முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

டொமனிக் ஆன் தெ லேடீஸ் பர்ஸ்



மிகப்பெரிய தர்க்க ஓட்டை கொண்ட கதை இது. ஆனால் இதை எப்படி இதன் திரைக்கதை எழுத்தாளர்கள் கௌதம் மேனனை நம்ப வைத்து, அவரும் எப்படி மம்முட்டியை நம்ப வைத்து படமாக எடுத்தார்கள் என ஆச்சரியமாக இருக்கிறது. இயல்பாகவே என்னதான் முயன்றாலும் இப்படம் பல்லிளித்தே ஆக வேண்டியிருக்கும் என்பதால் சொதப்பி விடுகிறது.

அதேநேரத்தில் பெரிய வசதியோ ஆரோக்கியமோ இல்லாத ஒரு சாதாரண தனியார் துப்பறிவாளரின் அன்றாட உலகை, அவரது முயற்சிகளின் சாதாரணத்துவத்தை நன்றாகக் காட்டியுள்ளதை, அதிலுள்ள பகடியை ரசித்தேன். நாயகனான டொமனிக் (மம்முட்டி) தொடர்ந்து பொய் சொல்பவர். ஒரு காட்சியில் சொல்லும் காரணத்தை இன்னொன்றில் மாற்றிச் சொல்வார். அப்போது நாம் அவர் மீது இரக்கம் கொள்ளத்தக்க வகையில் அவரது பாத்திர அமைப்பை உருவாக்கி இருக்கிறார்கள். கௌதம் மேனனுக்கு தன் பாத்திரங்கள் ரத்த சக்கரை நோய் உள்ளோராக காட்டப் பிடிக்கும். இதில் மம்முட்டி long acting இன்சுலின் ஊசி போட்டுக் கொள்ளும் காட்சி வருகிறது. தன்பாலின ஈர்ப்பு அவர் படங்களில் எப்போதுமே எட்டிப் பார்க்கும், எதிர்பாலின உறவு கசப்பிலோ இழப்பிலோ முடியும். இப்படத்திலும் இவ்விசயங்கள் உள்ளன.
இப்படத்திற்கு முக்கியத்துவம் அற்ற ஒரு காட்சிதான் படத்தைப் பார்த்தபின்னரும் என் மனத்தில் தங்கி நிற்கிறது. அதன் பொருந்தாத்தன்மைதான் காரணம் - புலன்விசாரணை தீவிரமாகிக் கொண்டிருக்கும்போது டொமொனிக்கும் அவரது உதவியாளரும் பேசிக் கொள்கிறார்கள். டொமொனிக் கேட்கிறார்: நாம் ஒரு ஐஸ்கிரீம் சாப்பிடலாமா? உதவியாளர்: எனக்கும் வேண்டும் சார்.
நான் யோசித்தேன்: ஆண்கள் இப்படி மனம் சலித்தால், பதற்றம் மிகுந்தால் ஐஸ்கிரீம் சாப்பிடுவார்களா? இல்லை. தேநீர், காபி, பியர், சிகரெட்தான். நான் என்றுமே என் நண்பர்களிடம் ஸ்வீட் சாப்பிடுவோமா, ஐஸ்கிரீம் பார்லர் போவோமா என்றெல்லாம் கேட்டதோ அப்படிச் சாப்பிட்டதோ இல்லை. நான் ஆண்களுடன் சாக்லேட் பகிர்ந்துகொண்டதும் இல்லை. பெண்கள்தாம் ஐஸ்கிரீம், சாக்லேட் வெறியர்கள். அதற்காக இப்படி ஐஸ்கிரீம் அடிமையான ஆண்கள் இல்லையென்றில்லை. என் கல்லூரிக்கு வெளியே நான் இப்படி கோன் ஐஸ்கிரீமை சப்பிக் கொண்டு நடக்கும் இளைஞர்களைப் பார்த்திருக்கிறேன்.
இந்த சிகரெட், தேநீர், ஐஸ்கிரீம், சாக்லேட் எல்லாம் பண்பாட்டு உருவகங்கள். நாம் அவற்றைப் பாவிக்கும்போது ஒரு குறிப்பிட்ட விதமாக நம்மை அப்போது மாற்றிக் கொள்கிறோம். இப்படத்தில் மம்முட்டி ஐஸ்கிரீமை கரண்டியில் எடுத்து நக்கும் இடங்களில் அவர் மற்றொரு விதமாக மாறிப் போகிறார். அது படத்தின் தொனியை மாற்றுகிறது. படத்தின் இறுதிக் காட்சியில் அவர் தான் அதுவரை நேசித்தது பெண் வேடமிட்ட ஆணென்று தெரிந்துகொண்டு சில வினாடிகள் சங்கடப்படுகிறார். சேலையில் அழகான பெண்ணாகத் தெரியும் அவனுடன் சண்டை போடுகிறார். அப்போதும் கூட அவன் முகத்தில் முஷ்டியால் குத்தாமல் பார்த்துக் கொள்கிறார். இதையெல்லாம் எதற்குப் பார்க்கிறோம் என்று நம்மையும் யோசிக்க வைக்கிறார். எனக்கு இந்த ரெண்டு காட்சிகளும் ஒன்றுதாம் எனத் தோன்றுகிறது.
இந்தக் கதையைச் சொல்லி எப்படி மம்முட்டியை கௌதம் மேனன் எப்படி ஏமாற்றினார் என்பதை விட டொமனிக் எப்படி அவ்வளவு நாட்களும் ஒரு ஆணைப் பெண் என்று நம்பினார் என்பது குறைவாகவே அதிர்ச்சி அளிக்கிறது. வித்தியாசமான காத்திரமான அமைப்பு கொண்ட பாத்திரம் என்றால் நாயகர்கள் உணர்ச்சிவரப்பட்டு ஏற்றுக்கொண்டு அதைத் தயாரிக்கவும் முன்வருவார்கள். குழந்தைகளுக்கு எதிலும் இனிப்பை, சாக்லேட்டைக் கலந்து ஏமாற்றி சாப்பிட வைப்பதைப் போல.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...