Skip to main content

Posts

Showing posts from December, 2025

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

புத்தாண்டு வாழ்த்துகள்

  காலம் தொடர்ந்து பெய்து கொண்டிருக்கும் ஒரு மழை என்று நவீன ஜென் கவிதையொன்று சொல்லும்: "மழை பெய்கிறது மழை பெய்கிறது மழை பெய்கிறது" காலத்தில் மனிதர்கள் காணாமல் போகிறார்கள். அவர்களுக்கு ஆசுவாசம் வேண்டுமெனில் அதற்கு ஒரு துவக்கமும் முடிவும் வேண்டும். புத்தாண்டு எனும் கருத்தாக்கம் காலத்தை நிறுத்தி ஆசுவாசிக்க உதவுகிறது. நம்மை காலத்தில் உணர நம் ஈகோவுக்கு அதில் ஒரு இடம் அளிக்க புத்தாண்டு உதவுகிறது. அதனாலே புத்தாண்டின்போது நம்மைப் புதிதாக உணர்கிறோம் - காலத்தை அல்ல. நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்! மிகக் குறைவான துன்பத்தையும் சற்று அதிக நிறைவையும் 2026 நமக்குத் தரட்டும்.

டொமனிக் ஆன் தெ லேடீஸ் பர்ஸ்

மிகப்பெரிய தர்க்க ஓட்டை கொண்ட கதை இது. ஆனால் இதை எப்படி இதன் திரைக்கதை எழுத்தாளர்கள் கௌதம் மேனனை நம்ப வைத்து, அவரும் எப்படி மம்முட்டியை நம்ப வைத்து படமாக எடுத்தார்கள் என ஆச்சரியமாக இருக்கிறது. இயல்பாகவே என்னதான் முயன்றாலும் இப்படம் பல்லிளித்தே ஆக வேண்டியிருக்கும் என்பதால் சொதப்பி விடுகிறது. அதேநேரத்தில் பெரிய வசதியோ ஆரோக்கியமோ இல்லாத ஒரு சாதாரண தனியார் துப்பறிவாளரின் அன்றாட உலகை, அவரது முயற்சிகளின் சாதாரணத்துவத்தை நன்றாகக் காட்டியுள்ளதை, அதிலுள்ள பகடியை ரசித்தேன். நாயகனான டொமனிக் (மம்முட்டி) தொடர்ந்து பொய் சொல்பவர். ஒரு காட்சியில் சொல்லும் காரணத்தை இன்னொன்றில் மாற்றிச் சொல்வார். அப்போது நாம் அவர் மீது இரக்கம் கொள்ளத்தக்க வகையில் அவரது பாத்திர அமைப்பை உருவாக்கி இருக்கிறார்கள். கௌதம் மேனனுக்கு தன் பாத்திரங்கள் ரத்த சக்கரை நோய் உள்ளோராக காட்டப் பிடிக்கும். இதில் மம்முட்டி long acting இன்சுலின் ஊசி போட்டுக் கொள்ளும் காட்சி வருகிறது. தன்பாலின ஈர்ப்பு அவர் படங்களில் எப்போதுமே எட்டிப் பார்க்கும், எதிர்பாலின உறவு கசப்பிலோ இழப்பிலோ முடியும். இப்படத்திலும் இவ்விசயங்கள் உள்ளன. இப்படத்திற்கு முக்க...

இரண்டு பெருந்துன்பங்கள்

  நவீன வாழ்க்கையை ஆக்கிரமித்திருக்கும் பெருந்துன்பங்கள் என்று இரண்டைச் சொல்வேன்: 1) நம் வாழ்க்கை மீது நமக்கு எந்தக் கட்டுப்பாடும் இருப்பதில்லை. பணம், சுற்றுச்சூழல், குடும்ப அமைப்பு, உறவுகள், உற்பத்தி உறவு என எதிலும் நமக்கென ஒரு முகமையோ அதிகாரமோ இல்லை. நாம் அதிலெல்லாம் இருக்கிறோமோ அல்லது மாயாவியாகத் திரிகிறோமா என்பதே தெரியவில்லை. இதனால் சதா ஒருவிதப் பதற்றத்திற்கு ஆட்பட்டிருக்கிறோம். அதைப் போக்க வன்முறை, போதை, கேளிக்கை, துய்ப்பு என உள்ளுக்குள் குறுகிக் கொண்டே போகிறோம், வெறுப்பாலும் கசப்பாலும் நிரம்பியிருக்கிறோம். நமது கொண்டாட்டங்கள் தப்பித்தல் மட்டுமே. அசலான நிம்மதியான தன்னம்பிக்கை ததும்பும் கொண்டாட்டங்கள் அல்ல. 2) நம் திறமைக்குப் பொருந்தாத வேலைகளைச் செய்யும்படி நிர்பந்திக்கப்படுகிறோம். நீங்கள் டெலிவரி பாய்ஸைப் பாருங்கள். விற்பனைப் பிரதிநிதிகள், சேவைத் தொழிலில் உள்ளோரைப் பாருங்கள். அவர்களுக்கும் அவர்கள் செய்யும் வேலைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. வேலைக்கு அதனளவில் முன்பிருந்த மரியாதை இன்றில்லை. வேலையென்பது அது ஈட்டித் தரும் பணத்தினால் மட்டுமே மரியாதையைப் பெறுகிறது. ஒரு டாஸ்மாக்கை நடத...

பேய்க்கதைகள்

எழுதுவதிலேயே சுலபம் பேய்ப்படங்கள்தாம். உதாரணமாக ஒரு குடும்பம் ஒரு well furnished வீட்டுக்குக் குடி போகிறார்கள். அங்கே உள்ள குளிர்பதனப்பெட்டி அல்லது டீப் பிரீஸரைப் பயன்படுத்தியபிறகு பேயின் ஆர்ப்பாட்டங்கள ஆரம்பிக்கின்றன. ஏனென்றால் அங்கு ஒருவரைக் கொன்று பதுக்கி வைத்திருந்தார்கள். அவரது உடலின் அணுக்கம் கொண்ட ஒவ்வொரு இடத்திலும் பேய் இருந்துகொண்டிருக்க அதைத் துரத்த அவருடைய பின்னணியைத் தேடி அக்குடும்பம் பயணிக்கிறது. அல்லது பேய் ஒரு நாய்க்குட்டிக்குள் புகுந்துவிட அதை அக்குடும்பத்தின் குழந்தையொன்றை தெரியாமல் எடுத்துக்கொண்டு வர ... செக்ஸ் ஹாரர் வேண்டுமா? குறும்புக்கார ஹீரோ புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது தன் கெர்ல் பிரண்டுடன் உறவுகொள்கிறார். அப்போது அவர் பயன்படுத்தும் ஆணுறையில் பேய் குடியிருப்பது அவருக்குத் தெரியாது. உறவின் உச்சத்தில் இருக்கையில் பேய் அவருக்குள் புகுந்த்து சன்னதம் கொள்கிறது. அத்துடன் .... இயற்கைப் பேரிடர் திரில்லர் வேண்டுமா? ஏதாவது ஒரு புராதனப் பொருள். அதைத் தீண்டினால் பேய் வந்து பேரிடரை ஏற்படுத்தும் என்று ஒரு ஐதீகம். இப்படி விதவிதமாக எடுக்கலாம். யாரும் தர்க்கம் குறித்து கேள்வி ...

திரள்வதன் பிரச்சினை

  பெருநகரங்களின் தோற்றத்திற்கும் பாசிசத்துக்கும் உள்ள தொடர்பு மறுக்க முடியாத உண்மை. அவ்வாறான மற்றொரு உண்மைதான் பண்பாட்டில் வேரற்று, வாழ்வில் அர்த்தத்தை இழந்து தவிக்கும் நவீனத் தனிமனிதர்கள் தம் பதற்றத்தில் இருந்து தப்பிக்க பெருந்திரளை நோக்கி வருவார்கள், அவர்கள் கிடைக்கும் வெளிகளில் எல்லாம் திரள்வார்கள், அவர்களைப் பயன்படுத்தி தம் அதிகாரத்தை நிரூபிக்க ஆளும் அரசுகள் விரும்பும் என்பதும். புத்தாண்டுக்கான பெருந்திரள் கொண்டாட்டங்கள் உண்மையில் மகிழ்ச்சியின் வெளிப்பாடு அல்ல, நோய்மையின் வெளிப்பாடுதான். அதாவது புத்தாண்டைக் கொண்டாடுவது அல்ல பிரச்சினை. திடீரென தனியர்களும் சிறுகுழுக்களுமான மக்கள் பெருங்கூட்டத்தை நாடுவதுதான். மக்கள் பெருங்கூட்டமாவதில்லை. மக்கள் தம் கற்பனையில் உள்ள பெருந்திரளை நாடுகிறார்கள். அவர்கள் அவ்வடிவத்திற்கும் தாமாகவே வந்து இணைகிறார்கள். இடம், வசதி, சூழல் இவை மட்டும் இருந்தால் போதும். ஆனால் இந்தியாவைப் போன்ற நாட்டில் இடம் குறைவு, ஜனங்களின் எண்ணிக்கை மிகமிக அதிகம். அரசு நினைத்தால் இதைத் தடுக்கலாம். ஆனால் செய்ய மாட்டார்கள். கட்டுப்பாடுகளை மட்டும் விதிப்பார்கள். ஏனென்றால் அரச...

துபாய் பயணம் ரத்தான கதை

பைக்கில் மைசூரில் இருந்து சென்னை வரைச் செல்ல வேண்டும் என்பதும் , அப்படியே குமரி மாவட்டம் வரை ஒரு நீண்ட பயணம் போக வேண்டும் என்பது என் கனவுகள். ஆனால் நண்பர்கள் சிலர் தொடர்ந்து அது கடினம், ஆபத்து என எச்சரித்தபடி இருந்தனர். நான் ஒரே நாளில் 200-250 கிலோமீட்டர் தொலைவுக்கு மேல் ஓட்டியதில்லை என்பதால் எனக்கும் சிறிது தயக்கம் இருந்தது. உடல் சோர்ந்துவிடாதா, கவனம் பிசகாதா, முதுகு வலிக்குமா? ஆனால் இக்கேள்விகளுக்கு எல்லாம் துல்லியமான விடை தருவதைப் போல ஒரு சம்பவம் அண்மையில் நடந்தது. டிசம்பர் 27 (2025) அன்று நான் ஈரோட்டுக்கு கட்டாயமாகச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. ஒரு மாதத்திற்கு முன்பே திட்டமிட்டு விட்டேன். நானும் பல்லவியும் 26 காலை 5 மணிக்கு மைசூரில் இருந்து கிளம்பி அங்கு 12 மணிக்குள் சென்று சேர வேண்டும். பயணத்தின்போது மூன்று இடைவேளைகளை எடுக்க வேண்டும். 28ஆம் தேதி காலை 5 மணிக்கு அங்கிருந்து கிளம்பி அப்பகுதியில் உள்ள அணை உள்ளிட்ட இயற்கை அழகு மிளிரும் பகுதிகளில் சுற்றிவிட்டு மதியம் 12 மணி போல மைசூர் புறப்பட வேண்டும். மதியம் 4 மணிக்குள் சத்தியமங்கலம் வனப்பகுதியைக் கடந்துவிட வேண்டும். சில மாதங்களுக்கு...

எனது புதிய நூல் - "படித்துதான் ஆகணுமா?"

இப்புத்தகம் சென்னைப் புத்தகத் திருவிழா 2025இல் வெளியாகிறது. பதிப்பகம் ஜீரோ டிகிரி.

தேர்வுக் குழுவுக்குத் தேவை ஒரு தகுதித் தேர்வு

//தேசிய செயற்குழு, நிறுவப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றி, முறையாக அமைக்கப்பட்ட அந்தந்த மொழிவாரியான நடுவர் குழுக்களின் பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளித்தது. பல தசாப்தங்களாக, இந்த செயல்முறைதான் இலக்கிய உலகில் அகாதமியின் நம்பகத்தன்மை மற்றும் சுதந்திரத்தை உறுதி செய்து வருகிறது. இந்தப் பரிந்துரைகளை நிறுத்தி வைப்பதற்கும், நடுவர் குழுவின் செயல்முறையை ஒரு "தணிக்கைக்கு" (Audit) உட்படுத்துவதற்கும் அமைச்சகம் எடுத்துள்ள முடிவு முற்றிலும் தேவையற்றது மற்றும் முன்னுதாரணமற்றது. சாகித்ய அகாதமி வரலாற்றில் இதுவரை எந்தவொரு காலக்கட்டத்திலும், நிபுணர் குழுக்களால் எடுக்கப்பட்ட இலக்கியத் தீர்ப்புகள் நிர்வாகத் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டதில்லை. இலக்கிய மதிப்பீடு என்பது நிதி அல்லது நடைமுறை சார்ந்த பரிவர்த்தனை அல்ல; அது நிபுணத்துவம், சக படைப்பாளிகளின் மதிப்பீடு மற்றும் கல்விசார் நேர்மை ஆகியவற்றின் அடிப்படையிலான ஒரு அறிவுசார் பயிற்சியாகும். இதனை அதிகாரத்துவ ஆய்வுக்கு உட்படுத்துவது என்பது நிறுவனத்தின் தன்னாட்சி அதிகாரத்தை ஆக்கிரமிப்பதற்கும், அகாதமியின் நோக்கத்தைச் சிதைப்பதற்கும் சமமாகும். - நாடாளுமன்ற உறுப்ப...

இளம் படைப்பாளரிடம் சொன்னது

  ஒரு இளம் எழுத்தாள நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன். அவர் தான் தொடர்ந்து எழுதியும் தனக்கு எந்த விருதோ அரசின் அங்கீகாரமோ கிடைக்கவில்லை என்று வருந்தினார். "எழுத்தில் இருந்து கிட்டத்தட்ட விலகிவிட்டவர்களே அதிகார வர்க்கத்திற்கு நெருக்கமாக இருப்பதால் எல்லாவித அங்கீகாரங்களையும் அள்ளிக்கொள்கிறார்கள்." என்று புலம்பினார். அவரை ஆறுதல்படுத்தும் பொருட்டு நான் ஒன்றைச் சொன்னேன். அதில் சிறிது உண்மையும் உள்ளதால் இங்கு பகிர்கிறேன்: இந்தியாவிலும் இந்திய மாநிலங்களிலும் ஆளும் அரசுகள் தம் ஆன்மாவில் தம்மை ஜனநாயக அரசாக உணர்வது இல்லை. அவை மன்னராட்சி மனநிலையில் உள்ளவையே. இதை பலவித குறியீடுகளைக் கொண்டு உணர்த்தியபடி இருப்பார்கள். அரசை நெருங்க நினைப்போர் பண்டைய காலத்தைப் போன்றே முதலில் அதிகார வர்க்கத்தை நெருங்குவார்கள். அங்கும் தம்மை அடிமைகளாக, புலரவலர்களாக, எடுபிடிகளாக, முகவர்களாக,போர்வீரர்களாக, விதூஷகர்களாக முன்வைப்பார்கள். முழுமையாக ஒப்புவிப்பர். அப்படியே அமைச்சர், முதல்வர் என்று நெருங்கிப் போவார்கள். இவர்களை நாம் நேரடியாக இவ்வாறு புரிந்துகொள்ளத் தேவையில்லை. மனதளவில் இவ்வாறு வரித்துக் கொண்டு நடந்துகொள்...

முட்டாள்களின் தன்னம்பிக்கை

  "The best lack all conviction,       while the worst      Are full of passionate intensity." - WB Yeats, "The Second Coming" "ஆகச் சிறந்தவர்கள் நம்பிக்கை இழக்கிறார்கள், அதேநேரம் இருப்பதிலே கழிசடைகள் தீவிரத்தின் பரவசத்தால் ஆட்பட்டுகிறார்கள்" - டபிள்யு பி யேட்ஸ், "இரண்டாம் வருகை" # முட்டாள்கள் மிகுந்த தன்னம்பிக்கையுடன் எதையும் செய்துகாட்டும் திறன் மிக்கவர்களாக இருப்பது நம் காலத்தின் நோய்மை. மிகப்பெரிய அபத்தங்களைக் கூட யோசிக்காமல் நியாயப்படுத்தி விட்டு அடுத்த அபத்தங்களை நிறைவேற்றப் பறப்பார்கள். தம்மைக் குறித்த விமர்சனங்களைப் புறங்கையால் தட்டிவிட்டு விட்டு தோல்வியாளர்கள் பிலாக்காணம் வைப்பது இயல்பு என்பார்கள். இக்கவிதையைப் படித்ததும் சட்டென அட நம் நாட்டின், நம் ஊரின் சூழலைப் பற்றி எழுதியிருக்கிறார் எனத் தோன்றியது.

ச. தமிழ்ச்செலவனுக்கு சாகித்ய அகாடெமி விருத

ச. தமிழ்ச்செல்வன் என் பிரியத்துக்குரிய படைப்பாளி அல்லர். அவரைக் குறித்துச் சிந்திக்கையில் எல்லாம் அவரது பலமும் பலவீனமும் மானுடவாதமும் மிகையான எளிமையும்தான் எனத் தோன்றும். ச. தமிழ்ச்செல்வன் முதன்மையாக ஒரு மானுடவாத எழுத்தாளர். சிறுகதையாளர். 40 ஆண்டுகளுக்கு மேலாக எழுதிக்கொண்டு வருகிறார்.ஆனால் நிறைய எழுதிக் குவித்தவரோ தமிழில் சிறுகதைகளில் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்களை செரித்தோ மறுத்தோ தன்னைத் தகவமைத்துக் கொண்டவர் அல்லர். அதனாலே அவர் முழுமையாகத் தன்னை எழுத்தாளர் என்று மட்டுமே கருதி வாழ்ந்தார் என்று கருத முடியாது. இடதுசாரி முற்போக்கு செயல்பாட்டாளர், ஆனாலும் தன் கதைகளில் அவர் மார்க்ஸிய பொருளாதார நோக்கில் சமூக அவலங்களைக் கண்டதில்லை என்பது என் பார்வை. அவர் மானுடவாத நோக்கிலேயே கொஞ்சம் கற்பனாவாதத்துடன் மனிதர்களைச் சித்தரித்தார். இது என்னை வெகுவாக ஆச்சரியப்படுத்திய ஒன்று. வண்ணதாசனின் கதையுலகை எளிய மக்களிடம் வைத்து மென்னுணர்வுகளை தழைதழைப்பு இன்றி நேரடியாகச் சொன்னால் தமிழ்ச்செல்வனின் கதையுலகம் தோன்றிவிடும் என எனக்குத் தோன்றும். ச. தமிழ்ச்செல்வன் ராணுவத்தில் இருந்திருக்கிறார் என்பது என்னை ஆச்சரியப்படுத...

தகுதி

  மாலைமலரில் சாகித்ய அகாடெமி விருதுகளைப் பற்றி இப்படி ஒரு செய்தியைப் பார்த்தேன்: //இந்த ஆண்டுக்கான விருதுகள் நேற்று அறிவிக்கப்பட இருந்த நிலையில் மத்திய கலாச்சார அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி விருது வென்றவர்களின் பெயர்கள் அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தேர்வு செயல்முறையில் அமைச்சகம் அதிருப்தி அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. தன்னாட்சி அமைப்பின் செயல்பாடுகளை மத்திய அரசு முடக்குவதாக சர்ச்சை எழுந்துள்ளது.// எது எப்படியோ அறிவித்ததை மாற்ற மாட்டார்கள் என நம்புகிறேன். வாக்குத் திருடியே ஆட்சி நடத்தும்போது தேர்வு செயல்முறை குறித்தெல்லாம் ஒன்றிய அரசு கவலைப்படுத்துவது சற்று அதிகப்படியானது.

விருதுக்கு அங்கீகாரம் இல்லை

  விருதுகளைப் பற்றின என் கருத்து எப்போதுமே இதுதான் - நாம் ஒருவரைக் காதலிக்கிறோம், அதனால் நாம் அவருக்கு அடிமையாகி விடுவதில்லை.முத்தம் ஒரு பரிசு. விருதும் ஒரு பரிசு. நீ எனக்கு அடிமையாக மாட்டாயா எனும் கோரிக்கை அது. நல்ல எழுத்தாளர்கள் தம் தோளில் விழுந்த அழகிய கரங்களை புன்னகையுடன் விலக்கி விட்டு முத்தத்துக்கு நன்றி என்று கடந்துவிடுவார்கள். அவர்கள் எப்போதுமே முத்தமிட்டவர்களை எதிர்ப்பார்கள். மறுப்பார்கள். தம் பாதையில் தொடர்ந்தபடியே இருப்பார்கள். சில எழுத்தாளர்கள் எப்போதுமே மனைவியின் மடியில் பூனையாக இருக்கும் மனநிலை கொண்டவர்கள். அவர்கள் இன்னும் முத்தம் கொடு என்று பின்னாலே திரிவார்கள். ஆகையால் நாம் விருதை எதிர்க்கத் தேவையில்லை. அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அது நம்மைப் பயன்படுத்த அனுமதிக்கலாகாது. விருதை அச்சத்துடன் எதிர்கொள்ளத் தேவையில்லை. அரசு, தேசம், தேசியம் ஆபத்தானவை எனும் தாராளமய முற்போக்குச் சிந்த்னையின் விளைவே அவ்வச்சம். ஆனால் தேசமும் நம்மை உள்ளடக்கியதுதான். அது நம்மில் இருந்து விளைவதே. நாமே தேசத்தையும் தேசியத்தையும் அதிகார வர்க்கத்தையும் நம் மனத்திலும் உடலிலும் இருந்து உற்பத்தி செய்...

ஶ்ரீனிவாசனின் உலகம் - அஞ்சலி

  நான் என் பதின்பருவத்திலும், பின்னர் இருபதுகளிலும் வெகுவாக ரசித்தவை ஶ்ரீனிவாசன் இயக்கிய, நடித்த நகைச்சுவை, பகடிப் படங்கள். சத்தியன் அந்திக்காடு எனும் இயக்குநருடன் இணைந்து அவர் உருவாக்கிய / நடித்த "சந்தேஷம்", "நாடோடிக் காற்று", "பட்டணப் பிரவேசம்", "வரவேல்பு", "பொன் முட்டை இடுந்ந தாறாவு", "சன்மனசு உள்ளவர்க்கு சமாதானம்", ப்ரியதர்ஷனுடன் இணைந்து உருவாக்கி நடித்த "மிதுனம்", தானே எழுதி இயக்கி நடித்த "சிந்தா விஷிஷ்டயாய ஷ்யாமளா" ஆகய படங்கள் முக்கியமானவை எனக் கருதினேன். இப்போதும் மனம் களைத்திருக்கும் போது நான் அப்படக் காட்சிகளைப் பார்த்து மனம் விட்டுச் சிரிப்பதுண்டு. ஆனால் நகைச்சுவையுடன் மட்டும் அவர் நிற்கவில்லை. கொஞ்சம் ஆபத்தான இடத்துக்கு நகர்ந்து சமூக அரசியல், சமூகப் பொருளாதார பகடிகளையும் எழுதி இயக்கினார். நம்மூரில் வடிவேலுவின் நகைச்சுவை வசனங்கள் அன்றாட வாழ்க்கையில் ஒன்று கலந்துள்ளதைப் போலத்தான் அங்கு அவரது வரிகளும். வடிவேலுவைப் போலவே அவரும் வேலை, சுய-அமைவுக்கான போராட்டங்கள், அவமானங்களை படியாக்கி, குரூரமான அனுபவவ...

ஆய்வுக் கட்டுரை

“Policies and Practices for Supporting Learners with Disabilities in Digital Learning Environments in Indian Higher Education,” எனும் தலைப்பிலான என் அத்தியாயம்   Advancing Access to Digital Learning எனும் நூலில் வெளியாகி உள்ளது. இதன் தொகுப்பாசிரியர் Florence Williams (University of Central Florida). பதிப்பாளர் IGI Global. ஒரு அயல்நாட்டுப் பதிப்பு நூலில் வெளியாகும் என் முதல் ஆய்வுக் கட்டுரை இது.

சாருவும் கெர்ட் வொனெகெட்டும்

  எனக்கு சாருவின் நகைச்சுவையில் உள்ள கட்டற்ற தன்மை பிடிக்கும். அதை ஒரு அபத்த நகைச்சுவை என்று சொல்லலாம். அதில் ஒரு குழந்தைமை எப்போதும் இருக்கும். குறிப்பிட்ட நபர்களை, நம்பிக்கைகளை பகடி செய்வது அவரது நோக்கமாக இருக்காது. யாருமே பார்க்கவோ பேசவோ விரும்பாத ஒன்றைப் பகடி செய்வார். அந்த ஒன்று சந்தர்ப்பத்துக்கு ஏற்ப மாறும். அதை ஒரு எதிர்மறை கடப்புநிலைப் பொருள் (negative transcendent) என்றோ நிகழாத இன்மை (unrealized emptiness) என்றோ சொல்லலாம். எதிர்மறை கடப்புநிலைப் பொருள் என்றொன்றைப் பற்றி யாரும் சொல்லியிருக்கவில்லை. குந்தர் ஆண்டர்ஸ் இதை எதிர்காலத்தில் தொழில்நுட்ப ஆதிக்கத்தால் நாம் நமது முன்னேற்றத்தால் நம்மைதே கடந்து அழிவை நோக்கிப் போவோம் எனும் பொருளில் பயன்படுத்தினார். நான் இதை வெற்றுக்குறிப்பான் எனும் பொருளில் பயன்படுத்துகிறேன். சாரு தொடர்ந்து ஆன்மீகம், தன்னைக் கடந்த மகத்தான அனுபவங்கள் குறித்து எழுதுவார். அதனூனே தான் அவரது இந்தப் பகடியும் நிகழும். அவரது எழுத்தின் அடிநாதமே சொல்ல வரும் விசயத்தைக் கடந்த உணர்வுநிலையை நமக்குத் தருவதுதான். இதுவே அதன் கடப்புநிலைத்தன்மை. ஆனால் அவர் நகைச்சுவை என்று வ...

கோலி: வயதில் பின்னுக்குப் போவது

நடந்து முடிந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கோலி மட்டையாடியதைப் பார்த்தபோது அவர் மீது எனக்கு முன்பிருந்ததை விட பலமடங்கு அதிகமான மரியாதை ஏற்பட்டது. அவரது வயதுக்கும் தொழில்வாழ்க்கையில் உள்ள சரிவுக்கும் இது ஒரு மகத்தான சாதனை. இழப்பதற்கு ஏதுமில்லை என்பதாக ஆடினார். தொழில்நுட்பரீதியாகவும் மிகச்சிறந்த இடத்தில் இருக்கிறார் - என்னை மிகவும் கவர்ந்தது லாங் ஆனிலோ கவர் பகுதியிலோ சிக்ஸர் அடிக்க அவர் முன்பைப் போல இறங்கி வர இப்போது தேவையிருக்கவில்லை என்பது. அவரது இடதுகால் முன்னே வர பந்தின் திசைக்கு ஏற்ப அவரது காலும் தோளும் சரிய தலை மிகச்சரியான இடத்தில் இருக்க பந்தை அந்த நிலையில் இருந்து தரையோடு விரட்டவோ தூக்கி சிக்ஸர் அடிக்கவோ முடிகிறது. அவ்வளவு சீக்கிரமாகப் பந்தை கணித்துத் தயாராகி விடுகிறார். இந்த வயதில் ரோஹித் நன்றாக ஆடினாலும் அவரால் கூட இவ்வளவு மின்னல் வேகத்தில் தயாராக பந்தை எதிர்கொள்ள முடியவில்லை. இப்படி ஒருவர் ஆடும்போது அவர் பந்து வீச்சாளரின் மனதுக்குள் புகுந்து அவரைக் கட்டுப்படுத்துவதான ஒரு பிரமை ஏற்படும். இதற்கு முன்பு சச்சினும் லாராவும் இப்படி ஆடிப் பார்த்திருக்கிறோம். டிவுல்ல...

ஆண் பாவம் - அப்பாவின் குட்டி அடிமை

  " ஆண் பாவம்” ஒரு சுவாரஸ்யமான நீதிமன்ற நாடகம் (court room drama). ஆண்களின் தரப்பை எடுத்துப் பேசுகிற சில படங்களில் “ஆண் பாவத்துக்கு” முக்கியமான இடம் உண்டு. இன்று சமூகத்திலும், சமூகவலைதளங்களிலும், சட்டத்திலும் ஆண்களுக்குப் பாதகமாக உள்ள விசயங்களை ஆற்றல் மிக்க வசனங்களால் எடுத்து வைக்கிறார் இயக்குநர் கலையரசன் தங்கவேலு. ஆண்கள் குடும்பத்துக்காக கடுமையாக உழைத்து தியாகங்கள் செய்து ஒரு பட்டுப்புழுவின் கூட்டைப் போல குடும்ப வாழ்க்கையை உருவாக்கும்போது மனைவி “நீ என்னுடன் நேரம் செலவிடவில்லை” எனக் கூறி பிரியக் கோருவது, சொந்தப் பிள்ளையை அவரிடம் இருந்து பறிப்பதுடன் அவரை ஒருபோதும் பார்க்கவிடாமல் தடுப்பதைச் சொல்லும் இடம் என் கண்களில் நீரை வரவழைத்தன. நான் என் அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த பல்லவியையும் பார்த்தேன். அவளும் அழுதுவிட்டிருந்தாள். ஏனென்றால் இதில் ஓரளவுக்கு உண்மை உள்ளது - ஒன்று இன்றைய வேலை நேரம் அதிகம், மனம் களைத்துக் காலியாகும் அளவுக்கு உழைக்க வேண்டும். வீட்டுக்கு வந்ததும் கணவனால் சாக்லேட் பாயாக மாறிக் கொஞ்ச முடியாது. பேசும் சக்தி இருக்காது. அதைவிடப் பெரிய சிக்கல் இதையெல்லாம் மனைவிய...