முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கோலி: வயதில் பின்னுக்குப் போவது



நடந்து முடிந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கோலி மட்டையாடியதைப் பார்த்தபோது அவர் மீது எனக்கு முன்பிருந்ததை விட பலமடங்கு அதிகமான மரியாதை ஏற்பட்டது. அவரது வயதுக்கும் தொழில்வாழ்க்கையில் உள்ள சரிவுக்கும் இது ஒரு மகத்தான சாதனை. இழப்பதற்கு ஏதுமில்லை என்பதாக ஆடினார். தொழில்நுட்பரீதியாகவும் மிகச்சிறந்த இடத்தில் இருக்கிறார் - என்னை மிகவும் கவர்ந்தது லாங் ஆனிலோ கவர் பகுதியிலோ சிக்ஸர் அடிக்க அவர் முன்பைப் போல இறங்கி வர இப்போது தேவையிருக்கவில்லை என்பது. அவரது இடதுகால் முன்னே வர பந்தின் திசைக்கு ஏற்ப அவரது காலும் தோளும் சரிய தலை மிகச்சரியான இடத்தில் இருக்க பந்தை அந்த நிலையில் இருந்து தரையோடு விரட்டவோ தூக்கி சிக்ஸர் அடிக்கவோ முடிகிறது. அவ்வளவு சீக்கிரமாகப் பந்தை கணித்துத் தயாராகி விடுகிறார். இந்த வயதில் ரோஹித் நன்றாக ஆடினாலும் அவரால் கூட இவ்வளவு மின்னல் வேகத்தில் தயாராக பந்தை எதிர்கொள்ள முடியவில்லை. இப்படி ஒருவர் ஆடும்போது அவர் பந்து வீச்சாளரின் மனதுக்குள் புகுந்து அவரைக் கட்டுப்படுத்துவதான ஒரு பிரமை ஏற்படும். இதற்கு முன்பு சச்சினும் லாராவும் இப்படி ஆடிப் பார்த்திருக்கிறோம். டிவுல்லியர்ஸும் கூடத்தான். அவர்களுக்கும் இவருக்கும் ஒரே வித்தியாசம் அவர்களால் மட்டையின் கிரிப்பை நினைத்த நேரத்தில் மாற்றி ஆடப்ப்போகும் ஷாட்டை மாற்ற முடியும் என்பது. ஒரே நிலையில் இருந்து நான்கு ஷாட்களை ஆட முடியும் என்பது. கோலியும் அந்த இடத்துக்கு வந்தால் அபாரமாக இருக்கும்.
இன்னும் இரண்டாண்டுகள் இப்படி ஆடினால் நிச்சயமாக ஐ.சி.சி ரேட்டிங்கில் மேலே போய்விடுவார். அவரால் இப்போதைக்கு டெஸ்டிலும் ஆட முடியும் என்றாலும் அது அவரது ஆட்டத்தின் துணிகரத்தை, சரளத்தை குறைத்துவிடும். பந்தை ஆப் ஸ்டம்புக்கு மேல் விடுவதிலே கவனம் செலுத்தி ஒருநாள், டி20யில் பின்னுக்குப் போய் விடுவார். அடுத்த இரண்டாண்டுகளிலும் அவர் வெள்ளைப் பந்தில் கவனம் செலுத்துவதே நல்லது. அதில் மிகப்பெரிய உச்சங்களை அவர் அடைய முடியும். எளிதாக 200 ஸ்டிரைக் ரேட்டில் ஆட முடியும். இந்த தொழில்நுட்ப புத்திசாலித்தனத்தைப் பார்க்கையில் வரப்போகும் ஐ.பி.எல்லில் ரன்களை வேகமாகக் குவிக்கப் போகிறார் என்பது தெரிகிறது.

ஒருவரால் ஸ்டம்புக்கு குறுக்கே விளாசாமல் இப்படி மின்னல் வேகத்தில் ஆட முடியும் எனப் பார்க்கவே பரவசமாக இருக்கிறது. வயது என்பது ஒரு கற்பனைதானே, உடற்தகுதி இருந்தால் எதுவும் முடியும் என்பதைப் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. சச்சினின் மிகச்சிறந்த ஆட்டத்தை 35 வயதுக்கு மேல் தந்ததைக் கண்டது மீண்டும் கண்முன்னே வருகிறது. இந்த வயதில் அவர்களால் தம் ஆட்டத்தை எளிமைப்படுத்தி அதிலொரு துல்லியத்தைக் கொண்டு வருவதும் முடிகிறது. மிகக்குறைந்த ஆற்றலை ஒற்றைப் புள்ளியில் குவித்து சாதிக்கத் தெரிகிறது. கிட்டத்தட்ட குழந்தைகளைப் போல ஆடுகிறார்கள். சரியாகப் பந்தின் திசையைப் பிடித்து அதை அடிப்பதில், இன்பம் அடைவதில் கவனம் செலுத்துகிறார்கள். வயதில் பின்னுக்குப் போய் விடுகிறார்கள். ஆட்டதை விட இதைக் கவனிக்கவே மனம் துள்ளுகிறது.

(7 டிசம்பர் 2025)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.