் செய்தியில் இல்லை. அவனுக்கு குழப்பமாகிறது - மிக அண்மையில் இறந்து போயிருந்தால் அவனுடைய துக்கமும் மிக அதிகமாக் இருக்க வேண்டும். முன்னரே இறந்து போய் அவனுக்கு தெரியாமல் போயிருந்தால் அதற்காக மனம் உடைந்து அழ முடியாது, ஏனென்றால் காலம் செல்ல செல்ல மரணத்தின் தாக்கத்தில் இருந்து விடுபட்டு நிதானமாகி விட வேண்டும் என்பதே உலக இயல்பு என்று அவன் ஒரு விளக்கத்தை அதற்கு தருகிறான். இதில் மெர்சால்ட் சுட்டிக் காட்டுவது உலக நடப்பின் அபத்தத்தை அல்ல, காரண-விளைவு தர்க்கத்தில் காலத்துக்கு உள்ள இடத்தைக் காட்டி அது எவ்வளவு அபத்தமானது என்று அவன் நம்மை நோக்கி எள்ளி நகையாடுகிறான். நாவல் முழுக்க காமு மெர்சால்ட்டின் நடவடிக்கைகளில் ஒரு தர்க்க ஒழுங்கு இல்லாதவாறு பார்த்துக் கொள்கிறார், அதுவே அவனை அபத்த நாயகனாக்குகிறது. அவன் தன் மரணத்தறுவாயிலும் மனம் வருந்துவதில்லை. ஆனால் இவ்...

நாவல் எனும் மலர்

  நாவல் என்பது காலத்திலும் வெளியிலும் ஒரு மலரைப் போல பிரிந்து அகிலத்தை தனக்குள் அடக்கும் வடிவம். நாவலில் இத்தகைய விரிவை சாத்தியமாக்குவது எப்படி? அதற்கான பார்முலாக்களில் ஒன்று கதையின் பார்வைக் கோணத்தை எதிர்பாராத திசைகளில் திருப்புவது. பார்வைக் கோணம் என்றால் யார் பார்வையில் கதை சொல்லப்படுகிறது என்பது. “நான்” என்ற ஒரு சுயசரிதை தொனியிலா அல்லது “அவன்”, “அவள்”, “அவர்கள்” எனும் பொது பார்வையிலா? எந்த படைப்பும் இதில் ஏதாவது ஒன்றை மேற்கொள்ளத் தான் வேண்டும். “நான்” என்றும் ”அவன்” என்றும் இரண்டு கோணங்களில் ஒரு கதையை சொன்னால் நிறைய குழப்பங்கள் ஏற்படும். ஆனால் பின்நவீனத்துவ படைப்புகளில் இத்தகைய பரீட்சார்த்தங்கள் செய்யப்படுவதுண்டு. என்னைப் பொறுத்த மட்டில் இந்த பார்வைக் கோணத்தின் விதிகளை தலைகீழாய் கவிழ்த்த ஒரு நாவல் உண்டு: யுவான் ரூல்போவின் “பெட்ரோ பராமோ”. யுவான் பிரசியாடோ தன் அப்பாவான பெட்ரோ பராமோவை தேடி கொமாலா எனும் ஊருக்கு போகிறான். முழுக்க பேய்களால் ஆக்கிரமிக்கப்பட்ட ஊர் அது. நாவலின் துவக்கத்தில் நாவலாசிரியர் கதை சொல்ல துவங்கி பின்னர் அது நாயகனின் அப்பாவின் கண்ணோட்டத்தில் விரிந்து, பின்னர் நாய...

சொற்களை இடம் மாற்றுவது

  ஒரு நல்ல கதையில் கூட சில வரிகள் குழப்பமாக இருக்கும். உ.தா., "படுக்கையை விட்டு எழுந்த அவள் ஜன்னலுக்குப் பக்கத்தில் போய் நின்றுகொண்டு வெளியே பார்த்ததும், 'ஊருக்குப் போய் வந்தால் என்ன' என்ற எண்ணம் வந்தது." என்பதை "படுக்கையை விட்டு எழுந்து ஜன்னலுக்குப் பக்கத்தில் போய் நின்று வெளியே பார்த்ததும் அவளுக்கு 'ஊருக்குப் போய் வந்தால் என்ன' என்ற எண்ணம் வந்தது." அல்லது "படுக்கையை விட்டு எழுந்து ஜன்னலுக்குப் பக்கத்தில் போய் நின்ற அவளுக்கு வெளியே பார்த்ததும் 'ஊருக்குப் போய் வந்தால் என்ன' என்ற எண்ணம் வந்தது." என எழுதினால் இன்னும் தெளிவாக இருக்கும்.

"டெர்மினேட்டர் விண்வெளிக்குத் திரும்பியது"

  இம்மாத உயிர்மையில் வந்துள்ள என் கட்டுரை!

நாவல் எழுதுவதற்கான வழிகாட்டுதல்

  இருப்பதிலேயே ரொம்ப எளிதான காரியம் எழுதுவதே. இருப்பதிலேயே ரொம்ப கடினமான விசயமும் அது தான். காரணம் நம் மனம். நான் என்ன எழுதப் போகிறோம் என்பது முழுக்க நம் கட்டுப்பாட்டில் இல்லை. குறிப்பாய் நீங்கள் புனைவு எழுதும் போது. அதுவும் நாவல் எழுதும் போது. எழுதும் நம் விரல்களை அது நடுங்க செய்கின்றது. எழுத ஆரம்பிக்கும் முன்னரே மனதை இருளில் பதுங்கச் செய்கிறது. அல்லது எழுதுவதை ஒத்திப் போட வைக்கிறது. சிறுகதையில் நாம் செல்லும் திசை என்ன, இலக்கு என்ன என்பது குறித்த தெளிவு உள்ளது. மொழியும் உத்வேகமும் அகப்பாய்ச்சலுமே அப்போது நம் கட்டுப்பாட்டில் இல்லாமல் இருக்கும். மற்றபடி சிறுகதையின் போது கடிவாளம் நம் கையில் தான். குதிரை என்னதான் எகிறி வானுக்கும் பூமிக்குமாய் குதித்து பறந்தாலும் அதை நாம் கட்டுப்படுத்த முடியும். கட்டுரை ஒரு காளை வண்டி ஓட்டுவது போல. இன்னும் பாதுகாப்பான பயணம். நாவலை எழுதும் போது தினம் தினம் ஏதாவது ஒரு ஆச்சரியம் நம்மை காத்திருக்கும். நிறைய சிறு சிறு தருணங்களை விரித்து எழுத வேண்டி வரும். அப்போது என்ன தான் உண்மையில் நிகழும் என்பதை நாம் அறியோம். நாவலில் சுலபத்தில் விடுவிக்க முடியாத சிக்கல்க...

எழுத்து தரும் ஆறுதல்

  புனைவெழுத்தாளராக ஒவ்வொரு எழுத்தனுபவம் முடிந்த பின்னரும் நான் நினைப்பது: இன்று எனக்குள் வருத்தங்கள் இருந்தாலும் எழுத்து தரும் ஆறுதல் உள்ளது. அதை யாரும் என்னிடம் இருந்து பறிக்கக் கூடாது என எண்ணினேன். இன்று நான் நிம்மதியாக உறங்கச் செல்வேன். இன்று என் கனவில் நான் எழுத மாட்டேன். எனக்கு சலனங்களற்ற, ஆழ்ந்த கனவுகள் வாய்க்கும். நான் அடர் இருட்டின் பாதையில் நடக்கையிலும் எழுத்தெனும் தேவதூதன் என்னுடன் வருவான், கடும் துன்பத்தின் பள்ளத்தாக்கில் விழுந்தழியாமல் அவன் என்னைக் காப்பாற்றுவான் எனத் தோன்றுகிறது. எழுத்தாளனாக இருப்பதன் மிகப்பெரிய கொடுப்பினை இதுவே. எழுத்தாளனுக்குத் தனிமையே இல்லை. எழுதுகோல் எனும் தெய்வம் அவனுடன் என்றும் இருக்கும்! என்னுடைய ஆன்லைன் வகுப்பு ஜூலை - ஆகஸ்டில். இணையுங்கள். தொடர்புக்கு 9790929153.

எழுத்தாளரின் நேர நிர்வாகம்

  செல்வக்குமார்: பணி நேரம் போக சமூக வலைதளத்தில் நேரம் போகவிடுகிறேன் அண்ணா. அதைச் சரி செய்ய வேண்டும். முதலில் வாசிப்பிலும் வேகம் குறைந்து காணப்படுகிறேன். நீங்கள் சொல்வதை நான் செய்து பார்க்க வேண்டும் சுய பரிட்சையாக. நான்: சமூகவலைதளத்தில் படிப்பதை குறைத்து அதிலே எழுதுங்கள். நேர்மையாக எழுதுங்க. மனதுக்குப் பட்டதை மட்டும், அரசியல் சரிநிலை பார்க்காமல் எழுதுங்க. டிரண்டுகளைப் பொருட்படுத்தாமல் அதே நேரம் சுவாரஸ்யமாக எளிமையாக எழுதப் பழகுங்கள். எழுதக் கிடைக்கும் எல்லா இடங்களையும் பயன்படுத்துங்க. Always think as a writer, not as an individual, family man, friend, employee. யாராவது காறித்துப்பினால் கூட இதை எப்படி எழுத்தாக்கலாம் (கண்டெண்ட் அல்ல) என யோசியுங்கள். மேலும் தெரிந்துகொள்ள என்னுடைய ஆன்லைன் வகுப்பு ஜூலை - ஆகஸ்டில். இணையுங்கள்.

நாவல் எழுதும்போதான நெருக்கடிகள்

  நாவலை எழுதிப் போகையில் ஒரு கட்டத்தில் என் துயரங்கள், நடப்புலகில் நான் எதிர்கொள்ளும் அபத்தங்கள், அவை தரும் மண்டையிடியைப் பற்றி நான் கவலை கொள்ளத் தேவையில்லாமல் போகிறது. எழுதாத போதும் அவற்றை நான் மறந்திருக்கிறேன் அல்லது பொருட்படுத்தத் தேவையில்லை என நினைக்கிறேன். இதைப் பற்றி ஒரு உளவியல் பேராசிரியரிடம் நான் விசாரித்த போது ஒரு விளக்கம் சொன்னார்: “நாம் ஒவ்வொருவருக்குள்ளும் உணர்வுகளை செயலாக்கம் செய்வதற்கு என ஒரு டெம்பிளேட் உள்ளது. இதை ஒரு வண்ணக் கண்ணாடி என்று கூறலாம். இதை நாம் அணிந்து கொண்டதும் உலகை நாம் பார்க்கிற வண்ணம், தீவிரம் மாறுபடுகிறது. பச்சைக் கண்ணாடியெனில் உலகம் பச்சை, சிவப்பெனில் உலகம் சிவப்பு. இந்த நடப்பு உலகம் ஏற்படுத்தும் பாதிப்பை சார்ந்து அதை எப்படி அர்த்தப்படுத்துவது, அதை எந்தளவுக்குப் புரிந்து கொள்வது என்பதைத் தீர்மானிப்பது இந்த டெம்பிளேட் தான். சிலருக்கு ஒருவர் முறைத்தாலே கடும் கோபம் வந்து கத்தியைத் தூக்கி வீசத் தோன்றும், மற்றொருவரோ காறித் துப்பினால் கூட அது உறைக்கவே உறைக்காததைப் போல போய் விடுவார். இது அடுத்தவர்களின் செயல்களை, உலகின் நிறபேதங்களை நாம் எப்படி எதிர்கொள்ள வே...

டூரிஸ்ட் பேமிலி

  நாங்கள் பள்ளிக்கூடத்தில் குழந்தைகளாய் இருக்கையில் வகுப்பாசிரியரின் இயக்கத்தில் நாடகத்தில் நடிக்க வைப்பார்கள். அதில் எல்லாருமே நல்லவர்களாகத் தோன்றுவார்கள், அன்பாக இருப்பார்கள். ஏனென்றால் பெற்றோரும் தலைமையாசிரியரும் மற்றபடியான பாத்திரங்களில் குழந்தைகள் வருவதை விரும்ப மாட்டார்கள். நாங்கள் குழந்தைகள் எதைச் செய்தாலும் - அது பயங்கர செண்டிமெண்டலான காட்சியாக இருந்தாலும் - எல்லாரும் கைத்தட்டிச் சிரிப்பார்கள். "டூரிஸ்ட் பேமிலி" அப்படியானதொரு நாடகம். கடைசியில் சீக்கியர் ஈழத்தமிழ் பேசியபோது என் நண்பர் கதைத்தட்டி சிரித்து ரசித்தார். நான் அவரது தோளைத் தட்டிச் சொன்னேன், "தோழா, இது பயங்கர உணர்ச்சிகரமான காட்சி. மனம் கலங்காமல் சிரிக்கிறீங்களே..." அவர் அதற்கு "ஹா ஹா ஹா" என்று சிரித்தார். எனக்கு அப்போதுதான் அப்படம் ஏன் இத்தனை பேருக்குப் பிடித்திருக்கிறது எனப் புரிந்தது.

அடங்க மாட்டேங்கிறாங்க, என்ன செய்ய?

  யுடியூப் திரை விமர்சகர்கள் கலந்துகொண்ட இந்த வார "நீயா நானா" ஜாலியாக இருந்தது. அதில் திரைத்துறையினர் பக்கமிருந்து ராஜசேகர் என்பவர் பேசியதை மிகவும் ரசித்தேன். யுடியூபர் பிரஷாந்த் தன்னை இப்படி ஒரு நட்சத்திர நடிகரை விமர்சித்ததற்காக ஒரு கும்பல் ஆறுமாதங்கள் போனில் துன்புறுத்தியதாகச் சொன்னார். அதற்குப் பதிலளித்த ராஜசேகர் ஒரு படம் வெளியானதும் அதை யுடியூபர்கள் கழுவிக்கழுவி ஊற்றுவதால் யாரும் படம் பார்க்கவே வருவதில்லை, அதனால் நஷ்டமாகிட கோபம் கொள்ளும் தயாரிப்பாளர்கள் ஆள் வைத்து மிரட்டுகிறார்கள் என்றார். இங்குதான் காமிடி ஆரம்பமானது: பிரசாந்த் "அதுக்காக ஆள் வைத்து மிரட்டுவீங்களா?" என்றார். அதற்கு இவர் "அடங்க மாட்டேங்குறாங்களே சார், என்ன பண்ண?". உடனே பிரசாந்த் "அடங்கலைன்னா ஆள் வச்சு மிரட்டுவீங்களா?" "என்ன சார் பண்ண அடங்க மாட்டேங்கிறாங்களே..." நடுவே கோபிநாத் ஆள் வைத்து மிரட்டுவது சட்டப்படி குற்றம் என்றெல்லாம் எச்சரிக்கிறார். அந்த நபர் மறையாப் புன்னகையுடன் இருக்கிறார். இப்படியெல்லாம் மனம் திறந்து பேசுபவர்கள் அரிதாகத்தான் நீயா நானாவில் வருவார்கள். பெர...

திரை விலகிவிடுகிறது

  நான் சினிமாக்காரன் அல்ல. ஆனாலும் வெளியில் இருந்து பார்க்கும்போது ஒரு வணிகப்படம் நன்றாக 'அமைந்து' வருகிறது, அது நன்றாக எழுதப்படுவதோ, எடுக்கப்படுவதோ இல்லை என்று தோன்றுகிறது. எத்தனையோ குறுக்கீடுகள், இடையீடுகள், படத்துக்குத் தேவையில்லாத முடிவுகள், மாற்றங்கள், இவற்றால் மிக நன்றாக மேஜிக் போல ஒரு படம் உருவாகும். அது எப்படி என்று இயக்குனராலோ பிறராலோ சொல்ல முடியாது. நேர்முகங்களில் பாருங்கள் அவர்கள் ரொம்ப சாதாரணமானவர்களாக இருப்பார்கள். கலையைக் கரைத்துக் குடித்தவர்களாகவோ அறிஞர்களாகவோ அல்லர். அதனாலே படம் ரொம்பக் கேவலமாக வந்தாலும் அற்புதமாகி வென்றாலும் அவர்களுக்கு அதற்கான காரணம் தெரியும் எனத் தோன்றவில்லை. நீங்கள் ஒரு நாவலுக்கு அதன் எழுத்தாளரைப் பொறுப்பாக்கலாம். ஒவ்வொன்றும் அவருக்குத் தெரிந்தே நிகழ்கிறது. கனவு நிலையில் எழுதப்படும் பத்திகளைக் கூட அவரால் பின்னர் நீக்கவோ மேம்படுத்தவோ முடியும். ஆனால் சினிமாவுக்கு அவ்வாறு சொல்ல முடியாது (indie படங்களே விதிவிலக்கு). முற்போக்காளர்கள் கோபித்துக் கொள்ளாவிடில் ஒன்று சொல்கிறேன்: சினிமா என்பது ஒரு கேங் ரேப். "தக் லைப்" படத்தின் திரைக்கதையை ஒ...