முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திரை விலகிவிடுகிறது

 நான் சினிமாக்காரன் அல்ல. ஆனாலும் வெளியில் இருந்து பார்க்கும்போது ஒரு வணிகப்படம் நன்றாக 'அமைந்து' வருகிறது, அது நன்றாக எழுதப்படுவதோ, எடுக்கப்படுவதோ இல்லை என்று தோன்றுகிறது. எத்தனையோ குறுக்கீடுகள், இடையீடுகள், படத்துக்குத் தேவையில்லாத முடிவுகள், மாற்றங்கள், இவற்றால் மிக நன்றாக மேஜிக் போல ஒரு படம் உருவாகும். அது எப்படி என்று இயக்குனராலோ பிறராலோ சொல்ல முடியாது. நேர்முகங்களில் பாருங்கள் அவர்கள் ரொம்ப சாதாரணமானவர்களாக இருப்பார்கள். கலையைக் கரைத்துக் குடித்தவர்களாகவோ அறிஞர்களாகவோ அல்லர். அதனாலே படம் ரொம்பக் கேவலமாக வந்தாலும் அற்புதமாகி வென்றாலும் அவர்களுக்கு அதற்கான காரணம் தெரியும் எனத் தோன்றவில்லை.

நீங்கள் ஒரு நாவலுக்கு அதன் எழுத்தாளரைப் பொறுப்பாக்கலாம். ஒவ்வொன்றும் அவருக்குத் தெரிந்தே நிகழ்கிறது. கனவு நிலையில் எழுதப்படும் பத்திகளைக் கூட அவரால் பின்னர் நீக்கவோ மேம்படுத்தவோ முடியும். ஆனால் சினிமாவுக்கு அவ்வாறு சொல்ல முடியாது (indie படங்களே விதிவிலக்கு). முற்போக்காளர்கள் கோபித்துக் கொள்ளாவிடில் ஒன்று சொல்கிறேன்: சினிமா என்பது ஒரு கேங் ரேப்.
"தக் லைப்" படத்தின் திரைக்கதையை ஒரு எழுத்தாளர் எழுதியிருந்தால் இந்நேரம் மொத்தப் பொறுப்பையும் அவர் மீது போட்டு சாத்தியிருப்பார்கள். நல்லவேளை அப்படி நிகழவில்லை. ஷங்கரின் படங்கள் சுஜாதாவின் மரணத்திற்குப் பின் மோசமாகின என்று சொல்லப்படுவதைக் கேட்கையில் எனக்கு சிரிப்பு வரும். அவர் பத்தாண்டுகள் கூடுதலாக வாழ்ந்திருந்தால் ஷங்கர் மீதான அடிகள் அவருக்கும் விழுந்திருக்கும். ஷங்கரின் படங்கள் சில சந்தர்பங்களால், நிபந்தனைகளால் சுவாரஸ்யமாக அமைந்தன, வேறு நிபந்தனைகளால் தோல்வியுற்றன. இப்படியான விசயங்கள் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே தமிழில் நடந்துள்ளன என வரலாறு சொல்கிறது - ஏன் ஓடுகிறது, ஓடவில்லை என யாருக்கும் தெரியாது. மிக மட்டமான திரைக்கதை கொண்ட படங்கள் பிய்த்துக்கொண்டு ஓடவில்லையா? முட்டாள்கள் வாழ்க்கையில் வெல்கிறார்கள், மிகக்கேவலமான ஆண்களை அழகிகளும் களங்கமற்ற பெண்களும் நேசிக்கிறார்கள், கொடுங்கோலர்கள் திரும்பத்திரும்ப தேர்தலில் வெல்கிறார்கள். சமையலே தெரியாதவர்கள் எதையெதையோ போட்டுச் செய்த சமையல் சுவை கூடுகிறது. ஜோலி ஜோசப் சயனைட் கொடுத்தும் கூட அவர் குடும்பத்தில் சிலர் சாகவில்லை.
சினிமா ஒரு கூட்டுத்துன்பியல், கூட்டு வன்முறை, அது சிலநேரங்களில் அழகாக மலர்கிறது, சிலநேரங்களில் இன்பம் அளிக்கிறது. பல நேரங்களில் அது ஆடை மாற்றிக்கொண்டிருக்கும்போதே திரை விலகிவிடுகிறது.
எவ்வளவோ சிறந்த நாவல்கள் வருகின்றன. நீங்கள் ஏன் அவற்றைப் பற்றியெல்லாம் விவாதிக்க மாட்டேன் என்கிறீர்கள்?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...