முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கோலி: வயதில் பின்னுக்குப் போவது



நடந்து முடிந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கோலி மட்டையாடியதைப் பார்த்தபோது அவர் மீது எனக்கு முன்பிருந்ததை விட பலமடங்கு அதிகமான மரியாதை ஏற்பட்டது. அவரது வயதுக்கும் தொழில்வாழ்க்கையில் உள்ள சரிவுக்கும் இது ஒரு மகத்தான சாதனை. இழப்பதற்கு ஏதுமில்லை என்பதாக ஆடினார். தொழில்நுட்பரீதியாகவும் மிகச்சிறந்த இடத்தில் இருக்கிறார் - என்னை மிகவும் கவர்ந்தது லாங் ஆனிலோ கவர் பகுதியிலோ சிக்ஸர் அடிக்க அவர் முன்பைப் போல இறங்கி வர இப்போது தேவையிருக்கவில்லை என்பது. அவரது இடதுகால் முன்னே வர பந்தின் திசைக்கு ஏற்ப அவரது காலும் தோளும் சரிய தலை மிகச்சரியான இடத்தில் இருக்க பந்தை அந்த நிலையில் இருந்து தரையோடு விரட்டவோ தூக்கி சிக்ஸர் அடிக்கவோ முடிகிறது. அவ்வளவு சீக்கிரமாகப் பந்தை கணித்துத் தயாராகி விடுகிறார். இந்த வயதில் ரோஹித் நன்றாக ஆடினாலும் அவரால் கூட இவ்வளவு மின்னல் வேகத்தில் தயாராக பந்தை எதிர்கொள்ள முடியவில்லை. இப்படி ஒருவர் ஆடும்போது அவர் பந்து வீச்சாளரின் மனதுக்குள் புகுந்து அவரைக் கட்டுப்படுத்துவதான ஒரு பிரமை ஏற்படும். இதற்கு முன்பு சச்சினும் லாராவும் இப்படி ஆடிப் பார்த்திருக்கிறோம். டிவுல்லியர்ஸும் கூடத்தான். அவர்களுக்கும் இவருக்கும் ஒரே வித்தியாசம் அவர்களால் மட்டையின் கிரிப்பை நினைத்த நேரத்தில் மாற்றி ஆடப்ப்போகும் ஷாட்டை மாற்ற முடியும் என்பது. ஒரே நிலையில் இருந்து நான்கு ஷாட்களை ஆட முடியும் என்பது. கோலியும் அந்த இடத்துக்கு வந்தால் அபாரமாக இருக்கும்.
இன்னும் இரண்டாண்டுகள் இப்படி ஆடினால் நிச்சயமாக ஐ.சி.சி ரேட்டிங்கில் மேலே போய்விடுவார். அவரால் இப்போதைக்கு டெஸ்டிலும் ஆட முடியும் என்றாலும் அது அவரது ஆட்டத்தின் துணிகரத்தை, சரளத்தை குறைத்துவிடும். பந்தை ஆப் ஸ்டம்புக்கு மேல் விடுவதிலே கவனம் செலுத்தி ஒருநாள், டி20யில் பின்னுக்குப் போய் விடுவார். அடுத்த இரண்டாண்டுகளிலும் அவர் வெள்ளைப் பந்தில் கவனம் செலுத்துவதே நல்லது. அதில் மிகப்பெரிய உச்சங்களை அவர் அடைய முடியும். எளிதாக 200 ஸ்டிரைக் ரேட்டில் ஆட முடியும். இந்த தொழில்நுட்ப புத்திசாலித்தனத்தைப் பார்க்கையில் வரப்போகும் ஐ.பி.எல்லில் ரன்களை வேகமாகக் குவிக்கப் போகிறார் என்பது தெரிகிறது.

ஒருவரால் ஸ்டம்புக்கு குறுக்கே விளாசாமல் இப்படி மின்னல் வேகத்தில் ஆட முடியும் எனப் பார்க்கவே பரவசமாக இருக்கிறது. வயது என்பது ஒரு கற்பனைதானே, உடற்தகுதி இருந்தால் எதுவும் முடியும் என்பதைப் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. சச்சினின் மிகச்சிறந்த ஆட்டத்தை 35 வயதுக்கு மேல் தந்ததைக் கண்டது மீண்டும் கண்முன்னே வருகிறது. இந்த வயதில் அவர்களால் தம் ஆட்டத்தை எளிமைப்படுத்தி அதிலொரு துல்லியத்தைக் கொண்டு வருவதும் முடிகிறது. மிகக்குறைந்த ஆற்றலை ஒற்றைப் புள்ளியில் குவித்து சாதிக்கத் தெரிகிறது. கிட்டத்தட்ட குழந்தைகளைப் போல ஆடுகிறார்கள். சரியாகப் பந்தின் திசையைப் பிடித்து அதை அடிப்பதில், இன்பம் அடைவதில் கவனம் செலுத்துகிறார்கள். வயதில் பின்னுக்குப் போய் விடுகிறார்கள். ஆட்டதை விட இதைக் கவனிக்கவே மனம் துள்ளுகிறது.

(7 டிசம்பர் 2025)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...