முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இரண்டு பெருந்துன்பங்கள்

 

நவீன வாழ்க்கையை ஆக்கிரமித்திருக்கும் பெருந்துன்பங்கள் என்று இரண்டைச் சொல்வேன்:

1) நம் வாழ்க்கை மீது நமக்கு எந்தக் கட்டுப்பாடும் இருப்பதில்லை. பணம், சுற்றுச்சூழல், குடும்ப அமைப்பு, உறவுகள், உற்பத்தி உறவு என எதிலும் நமக்கென ஒரு முகமையோ அதிகாரமோ இல்லை. நாம் அதிலெல்லாம் இருக்கிறோமோ அல்லது மாயாவியாகத் திரிகிறோமா என்பதே தெரியவில்லை. இதனால் சதா ஒருவிதப் பதற்றத்திற்கு ஆட்பட்டிருக்கிறோம். அதைப் போக்க வன்முறை, போதை, கேளிக்கை, துய்ப்பு என உள்ளுக்குள் குறுகிக் கொண்டே போகிறோம், வெறுப்பாலும் கசப்பாலும் நிரம்பியிருக்கிறோம். நமது கொண்டாட்டங்கள் தப்பித்தல் மட்டுமே. அசலான நிம்மதியான தன்னம்பிக்கை ததும்பும் கொண்டாட்டங்கள் அல்ல.

2) நம் திறமைக்குப் பொருந்தாத வேலைகளைச் செய்யும்படி நிர்பந்திக்கப்படுகிறோம். நீங்கள் டெலிவரி பாய்ஸைப் பாருங்கள். விற்பனைப் பிரதிநிதிகள், சேவைத் தொழிலில் உள்ளோரைப் பாருங்கள். அவர்களுக்கும் அவர்கள் செய்யும் வேலைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. வேலைக்கு அதனளவில் முன்பிருந்த மரியாதை இன்றில்லை. வேலையென்பது அது ஈட்டித் தரும் பணத்தினால் மட்டுமே மரியாதையைப் பெறுகிறது. ஒரு டாஸ்மாக்கை நடத்துபவர் ஒரு ஆசிரியரை விட பலமடங்கு மேலானவர் இங்கு. சவுக்கு சங்கர் அவருடைய சொத்து மதிப்பினாலே ஒரு அரசியல் போராளியை விட அதிக அதிகாரமும் மதிப்பும் பெற்றவர். மோசடிப் பேர்வழிகள் தம் அதிகாரத்தாலும் பணத்தாலும் கொண்டாடத்தக்கவர்கள் ஆகிறார்கள். இப்படி எல்லாமே தலைகீழாகி விட நாம் நம் வேலையில் இருந்து வேலையைச் செய்யும் முன்பே வெளியேற்றப்படுகிறோம். அவநம்பிக்கையுற்று வேலையை அசிரத்தையாகச் செய்வோர் பெருகி விட்டனர். இது தமக்கான வேலையல்ல எனும் எண்ணமே அவர்களைச் செலுத்துகிறது.

இக்காரணங்களாலே பெரும்பாலானோர் ஒருவித சமூக மனவியாதிக்கு ஆட்படுகிறார்கள். கடும் வறுமையால் மக்கள் துன்புறும்போது அது பசிப் பிரச்சினை. போரினால் நிலையழியும்போது அது அழிவின் பிரச்சினை. ஆனால் தன்னிலிலும் பிறரிலும் பொருந்த முடியாமல் போகும்போது, வேலை, குடும்பம், சமூகம் எல்லாமே மனிதர்களை வெளியேற்றும்போது அது சமூகப் பைத்தியமாக வெடிக்கிறது. இந்தப் பைத்தியத்திற்கு மருந்து மாத்திரைகள் தீர்வல்ல.

சமூகப் பொருளாதார, சமூகக் கலாச்சார தீர்வுகளே நமக்குத் தேவை. மனிதர்களுக்கு தாம் வாழும் வெளியில் - அகவெளியிலும் புறவெளியிலும் - உரிமையும் முகமையும் வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...