முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

டொமனிக் ஆன் தெ லேடீஸ் பர்ஸ்



மிகப்பெரிய தர்க்க ஓட்டை கொண்ட கதை இது. ஆனால் இதை எப்படி இதன் திரைக்கதை எழுத்தாளர்கள் கௌதம் மேனனை நம்ப வைத்து, அவரும் எப்படி மம்முட்டியை நம்ப வைத்து படமாக எடுத்தார்கள் என ஆச்சரியமாக இருக்கிறது. இயல்பாகவே என்னதான் முயன்றாலும் இப்படம் பல்லிளித்தே ஆக வேண்டியிருக்கும் என்பதால் சொதப்பி விடுகிறது.

அதேநேரத்தில் பெரிய வசதியோ ஆரோக்கியமோ இல்லாத ஒரு சாதாரண தனியார் துப்பறிவாளரின் அன்றாட உலகை, அவரது முயற்சிகளின் சாதாரணத்துவத்தை நன்றாகக் காட்டியுள்ளதை, அதிலுள்ள பகடியை ரசித்தேன். நாயகனான டொமனிக் (மம்முட்டி) தொடர்ந்து பொய் சொல்பவர். ஒரு காட்சியில் சொல்லும் காரணத்தை இன்னொன்றில் மாற்றிச் சொல்வார். அப்போது நாம் அவர் மீது இரக்கம் கொள்ளத்தக்க வகையில் அவரது பாத்திர அமைப்பை உருவாக்கி இருக்கிறார்கள். கௌதம் மேனனுக்கு தன் பாத்திரங்கள் ரத்த சக்கரை நோய் உள்ளோராக காட்டப் பிடிக்கும். இதில் மம்முட்டி long acting இன்சுலின் ஊசி போட்டுக் கொள்ளும் காட்சி வருகிறது. தன்பாலின ஈர்ப்பு அவர் படங்களில் எப்போதுமே எட்டிப் பார்க்கும், எதிர்பாலின உறவு கசப்பிலோ இழப்பிலோ முடியும். இப்படத்திலும் இவ்விசயங்கள் உள்ளன.
இப்படத்திற்கு முக்கியத்துவம் அற்ற ஒரு காட்சிதான் படத்தைப் பார்த்தபின்னரும் என் மனத்தில் தங்கி நிற்கிறது. அதன் பொருந்தாத்தன்மைதான் காரணம் - புலன்விசாரணை தீவிரமாகிக் கொண்டிருக்கும்போது டொமொனிக்கும் அவரது உதவியாளரும் பேசிக் கொள்கிறார்கள். டொமொனிக் கேட்கிறார்: நாம் ஒரு ஐஸ்கிரீம் சாப்பிடலாமா? உதவியாளர்: எனக்கும் வேண்டும் சார்.
நான் யோசித்தேன்: ஆண்கள் இப்படி மனம் சலித்தால், பதற்றம் மிகுந்தால் ஐஸ்கிரீம் சாப்பிடுவார்களா? இல்லை. தேநீர், காபி, பியர், சிகரெட்தான். நான் என்றுமே என் நண்பர்களிடம் ஸ்வீட் சாப்பிடுவோமா, ஐஸ்கிரீம் பார்லர் போவோமா என்றெல்லாம் கேட்டதோ அப்படிச் சாப்பிட்டதோ இல்லை. நான் ஆண்களுடன் சாக்லேட் பகிர்ந்துகொண்டதும் இல்லை. பெண்கள்தாம் ஐஸ்கிரீம், சாக்லேட் வெறியர்கள். அதற்காக இப்படி ஐஸ்கிரீம் அடிமையான ஆண்கள் இல்லையென்றில்லை. என் கல்லூரிக்கு வெளியே நான் இப்படி கோன் ஐஸ்கிரீமை சப்பிக் கொண்டு நடக்கும் இளைஞர்களைப் பார்த்திருக்கிறேன்.
இந்த சிகரெட், தேநீர், ஐஸ்கிரீம், சாக்லேட் எல்லாம் பண்பாட்டு உருவகங்கள். நாம் அவற்றைப் பாவிக்கும்போது ஒரு குறிப்பிட்ட விதமாக நம்மை அப்போது மாற்றிக் கொள்கிறோம். இப்படத்தில் மம்முட்டி ஐஸ்கிரீமை கரண்டியில் எடுத்து நக்கும் இடங்களில் அவர் மற்றொரு விதமாக மாறிப் போகிறார். அது படத்தின் தொனியை மாற்றுகிறது. படத்தின் இறுதிக் காட்சியில் அவர் தான் அதுவரை நேசித்தது பெண் வேடமிட்ட ஆணென்று தெரிந்துகொண்டு சில வினாடிகள் சங்கடப்படுகிறார். சேலையில் அழகான பெண்ணாகத் தெரியும் அவனுடன் சண்டை போடுகிறார். அப்போதும் கூட அவன் முகத்தில் முஷ்டியால் குத்தாமல் பார்த்துக் கொள்கிறார். இதையெல்லாம் எதற்குப் பார்க்கிறோம் என்று நம்மையும் யோசிக்க வைக்கிறார். எனக்கு இந்த ரெண்டு காட்சிகளும் ஒன்றுதாம் எனத் தோன்றுகிறது.
இந்தக் கதையைச் சொல்லி எப்படி மம்முட்டியை கௌதம் மேனன் எப்படி ஏமாற்றினார் என்பதை விட டொமனிக் எப்படி அவ்வளவு நாட்களும் ஒரு ஆணைப் பெண் என்று நம்பினார் என்பது குறைவாகவே அதிர்ச்சி அளிக்கிறது. வித்தியாசமான காத்திரமான அமைப்பு கொண்ட பாத்திரம் என்றால் நாயகர்கள் உணர்ச்சிவரப்பட்டு ஏற்றுக்கொண்டு அதைத் தயாரிக்கவும் முன்வருவார்கள். குழந்தைகளுக்கு எதிலும் இனிப்பை, சாக்லேட்டைக் கலந்து ஏமாற்றி சாப்பிட வைப்பதைப் போல.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...