![]()
2) ஒருவிதத்தில் தவெக ஆட்சியமைப்பதும் நல்லதுதான். விஜய் நேர்மையான முறையில் 108 இடங்களைப் பெற்றாரோ இல்லையோ நடந்ததை மாற்ற முடியாது. இப்போதைக்குச் சாத்தியமானது அனைவரும் அவர் ஆட்சியமைப்பதை ஆதரிப்பதுதான். ஆளுநர் ஆட்சி, மறுதேர்தல் எல்லாம் இன்னும் மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும்.
3) திமுக கூட்டணிக் கட்சிகள் அமைச்சரவையில் இடம்பெறுவார்களா இல்லையா என்பது அவர்கள் கூட்டணிக்குள் இருக்கிறார்களா இல்லையா என்பதைத் தெளிவுபடுத்தி விடும். அமைச்சரவையில் இடம்பெற்றால் விஜய் ஆட்சியின் குழப்பங்களுக்கும் ஏமாற்றங்களுக்கும் அவர்கள் பதில் சொல்ல வேண்டி வரும். ஆம், இந்த ஆட்சி அப்படித்தான் இருக்குமென நான் கணிக்கிறேன்.
4) செய்தியே வாசிக்காத, மாநில அரசியல், பொருளாதாரம், சமூக நிலை குறித்து எந்த அக்கறையும் இல்லாத தன்னலமான குருட்டுத்தனமான ஒரு குழு உருவாகி இருக்கிறது. அவர்கள் விஜய் ஒரு நடிகர் என்பதால் மட்டுமே அவரைக் காண்பதற்காகத் தவிக்கிறது. பதவி ஏற்பின்போதும் அவர்களே திரண்டு கூக்குரல் இடப் போகிறார்கள். ஒவ்வொரு முறையும் விஜய் காரில் போகும்போது வழியில் நின்று கத்தப் போகிறார்கள். இவர்களும் வேறு ஏதோ சில தேர்தல் மோசடிகளும் சேர்ந்தே இந்த வெற்றி சாத்தியமாகி இருக்கிறது. அடுத்த ஓரிரு ஆண்டுகளில் இவர்கள் இயல்பு வாழ்க்கைக்கு மீள்வார்கள் என நம்புகிறேன்.
5) ஒன்றிய அரசு இதற்கு மேல் முட்டுக்கட்டையிடாமல் விஜய் ஆட்சியமைத்த பிறகும்கூட விஜய் பெரும்பாலும் எதற்கும் பதில் சொல்லாமல், மக்களுடன் உரையாடாமல் ஒரு கண்ணாடி கூண்டுக்குள் இருந்தே ஆட்சி செய்வார். அவரது ஆலோசகர்கள் யாரென்று பாருங்கள் - அவர்களுக்கும் அரசியலுக்கும் கொள்கைகளுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை ஆர்.எஸ்.எஸ்ஸில் பணியாற்றியது, லாட்டரிக் கம்பெனி, ரியல் எஸ்டேட் தொழில் செய்தது, கட்சிகளுக்கு பிரச்சார வியூகம் வகுத்துக் கொடுத்தது ஆட்சி நடத்துவதற்கோ ஆலோசனைச் சொல்வதற்கோ ஆன தகுதி அல்ல. முழுநேரக் கொள்ளை மட்டுமே நடக்கும்.
6) தவெக மேம்போக்காக திமுகவைப் போலச் செய்யவே முயலும் - மக்களுக்கான நலத்திட்டங்கள், சமூக வலைதளப் பிரச்சாரம், விஜய்யை ஒரு மக்கள் நாயகன் என முன்னிலைப்படுத்திக் கொண்டே இருந்துவிட்டு அவரைத் திருவுருவாக்கி அவருக்குப் பின்னால் இவர்கள் கொள்ளையடிப்பார்கள். விஜய்க்கும் பங்குபோகும். அவர் அதற்காக யாரை நிறுவப்போகிறார்கள் எனத் தெரியவில்லை. அதாவது அடுத்த ஐந்தாண்டுகளில் விஜய்யை ஒரு கலக நாயகனில் இருந்து, தூய சக்தியில் இருந்து திருவுருவாக மாற்றப் போகிறார்கள். பாஜக மோடியை வைத்துச் செய்ததை தவெக விஜய்யை வைத்துச் செய்யும். அவருடைய மர்மமான குணம் இதற்கு ஓரளவுக்கு உதவும் என நினைக்கிறேன்.
7) விஜய்யின் ஆட்சியில் பெரும்பாலும் எந்த அமைச்சர்களும் 'பெரிய தலைக்கட்டுகளாக' அறியப்பட மாட்டார்கள். எது நடந்தாலும் அது விஜய்யால் செய்யப்பட்டது என்றே சித்தரிப்பார்கள். அமைச்சர்களும் அவ்வாறே நடந்து கொள்வார்கள் என்பது அவர்களுடைய இப்போதைய நடத்தையை வைத்தே தெரிகிறது. ஆகையால் இது பொம்மை ஆட்சியாக இருக்காது, திருவுரு ஆட்சியாக இருக்கும்.
8. ஆட்சி மீது என்ன குற்றச்சாட்டு வந்தாலும் அது தன் மீதுள்ள வெறுப்பினால் சொல்லப்படுபவை என்று விஜய் சொல்வார். பிறரும் விஜய் விமர்சனங்களுக்கு அப்பாலானவர் என்றே பேசுவர். அதாவது எல்லா குற்றச்சாட்டுகளையும் விலக்கித் தள்ளிக் கொண்டே இருப்பார்கள்.
9) விஜய் இனி அவ்வப்போது ஒன்றிய அரசுக்கு எதிராக சவால் விடுவார் என்றும், அதன் மூலம் தன்னை தமிழ்ப் பெருமையின் அடையாளமாக கட்டமைக்க முயல்வார் என்றும் கணிக்கிறேன். திமுகவை இனி பழிக்க இயலாது. ஊழல், குடும்ப அரசியல், அங்கிள், சார் என்றெல்லாம் வசனம் பேச முடியாது. வேண்டுமென்றால் திமுக மீது ஊழல் வழக்குப் போடலாம். அதை வைத்தே ஓட்ட முடியாது. மோடியைப் போன்றே விஜய்க்கும் சதா ஒரு எதிரி தேவை. மேலும் காங்கிரஸும் இணைந்துள்ளதால் அடுத்த மக்களவைத் தேர்தலில் தவெக-காங்கிரஸ் கூட்டணியை மதவாத எதிர்ப்புக் கூட்டணியாகச் சித்தரிக்க முயல்வார்கள். ஆனால் முழுமையான எதிர்ப்பரசியலும் செய்ய மாட்டார்கள் - பூடகமாக சில வசனங்களைப் பேசி அதை வைரலாக்கி விட்டு பிரச்சினை வரும்போதெல்லாம் காலில் பணிந்து விடுவார்கள். வரும் ஆண்டுகளில் தமிழ்நாடு ஒரு 'தமிழ் மோடியை', ஒரு கட்டமைக்கப்பட்ட நாயகனை எப்படிக் கையாளப் போகிறது என்பது கவனிக்கத்தக்கது. குஜராத்தில் ஆரம்பித்த ஒரு பரிசோதனையைப் போல இது தமிழ்நாட்டில் நிகழ்த்தப்பட்ட பரிசோதனை. அப்பரிசோதனை இந்தியாவின் தலைவிதியை மாற்றியது. இது என்ன செய்யப் போகிறது?
10) பாஜக இக்கூட்டணியில் இருந்து காங்கிரஸ், இடதுசாரிகளை வெளியேற்றி அதிமுகவை இணைய வைக்க என்னவெல்லாம் செய்யப் போகிறது, எடப்பாடி-விஜய் உறவு எப்படி இருக்கப் போகிறது என்பதும் சுவாரஸ்யமாக இருக்கும்.
Comments