Skip to main content

பேய்க்கதைகள்

எழுதுவதிலேயே சுலபம் பேய்ப்படங்கள்தாம். உதாரணமாக ஒரு குடும்பம் ஒரு well furnished வீட்டுக்குக் குடி போகிறார்கள். அங்கே உள்ள குளிர்பதனப்பெட்டி அல்லது டீப் பிரீஸரைப் பயன்படுத்தியபிறகு பேயின் ஆர்ப்பாட்டங்கள ஆரம்பிக்கின்றன. ஏனென்றால் அங்கு ஒருவரைக் கொன்று பதுக்கி வைத்திருந்தார்கள். அவரது உடலின் அணுக்கம் கொண்ட ஒவ்வொரு இடத்திலும் பேய் இருந்துகொண்டிருக்க அதைத் துரத்த அவருடைய பின்னணியைத் தேடி அக்குடும்பம் பயணிக்கிறது. அல்லது பேய் ஒரு நாய்க்குட்டிக்குள் புகுந்துவிட அதை அக்குடும்பத்தின் குழந்தையொன்றை தெரியாமல் எடுத்துக்கொண்டு வர ... செக்ஸ் ஹாரர் வேண்டுமா? குறும்புக்கார ஹீரோ புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது தன் கெர்ல் பிரண்டுடன் உறவுகொள்கிறார். அப்போது அவர் பயன்படுத்தும் ஆணுறையில் பேய் குடியிருப்பது அவருக்குத் தெரியாது. உறவின் உச்சத்தில் இருக்கையில் பேய் அவருக்குள் புகுந்த்து சன்னதம் கொள்கிறது. அத்துடன் .... இயற்கைப் பேரிடர் திரில்லர் வேண்டுமா? ஏதாவது ஒரு புராதனப் பொருள். அதைத் தீண்டினால் பேய் வந்து பேரிடரை ஏற்படுத்தும் என்று ஒரு ஐதீகம். இப்படி விதவிதமாக எடுக்கலாம். யாரும் தர்க்கம் குறித்து கேள்வி எழுப்ப மாட்டார்கள். நிறைய atmospheric ஷாட்கள், ஸ்லோமோஷன் ஷாட்கள், பீதியூட்டும் இசை, முகத்திற்கு டீப் க்ளோஸப்கள், வியர்வை பூக்கும் முகங்கள், வீறிடும் முகங்கள், வெறித்த பார்வை, இருள், விதவிதமான இருள் வெளிகள் என அச்சுறுத்துவது சுலபம். இன்னொரு சுவாரஸ்யம் இத்தகைய கதைகளுக்கு இரக்கத்தைத் தூண்டும் பின்கதைகள் அவசியமில்லை. அப்படியே இருந்தாலும் பேய்க்கு எதிராகவே தவறிழைத்தவர்களுக்குச் சாதகமாகவே கதையைக் கொண்டு போக வேண்டும் என்பது.

ஒரே சிக்கல் பேய்ப்படங்களைத் தொடர்ந்து பார்க்க இயலாது - நாம் வாழும் அன்றாட உலகமே தன் அதீத வெளிச்சத்தாலும் அன்றாடச் சடங்குகளாலும் மிகையான தகவல்களாலும், தர்க்க நெறிகளாலும் பேய்களை விரட்டியபடி இருக்கின்றன. உதாரணமாக, ஒருவருக்கு கணினியில் ஒரு மின்னஞ்சலோ போனில் வாட்ஸப் செய்தியோ அனுப்புவதோ அது மாயமாகப் போய்ச் சேர்வதோ பீதியூட்டத்தக்க 'பேய்ச் செயல்தாம்'. ஆனால் அவை நம்மை பீதியூட்டாதபடி இணையம் எப்படிச் செயல்படுகிறது என்று நமக்குச் சொல்லப்படுகிறது. அது நமக்குப் புரியாவிடினும் ஒருவிதமாகக் கற்பனை பண்ணுகிறோம். அடுத்து இது சாதாரண உலகினுள் வந்துவிடுகிறது. ஏதோ வடையை செய்தித்தாளில் சுற்றி கடிப்பதைப் போல இணையத்தில் புழங்குகிறோம். இப்படித்தான் இந்த உலகின் ஒவ்வொரு அற்புதச் செயலும் அன்றாடத்தினுள் கொண்டு வரப்பட்டு மீளமீள ஒரே போலச் செய்யப்பட்டு தன் அற்புதத்தை இழந்துவிடுகிறது. செக்ஸ் கூட ஒரு பேய் அனுபவம்தான். ஆனால் அதற்கும் ஒரு முறைமை இருக்கிறது - ஆடையைக் கழற்றுவது, முத்தமிடுவது, பாலுறுப்பைத் தொடுவது, குறிப்பிட்ட விதமாகப் பேசுவது என்று. நடைமுறை அதிலுள்ள பேயையும் என்றோ துரத்திவிட்டது. நாம் ஒரு இட்லியைத் தொடும்போது அது எப்படி ஒரு சதையைப் போல மென்மையாக வெதுவெதுப்பாக இருக்கிறது, இதன் உயிர் எங்கே என்று நாம் யோசிப்பதில்லை. ரசித்தபடியே கடித்து முழுங்கிவிடுகிறோம். சோதிடர்கள் பேசுவதைக் கூட தொடர்ந்து கேட்க முடியாது - அதில் உண்மையுண்டு என்று நினைத்தாலும் அது நிகழத்தக்க உண்மையல்ல என நமது நடைமுறை உலகம் அச்சுறுத்துகிறது. நாகரிக நவீன உலகம் அடிப்படையில் பேய்களை தினமும் துரத்தி வருவதால் நம்மால் தொடர்ந்து பேய்க்களைப் பார்க்க முடிவதில்லை. ஆனால் எதார்த்தப் படங்களுக்கு நடுவே அவை எப்போது வந்தாலும் வெற்றிதான்.
ஆனால் பேய்க்கதையை நாவலாகவோ சிறுகதையாகவோ எழுதுவது கடினம். அதில் தர்க்கத்தை மனம் தேடும். யோசிக்க விடாமல் நிறைய வர்ணிக்க வேண்டும். அதேநேரத்தில், சினிமாவில் வரும் பீதியூட்டும் பிம்பங்களை நிஜ உலகில் நாம் காணும்வரை (இருட்டான அறை, சொட்டும் நீர்த்துளி, குற்றிருட்டில் யாரோ தனியாக நிற்பதாக ஒரு பிரமை) நமக்கு நினைவில் பயம் நீடிக்காது. எழுத்தில் வரும் ஒவ்வொன்றையும் நாம் ஆழமாகக் கற்பனைப் பண்ண வேண்டியிருப்பதால் பேய் அதன் பின்னர் நம் சொற்களுக்குள்ளும், கற்பனைக்குள்ளும் புகுந்துகொள்ளும்.
தமிழில் எதார்த்தவாதமும், இடதுசாரி சிந்தனைகளும், பெரியாரியமும் நவீன இலக்கியத்துக்குள் கலந்துவிட்டதால் பேய்க் கதைகளுக்கு இடமில்லாமல் போய்விட்டது. ஜெயமோகன் எழுதியிருக்கிறார். ஆனால் அக்கதைகளைப் படித்தால் மாந்திரிகமும் பிரம்மாண்டமும் தெரியும், பயம் வராது. உளவியல் குறியீட்டுக் கதைகள் அவை.
எதிர்காலத்தில் ஏ.ஐ, தொழில்நுட்ப, டிஸ்டோப்பியன் பேய்க்கதைகளுக்கு ஒரு இடமிருக்கும் எனத் தோன்றுகிறது.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...