முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திரை விலகிவிடுகிறது

 நான் சினிமாக்காரன் அல்ல. ஆனாலும் வெளியில் இருந்து பார்க்கும்போது ஒரு வணிகப்படம் நன்றாக 'அமைந்து' வருகிறது, அது நன்றாக எழுதப்படுவதோ, எடுக்கப்படுவதோ இல்லை என்று தோன்றுகிறது. எத்தனையோ குறுக்கீடுகள், இடையீடுகள், படத்துக்குத் தேவையில்லாத முடிவுகள், மாற்றங்கள், இவற்றால் மிக நன்றாக மேஜிக் போல ஒரு படம் உருவாகும். அது எப்படி என்று இயக்குனராலோ பிறராலோ சொல்ல முடியாது. நேர்முகங்களில் பாருங்கள் அவர்கள் ரொம்ப சாதாரணமானவர்களாக இருப்பார்கள். கலையைக் கரைத்துக் குடித்தவர்களாகவோ அறிஞர்களாகவோ அல்லர். அதனாலே படம் ரொம்பக் கேவலமாக வந்தாலும் அற்புதமாகி வென்றாலும் அவர்களுக்கு அதற்கான காரணம் தெரியும் எனத் தோன்றவில்லை.

நீங்கள் ஒரு நாவலுக்கு அதன் எழுத்தாளரைப் பொறுப்பாக்கலாம். ஒவ்வொன்றும் அவருக்குத் தெரிந்தே நிகழ்கிறது. கனவு நிலையில் எழுதப்படும் பத்திகளைக் கூட அவரால் பின்னர் நீக்கவோ மேம்படுத்தவோ முடியும். ஆனால் சினிமாவுக்கு அவ்வாறு சொல்ல முடியாது (indie படங்களே விதிவிலக்கு). முற்போக்காளர்கள் கோபித்துக் கொள்ளாவிடில் ஒன்று சொல்கிறேன்: சினிமா என்பது ஒரு கேங் ரேப்.
"தக் லைப்" படத்தின் திரைக்கதையை ஒரு எழுத்தாளர் எழுதியிருந்தால் இந்நேரம் மொத்தப் பொறுப்பையும் அவர் மீது போட்டு சாத்தியிருப்பார்கள். நல்லவேளை அப்படி நிகழவில்லை. ஷங்கரின் படங்கள் சுஜாதாவின் மரணத்திற்குப் பின் மோசமாகின என்று சொல்லப்படுவதைக் கேட்கையில் எனக்கு சிரிப்பு வரும். அவர் பத்தாண்டுகள் கூடுதலாக வாழ்ந்திருந்தால் ஷங்கர் மீதான அடிகள் அவருக்கும் விழுந்திருக்கும். ஷங்கரின் படங்கள் சில சந்தர்பங்களால், நிபந்தனைகளால் சுவாரஸ்யமாக அமைந்தன, வேறு நிபந்தனைகளால் தோல்வியுற்றன. இப்படியான விசயங்கள் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே தமிழில் நடந்துள்ளன என வரலாறு சொல்கிறது - ஏன் ஓடுகிறது, ஓடவில்லை என யாருக்கும் தெரியாது. மிக மட்டமான திரைக்கதை கொண்ட படங்கள் பிய்த்துக்கொண்டு ஓடவில்லையா? முட்டாள்கள் வாழ்க்கையில் வெல்கிறார்கள், மிகக்கேவலமான ஆண்களை அழகிகளும் களங்கமற்ற பெண்களும் நேசிக்கிறார்கள், கொடுங்கோலர்கள் திரும்பத்திரும்ப தேர்தலில் வெல்கிறார்கள். சமையலே தெரியாதவர்கள் எதையெதையோ போட்டுச் செய்த சமையல் சுவை கூடுகிறது. ஜோலி ஜோசப் சயனைட் கொடுத்தும் கூட அவர் குடும்பத்தில் சிலர் சாகவில்லை.
சினிமா ஒரு கூட்டுத்துன்பியல், கூட்டு வன்முறை, அது சிலநேரங்களில் அழகாக மலர்கிறது, சிலநேரங்களில் இன்பம் அளிக்கிறது. பல நேரங்களில் அது ஆடை மாற்றிக்கொண்டிருக்கும்போதே திரை விலகிவிடுகிறது.
எவ்வளவோ சிறந்த நாவல்கள் வருகின்றன. நீங்கள் ஏன் அவற்றைப் பற்றியெல்லாம் விவாதிக்க மாட்டேன் என்கிறீர்கள்?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...