முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

டொமனிக் ஆன் தெ லேடீஸ் பர்ஸ்



மிகப்பெரிய தர்க்க ஓட்டை கொண்ட கதை இது. ஆனால் இதை எப்படி இதன் திரைக்கதை எழுத்தாளர்கள் கௌதம் மேனனை நம்ப வைத்து, அவரும் எப்படி மம்முட்டியை நம்ப வைத்து படமாக எடுத்தார்கள் என ஆச்சரியமாக இருக்கிறது. இயல்பாகவே என்னதான் முயன்றாலும் இப்படம் பல்லிளித்தே ஆக வேண்டியிருக்கும் என்பதால் சொதப்பி விடுகிறது.

அதேநேரத்தில் பெரிய வசதியோ ஆரோக்கியமோ இல்லாத ஒரு சாதாரண தனியார் துப்பறிவாளரின் அன்றாட உலகை, அவரது முயற்சிகளின் சாதாரணத்துவத்தை நன்றாகக் காட்டியுள்ளதை, அதிலுள்ள பகடியை ரசித்தேன். நாயகனான டொமனிக் (மம்முட்டி) தொடர்ந்து பொய் சொல்பவர். ஒரு காட்சியில் சொல்லும் காரணத்தை இன்னொன்றில் மாற்றிச் சொல்வார். அப்போது நாம் அவர் மீது இரக்கம் கொள்ளத்தக்க வகையில் அவரது பாத்திர அமைப்பை உருவாக்கி இருக்கிறார்கள். கௌதம் மேனனுக்கு தன் பாத்திரங்கள் ரத்த சக்கரை நோய் உள்ளோராக காட்டப் பிடிக்கும். இதில் மம்முட்டி long acting இன்சுலின் ஊசி போட்டுக் கொள்ளும் காட்சி வருகிறது. தன்பாலின ஈர்ப்பு அவர் படங்களில் எப்போதுமே எட்டிப் பார்க்கும், எதிர்பாலின உறவு கசப்பிலோ இழப்பிலோ முடியும். இப்படத்திலும் இவ்விசயங்கள் உள்ளன.
இப்படத்திற்கு முக்கியத்துவம் அற்ற ஒரு காட்சிதான் படத்தைப் பார்த்தபின்னரும் என் மனத்தில் தங்கி நிற்கிறது. அதன் பொருந்தாத்தன்மைதான் காரணம் - புலன்விசாரணை தீவிரமாகிக் கொண்டிருக்கும்போது டொமொனிக்கும் அவரது உதவியாளரும் பேசிக் கொள்கிறார்கள். டொமொனிக் கேட்கிறார்: நாம் ஒரு ஐஸ்கிரீம் சாப்பிடலாமா? உதவியாளர்: எனக்கும் வேண்டும் சார்.
நான் யோசித்தேன்: ஆண்கள் இப்படி மனம் சலித்தால், பதற்றம் மிகுந்தால் ஐஸ்கிரீம் சாப்பிடுவார்களா? இல்லை. தேநீர், காபி, பியர், சிகரெட்தான். நான் என்றுமே என் நண்பர்களிடம் ஸ்வீட் சாப்பிடுவோமா, ஐஸ்கிரீம் பார்லர் போவோமா என்றெல்லாம் கேட்டதோ அப்படிச் சாப்பிட்டதோ இல்லை. நான் ஆண்களுடன் சாக்லேட் பகிர்ந்துகொண்டதும் இல்லை. பெண்கள்தாம் ஐஸ்கிரீம், சாக்லேட் வெறியர்கள். அதற்காக இப்படி ஐஸ்கிரீம் அடிமையான ஆண்கள் இல்லையென்றில்லை. என் கல்லூரிக்கு வெளியே நான் இப்படி கோன் ஐஸ்கிரீமை சப்பிக் கொண்டு நடக்கும் இளைஞர்களைப் பார்த்திருக்கிறேன்.
இந்த சிகரெட், தேநீர், ஐஸ்கிரீம், சாக்லேட் எல்லாம் பண்பாட்டு உருவகங்கள். நாம் அவற்றைப் பாவிக்கும்போது ஒரு குறிப்பிட்ட விதமாக நம்மை அப்போது மாற்றிக் கொள்கிறோம். இப்படத்தில் மம்முட்டி ஐஸ்கிரீமை கரண்டியில் எடுத்து நக்கும் இடங்களில் அவர் மற்றொரு விதமாக மாறிப் போகிறார். அது படத்தின் தொனியை மாற்றுகிறது. படத்தின் இறுதிக் காட்சியில் அவர் தான் அதுவரை நேசித்தது பெண் வேடமிட்ட ஆணென்று தெரிந்துகொண்டு சில வினாடிகள் சங்கடப்படுகிறார். சேலையில் அழகான பெண்ணாகத் தெரியும் அவனுடன் சண்டை போடுகிறார். அப்போதும் கூட அவன் முகத்தில் முஷ்டியால் குத்தாமல் பார்த்துக் கொள்கிறார். இதையெல்லாம் எதற்குப் பார்க்கிறோம் என்று நம்மையும் யோசிக்க வைக்கிறார். எனக்கு இந்த ரெண்டு காட்சிகளும் ஒன்றுதாம் எனத் தோன்றுகிறது.
இந்தக் கதையைச் சொல்லி எப்படி மம்முட்டியை கௌதம் மேனன் எப்படி ஏமாற்றினார் என்பதை விட டொமனிக் எப்படி அவ்வளவு நாட்களும் ஒரு ஆணைப் பெண் என்று நம்பினார் என்பது குறைவாகவே அதிர்ச்சி அளிக்கிறது. வித்தியாசமான காத்திரமான அமைப்பு கொண்ட பாத்திரம் என்றால் நாயகர்கள் உணர்ச்சிவரப்பட்டு ஏற்றுக்கொண்டு அதைத் தயாரிக்கவும் முன்வருவார்கள். குழந்தைகளுக்கு எதிலும் இனிப்பை, சாக்லேட்டைக் கலந்து ஏமாற்றி சாப்பிட வைப்பதைப் போல.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.