Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

இலக்கியத்திருட்டும் அதிர்ச்சியும்


தமிழ் இலக்கியப் பரப்பு ஒரு ஒண்டுக்குடித்தன குடியிருப்பு போல. எங்கு எந்த மூலையில் யார் என்ன எழுதினாலும் இன்னொருவருக்கு தெரிந்து விடும். அதனாலே இங்கு எழுத்து திருடப்படுவதற்கான சாத்தியம் இல்லை என்று இதுநாள் வரை நம்பி இருந்தேன். ஆனால் என் நம்பிக்கை பொய்த்து விட்டது.
இம்மாத “உயிர் எழுத்தில்” நண்பர் எச். முஜீப் ரஹ்மானின் “ரிகர்சனிசம்: பின்நவீனத்தின் இன்னொரு முகம்” என்றொரு கட்டுரை வெளியாகி இருந்தது. இதில் என்னுடைய ஒரு பழைய கட்டுரையில் இருந்து எட்டு பத்திகளை திருடி பயன்படுத்தி இருக்கிறார். 

முதலில் அக்கட்டுரையின் சுவாரஸ்யமான தலைப்பை பார்த்து ஈர்க்கப்பட்டு படிக்க ஆரம்பித்தேன். முதல் இரண்டு பக்கங்கள் தாண்டினதும் கட்டுரையின் தொனியில் மொழியில் ஒரு மாற்றம் தென்பட்டது. நட.சிவகுமாரின் “வெட்டிமுறித்து களம்” தொகுப்பில் உள்ள கவிதைகள் பற்றி விமர்சனம் வந்தது. அக்கருத்துக்கள் பரிச்சயமானவையாய் தோன்றின. பிறகு என் கருத்துக்கள் போன்றே இருந்தன. ஏனென்றால் இத்தொகுப்பு பற்றி நான் ஒரு கட்டுரையை ஆறு வருடங்களுக்கு முன்பு எழுதியிருந்தேன். பரவாயில்லை இவர் நம்மைப் போன்றே இக்கவிதைகள் பற்றி யோசித்திருக்கிறார் என நினைத்து மேலும் ஆர்வமாகிப் படித்தேன். பிறகு தான் எனக்கு உறைத்தது. ஒவ்வொரு வரியும் என் வரி. அப்படியே காப்பி பேஸ்ட் பண்ணி இருக்கிறார்.
 ஒன்று ரெண்டல்ல; என்னுடைய எட்டு பத்திகள் அப்படியே அவர் கட்டுரை நடுவே வருகிறது. (அவற்றின் ஸ்கேன் பிரதிகளை கீழே இணைத்துள்ளேன்). சரி மேற்கோள் காட்டி இருக்கிறாரா என்றால் அதுவும் இல்லை. அத்தொகுப்பு பற்றி அவர் ஒரு வரி கூட எழுதவில்லை. முழுக்க என் வரிகளை அவர் பெயரில் பயன்படுத்தி இருக்கிறார். எனக்கு முதலில் கடும் அதிர்ச்சியும் பிறகு கோபமும் ஏற்பட்டது. என் கண்களையே என்னால் நம்ப இயலவில்லை.
இப்பிரச்சனை பற்றி பொறுமையாக யோசித்தேன். கண்டுகொள்ளாமல் விட்டு விடலாம் எனக் கூட நினைத்தேன். ஏனென்றால் இதை செய்திருப்பவர் என நண்பர். எழுத்துலகில் எனக்கு மூத்தவர். சிறந்த வாசகர். நிறைய படித்திருப்பவர். ஆனால் நான் இதை பதிவு செய்யாமல் விட்டால் இன்னொரு பிரச்சனை வரும்: நாளை முஜீப் ரஹ்மானின் கட்டுரையை படித்து விட்டு என் கட்டுரையை பார்க்க நேர்கிறவர் நான் தான் முஜீப்பின் கட்டுரையை திருடி விட்டதாய் நினைக்கக் கூடும். இதைத் தவிர்க்க நான் இதை இங்கு பதிவு செய்தே ஆக வேண்டும். இனிமேல் இப்படியான தவறுகள் நிகழாதிருக்கட்டும்.
என்னுடைய கட்டுரையின் தலைப்பு: “நவீன தலித் மனதின் பிளவுக்களம்: நட.சிவகுமார் கவிதைகள்”. இது 2008 செப்டம்பரில் என் இணையதளத்தில் வெளியானது. இணைப்பை கீழே தந்திருக்கிறேன்.
இவை என் கட்டுரையில் இருந்து முஜீப் ரஜ்மான் காப்பி பேஸ்ட் பண்ணியிருக்கிற பத்திகள்.
நட.சிவகுமாரின் சமீபக் கவிதைகள் (வெட்டி முறிப்புக்களம்) தனி நபராகவும், சமூக மனிதனாகவும் கவிதை சொல்லியின் பல்வேறுபட்ட பிளவுகளைப் பேசுபவை. மாந்திரிகச் சடங்குகள் பற்றின நுண்தகவல்கள்,மைய நீரோட்ட சாதியினரின் வரலாற்றுப் புனைவுகளைச் சாடும் எதிர்கலாச்சாரப் பதிவுகள் ஆகியன இவர் கவிதைகளுக்கு காற்றில் பறந்து விடாதபடியான கனபரிமாணத்தை, மண்ணில் காலூன்றும் வலுவை அளிக்கின்றன.
பழம் கலாச்சாரக் கூறுகள், விளிம்பு நிலை சமூகத்தினுடையதாகினும்,இன்றைய முதலாளித்துவ, அறிவியல் சமூக ஓட்டங்கள் முன் பொருளற்றுப் போகும் தருணங்கள் நிறைய உள்ளன. சிவகுமார் ஒருபுறம் தலித் தெய்வங்களாய் மேலாங்கோட்டு, கொல்லங்கோட்டு அம்மன்கள், இசக்கி,மாடன், சுடலையின் வீரியம் பேசுகிறார். மறுபுறம் தான் பயங்கரவாத உலகில் பிழைக்க குண்டு துளைக்காத வீடும், இரண்டாய் வெட்டிப் போட்டால் உடல் ஒன்று சேரவும், காசு கொட்டவும் வரங்கள் கேட்டால் தர இயலாது உருத்தெரியாது மாயமாகும் தனது உதவாத தலித் தெய்வத்தையும் பகடி செய்கிறார் (மாந்திரிக ஓலைச்சுவடி). காலமாற்றங்களில் வலுவிழக்கும் சமூக கலாச்சாரக் கூறுகளை எதிரொலித்த புதுமைப்பித்தனின் வயோதிக வேதாளத்திற்குப் பிறகு முக்கிய பகடிப் பாத்திரம் சிவகுமாரின் இந்தச் சுடலைதான். இன்றைய சூழலில் பின்-நவீன மனிதன் தனி அடையாளங்களை சிறுகச்சிறுக இழந்து நுகர்வோனாக மட்டும் பரிணமித்து வருகிறான். கலாச்சார நுண் அடையாளங்கள் மற்றும் வம்ச வரலாற்றை புனரமைப்பதோ,பத்திரப்படுத்துவதோ அரசியல், சமூக நிர்ப்பந்தம். ஆனால் அவை பிரக்ஞையற்ற இன்றைய உலகின் சுருங்கி வரும் வெளியில் பல சமயங்களில் பொருளற்றுப் போகின்றன. 
சிவகுமாரின் கவிதைகள் சமூக மனப் பிளவிலிருந்து உள்நகர்ந்து மேலும்நுட்பமாய் தனிமனித ஆளுமை உடைவை விசாரிக்கின்றனசுயம் மீறிப் போகும்தனிமனித அதிகாரப் பசியை ‘உடல் தின்னும் பிசாசு‘ கவிதையில்விவரிக்கிறார்.
இதுவரையிலான வாழ்வில் நாம் எத்தனையோ மனிதர்களின் வயிற்றுள்வாழ்ந்திருப்போம்அதே நேரம் பாதி செரித்த நிலையில் அகப்பட்ட மனிதர்கள்பலரை நம் சிறுஇரைப்பைக்குள் அடக்கியிருந்திருப்போம்இந்த நரகாசுரவிருந்து எழுத்து அரசியலில்அன்றாட அலுவலக உறவுகளில்குடும்பஅடுக்குகளின் நகர்வுகளில் சகஜமாக நிகழ்வதுஇதனை 'பயன்படுத்தல்'என்றல்லாமல் நுண்சொல்லாடல்கள் வழியான அதிகாரக் கடத்தல் என்பதேதகும்.
அந்த வயதில்
செண்பகத்தையும் பிச்சுமணி சாரையும் தின்று முடித்தேன்
கல்லூரிக் காலங்களில்
வித்யாவை
பிறகு பெயர் சொல்ல விரும்பாத அவளையும்
தம்பியையும் சாப்பாட்டுப் பாத்திரத்தில் வைத்து
கொஞ்சமாக வைத்து தின்று கொண்டிருந்த போது
கைதவறி விழ
எடுத்து தூசு தட்டி ஒவ்வொன்றாக சாப்பிடுகிறேன் ...
இனி யாரையெல்லாம் தின்னப் போகிறேனோ ...‘

அழகியல் மனதின் மறைமுக வன்முறையை கவனிக்கிறது ஒரு கவிதை.அறைச்சுவரில் ஒட்டிக் கிடந்த வண்ணத்துப் பூச்சியைக் கவிதையாக்குகிறான்.பிறகு அது
காதுகளிலும் வாயிலும் நுழைந்த போது
கடித்துத் தின்ன
பொத்துக்கிட்டு வந்தது கோபம்.‘
மேலும் சில கவிதைகள் எளிய உயிர்கள் மீதான வன்முறையை (கடந்தை,சிலந்திப் பூச்சிகள்ஆமைப்புழுக்கள்குறியீடாகக் கொண்டு தனிமனித அறம்நுட்பமானதொரு தளத்தில் புரையோடிப் போய் விட்டதைப் பேசுகின்றனஇந்தமுதலாளித்துவ நூற்றாண்டில் மனிதன் விலகி நின்று குழந்தைகள்பெண்கள்,ஆதரவற்றவர்கள் மீதான வன்முறையை ஆதரிக்கிறான்அல்லதுபிரயோகிக்கிறான்எப்போதையும் விட இந்தக் காலத்தில் தான்சித்தாந்தங்களில் நம்பிக்கை இழந்து வன்முறை முன் அம்மணமாய்நிற்கிறோம்சமீப தமிழக தேர்தல் முடிவுகள் சரியான உதாரணம் இதற்கு.மற்றொரு தளத்தில் மத்திய வர்க்கத்தினரின் உள்ளார்ந்த குரூரவன்மவெளிப்பாடாகவும் கீழ்வரும் வரிகளைப் புரியலாம்.
எச்சிப்பாத்திரம் கழுவிய சாக்கடை நீர் கசிந்து வீட்டு சமையலறைக்குள் வரஅதன் வழி ஆமைப்புழுக்களும் நுழைகின்றனகவிதைசொல்லி லோசன்தெளிக்கிறான்பயனில்லைகடைசியாய் சாக்கடை மூடுகிறான்.
அன்றிரவில்
... காதுவழி வந்தது ஓராயிரம் ஆமைப்புழுக்கள் ... ரத்தம் குடிக்க
அறம் பிளவுண்ட மனதில் சுயரத்தம் குடிக்கும் புழுக்கள் இவை.
இதன் நீட்சியாக நாம் படிக்க வேண்டியவை வடை சுட்ட பாட்டி கதையைஅங்கதமாக்கும் இவ்வரிகள்:
அந்த மரத்தடியில் ஏமாந்த பாட்டி
அன்றொரு நாள் இறந்து போனாள்
வடையை எடுத்த காகங்கள்
காகாவென கரைந்து கொண்டே
பாட்டியை சுற்றி ...
கலந்து கொண்டன
பாட்டியின் சாவு கருத்தியலின் கருமாதிதான்.
அடுத்து வருகின்ற கவிதை கருத்தியல் பிடிமானமற்ற மனிதர்களின்பாசாங்கைப் பகடி செய்கிறது.
" கால்தடுக்கி சாக்கடையில் விழுந்தும்
ஓவியனின் வர்ணத்தை களவாண்டு பூசியும்
தன்னை கறுப்பு எருமையாக்கியது பசு ...
இப்போது எருமைகளுக்கு மவுசு இருப்பதால்
திமிர்பிடித்த எருமையாக
காட்டிக் கொண்டதில் தப்பில்லை"

இப்பத்திகள் அவர் கட்டுரையில் இடம் பெற்றுள்ள பகுதிகளை ஸ்கான் செய்து இத்துடன் இணைத்திருக்கிறேன். படித்து ஒப்பிட்டு பார்த்து இந்த கொடுமைக்கு நியாயம் கூறுங்கள்.

  





Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...