முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தொழில்முனைவோர் நீயா நானா

 வேலை செய்துகொண்டே வியாபாரம் ஆரம்பித்து பலத்த நட்டமடைந்த தொழில்முனைவோரைக் குறித்த இவ்வார நீயா நானா நன்றாக இருந்தது. எந்த அடிப்படை ஆய்வும் இல்லாமல் எப்படி இன்ஸ்டாகிராம் விளம்பரத்தை நம்பி முதலீடு செய்து மாட்டிக்கொள்கிறார்கள் என்று வியப்பாக இருந்தது. ஒருவர் மதுரையில் இருந்து சென்னையில் தேநீர் கடை ஆரம்பிக்க தன் குடும்பத்தை அழைத்து வருகிறார். ஆனால் வந்த பிறகே சென்னை கடை வாடகை அதிகமெனத் தெரிய வருகிறது. இது கூடத் தெரியாமலா முடிவெடுத்தார் என வியப்பாக இருந்தது. இன்னும் சிலர் கடன் வாங்கி பெரிய முதலீடு பண்ணி சிக்கிக் கொள்கிறார்கள். கருப்பட்டிக் காப்பி, வெரைட்டி தோசைக்கெல்லாம் பிராஞ்சைஸி எடுக்கிறார்கள் என்பதையும் நம்ப முடியவில்லை. அவசரம், சோம்பல், தொழில்முனைவோர் மோகம். அதனால் சமையலுக்கான மளிகைச் சாமானில் இருந்து பிற பொருட்கள், சமையற்காரர், வேலையாள், பிராண்ட் வரை யாராவது பண்ணிக் கொடுத்தால் பணம் முதலீடு செய்து லாபம் ஈட்டுவதை மட்டும் தாம் செய்துவிடலாம் என கனவு காண்கிறார்கள்.

எந்த அடிப்படையான திட்டமிடலோ pilot projectகளோ செய்து பார்க்காமல் தவறாக சில சமயங்களில் முதலீடு செய்கிற பெரிய நிறுவனங்களும் உண்டு. ஆனால் அவ்வபோது ஏற்படும் நட்டத்தை ஈடுசெய்யும் சக்தி அவர்களுக்கு உண்டு. இவர்களுக்கு இல்லை.
என்னுடைய ஒரு மாணவர் இருக்கிறார். வகுப்பில் கவனம் செலுத்தாமல் இருப்பார், சேட்டை செய்வார். நான் அவரை அழைத்து நட்பாக விசாரித்ததும் சொன்னார்: அப்பாவுக்கு உடல் சரியில்லை என்றதும் அவர் பகுதி நேர மாலை வேலையில் சேர்ந்து தன் குடும்பத்துக்கு சம்பாதித்துக் கொடுக்கிறார். பகலில் படிக்கிறார். அந்த அழுத்தம் அவரை மனரீதியாக பாதிக்கிறது. நான் கொஞ்சம் பாராட்டியதும் அவர் உற்சாகமாகிவிட்டார். என் எல்லா வகுப்பிலும் கலந்துகொண்டு ஒழுங்காக இருக்க ஆரம்பித்தார். வீட்டுக்கு கீழேயே தோசைக்கடை வைத்து குடும்பமாகச் சேர்ந்து அதை நடத்துகிறவர்களையும் தெரியும். இவர்களெல்லாம் சுலபத்தில் தோற்க மாட்டார்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

நலத்திட்டங்களின் அடிப்படையான பிழை

  மகளிர் உதவித் (உரிமைத்) தொகைத் திட்டத்தைக் கைவிடுவதைக் குறித்து தவெக அரசு பரிசீலிக்க வேண்டும். அதற்காகச் செலவாகும் 15,000 கோடி ரூபாயை படித்து வேலை கிடைக்காமல் இருப்போரில் வருடாந்திர குடும்ப வருமானம் ஒரு அளவுக்கு மேல் குறைவாக இருப்போருக்கு அளிக்க வேண்டும். அதேபோல முறைசாரா தொழிலாளர்களுக்கு நொடிந்த தொழில்களில் ஈடுபட்டிருப்போருக்கும் கொடுப்பதை அரசு பரிலீக்க வேண்டும். அதாவது உதவி / உரிமைத் தொகையை பாலினம் சார்ந்ததாக அல்லாமல் தொழில் சார்ந்ததாகப் பார்க்க வேண்டும். மேற்சொன்ன பெண்களும் அப்போது இத்திட்டத்திற்குள் வந்துவிடுவார்கள். சொந்தமாக வீடும் சொத்தும் கொண்ட பெண்கள் இந்த தொகையைப் பெறுவதைத் தவிர்க்க இயலும். இந்த மாற்றத்திற்கான தேவைகளாக நான் கருதுவன: 1) வர்க்கரீதியாக இது திட்டமிடப்படாததால் நிறைய குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. 2) இதை அரசு மக்களுக்கு கொடுக்கும் லஞ்சமாக சிலர் காண்கிறார்கள். அதாவது பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அவர்களைத் தம் வசம் இழுப்பதற்காக அரசுகள் இத்திட்டங்களைக் கொண்டு வந்துள்ளதாக அவர்கள் நினைக்கிறார்கள். இதனால் மக்கள் நலத் திட்டத்துக்கே பெயர் கெடுகிறது. 3) தொழில்...