முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விருதுக்கு அங்கீகாரம் இல்லை

 விருதுகளைப் பற்றின என் கருத்து எப்போதுமே இதுதான் - நாம் ஒருவரைக் காதலிக்கிறோம், அதனால் நாம் அவருக்கு அடிமையாகி விடுவதில்லை.முத்தம் ஒரு பரிசு. விருதும் ஒரு பரிசு. நீ எனக்கு அடிமையாக மாட்டாயா எனும் கோரிக்கை அது. நல்ல எழுத்தாளர்கள் தம் தோளில் விழுந்த அழகிய கரங்களை புன்னகையுடன் விலக்கி விட்டு முத்தத்துக்கு நன்றி என்று கடந்துவிடுவார்கள். அவர்கள் எப்போதுமே முத்தமிட்டவர்களை எதிர்ப்பார்கள். மறுப்பார்கள். தம் பாதையில் தொடர்ந்தபடியே இருப்பார்கள். சில எழுத்தாளர்கள் எப்போதுமே மனைவியின் மடியில் பூனையாக இருக்கும் மனநிலை கொண்டவர்கள். அவர்கள் இன்னும் முத்தம் கொடு என்று பின்னாலே திரிவார்கள்.

ஆகையால் நாம் விருதை எதிர்க்கத் தேவையில்லை. அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அது நம்மைப் பயன்படுத்த அனுமதிக்கலாகாது. விருதை அச்சத்துடன் எதிர்கொள்ளத் தேவையில்லை. அரசு, தேசம், தேசியம் ஆபத்தானவை எனும் தாராளமய முற்போக்குச் சிந்த்னையின் விளைவே அவ்வச்சம். ஆனால் தேசமும் நம்மை உள்ளடக்கியதுதான். அது நம்மில் இருந்து விளைவதே. நாமே தேசத்தையும் தேசியத்தையும் அதிகார வர்க்கத்தையும் நம் மனத்திலும் உடலிலும் இருந்து உற்பத்தி செய்கிறோம். அதனாலே அது காதலுக்கும் காமத்துக்கும் நெருக்கமாக வரும் செயல்பாடு என்கிறேன். தேசியத்தின் எழில்மிகு அதரங்களிலே விருது மலர்கிறது. சுகந்தமாக, இனிமையாக இருக்கும். அதன்பின்னுள்ள கூர்மையான பற்களைக் கண்டு நாம் அஞ்சுவதால் பயனில்லை. நாம் அதை விளையாட்டாகக் கையாண்டாலே அது அடங்கிவிடும்.
சாகித்ய அகாடெமியோ பொற்கிழியோ கொடுத்தால் வாங்கிப் பையில் போட்டுக் கொள்வோம். வீடு, செல்வாக்கு, பயணம் என முடிந்த போதெல்லாம் அதைப் பயன்படுத்திக் கொள்வோம். ஆனால் ஒரு முத்தத்துக்காக வாழ்நாள் அடிமையாக முடியாது, தாலி கட்டி குடும்பம் எல்லாம் நடத்த முடியாது என தேசத்தை நோக்கிச் சொல்லி விடுவோம்.
விருது நம்மை அங்கீகரிக்கலாம், நாம் அதை வைத்து விளையாடிவிட்டு விட்டுவிடலாம்.
பின்குறிப்பு: எல்லாவற்றையும் நேரடி அரசியலாகப் பார்ப்போருக்கு நான் சொல்வது புரியாது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.