Skip to main content

இலக்கியத்திருட்டும் அதிர்ச்சியும்


தமிழ் இலக்கியப் பரப்பு ஒரு ஒண்டுக்குடித்தன குடியிருப்பு போல. எங்கு எந்த மூலையில் யார் என்ன எழுதினாலும் இன்னொருவருக்கு தெரிந்து விடும். அதனாலே இங்கு எழுத்து திருடப்படுவதற்கான சாத்தியம் இல்லை என்று இதுநாள் வரை நம்பி இருந்தேன். ஆனால் என் நம்பிக்கை பொய்த்து விட்டது.
இம்மாத “உயிர் எழுத்தில்” நண்பர் எச். முஜீப் ரஹ்மானின் “ரிகர்சனிசம்: பின்நவீனத்தின் இன்னொரு முகம்” என்றொரு கட்டுரை வெளியாகி இருந்தது. இதில் என்னுடைய ஒரு பழைய கட்டுரையில் இருந்து எட்டு பத்திகளை திருடி பயன்படுத்தி இருக்கிறார். 

முதலில் அக்கட்டுரையின் சுவாரஸ்யமான தலைப்பை பார்த்து ஈர்க்கப்பட்டு படிக்க ஆரம்பித்தேன். முதல் இரண்டு பக்கங்கள் தாண்டினதும் கட்டுரையின் தொனியில் மொழியில் ஒரு மாற்றம் தென்பட்டது. நட.சிவகுமாரின் “வெட்டிமுறித்து களம்” தொகுப்பில் உள்ள கவிதைகள் பற்றி விமர்சனம் வந்தது. அக்கருத்துக்கள் பரிச்சயமானவையாய் தோன்றின. பிறகு என் கருத்துக்கள் போன்றே இருந்தன. ஏனென்றால் இத்தொகுப்பு பற்றி நான் ஒரு கட்டுரையை ஆறு வருடங்களுக்கு முன்பு எழுதியிருந்தேன். பரவாயில்லை இவர் நம்மைப் போன்றே இக்கவிதைகள் பற்றி யோசித்திருக்கிறார் என நினைத்து மேலும் ஆர்வமாகிப் படித்தேன். பிறகு தான் எனக்கு உறைத்தது. ஒவ்வொரு வரியும் என் வரி. அப்படியே காப்பி பேஸ்ட் பண்ணி இருக்கிறார்.
 ஒன்று ரெண்டல்ல; என்னுடைய எட்டு பத்திகள் அப்படியே அவர் கட்டுரை நடுவே வருகிறது. (அவற்றின் ஸ்கேன் பிரதிகளை கீழே இணைத்துள்ளேன்). சரி மேற்கோள் காட்டி இருக்கிறாரா என்றால் அதுவும் இல்லை. அத்தொகுப்பு பற்றி அவர் ஒரு வரி கூட எழுதவில்லை. முழுக்க என் வரிகளை அவர் பெயரில் பயன்படுத்தி இருக்கிறார். எனக்கு முதலில் கடும் அதிர்ச்சியும் பிறகு கோபமும் ஏற்பட்டது. என் கண்களையே என்னால் நம்ப இயலவில்லை.
இப்பிரச்சனை பற்றி பொறுமையாக யோசித்தேன். கண்டுகொள்ளாமல் விட்டு விடலாம் எனக் கூட நினைத்தேன். ஏனென்றால் இதை செய்திருப்பவர் என நண்பர். எழுத்துலகில் எனக்கு மூத்தவர். சிறந்த வாசகர். நிறைய படித்திருப்பவர். ஆனால் நான் இதை பதிவு செய்யாமல் விட்டால் இன்னொரு பிரச்சனை வரும்: நாளை முஜீப் ரஹ்மானின் கட்டுரையை படித்து விட்டு என் கட்டுரையை பார்க்க நேர்கிறவர் நான் தான் முஜீப்பின் கட்டுரையை திருடி விட்டதாய் நினைக்கக் கூடும். இதைத் தவிர்க்க நான் இதை இங்கு பதிவு செய்தே ஆக வேண்டும். இனிமேல் இப்படியான தவறுகள் நிகழாதிருக்கட்டும்.
என்னுடைய கட்டுரையின் தலைப்பு: “நவீன தலித் மனதின் பிளவுக்களம்: நட.சிவகுமார் கவிதைகள்”. இது 2008 செப்டம்பரில் என் இணையதளத்தில் வெளியானது. இணைப்பை கீழே தந்திருக்கிறேன்.
இவை என் கட்டுரையில் இருந்து முஜீப் ரஜ்மான் காப்பி பேஸ்ட் பண்ணியிருக்கிற பத்திகள்.
நட.சிவகுமாரின் சமீபக் கவிதைகள் (வெட்டி முறிப்புக்களம்) தனி நபராகவும், சமூக மனிதனாகவும் கவிதை சொல்லியின் பல்வேறுபட்ட பிளவுகளைப் பேசுபவை. மாந்திரிகச் சடங்குகள் பற்றின நுண்தகவல்கள்,மைய நீரோட்ட சாதியினரின் வரலாற்றுப் புனைவுகளைச் சாடும் எதிர்கலாச்சாரப் பதிவுகள் ஆகியன இவர் கவிதைகளுக்கு காற்றில் பறந்து விடாதபடியான கனபரிமாணத்தை, மண்ணில் காலூன்றும் வலுவை அளிக்கின்றன.
பழம் கலாச்சாரக் கூறுகள், விளிம்பு நிலை சமூகத்தினுடையதாகினும்,இன்றைய முதலாளித்துவ, அறிவியல் சமூக ஓட்டங்கள் முன் பொருளற்றுப் போகும் தருணங்கள் நிறைய உள்ளன. சிவகுமார் ஒருபுறம் தலித் தெய்வங்களாய் மேலாங்கோட்டு, கொல்லங்கோட்டு அம்மன்கள், இசக்கி,மாடன், சுடலையின் வீரியம் பேசுகிறார். மறுபுறம் தான் பயங்கரவாத உலகில் பிழைக்க குண்டு துளைக்காத வீடும், இரண்டாய் வெட்டிப் போட்டால் உடல் ஒன்று சேரவும், காசு கொட்டவும் வரங்கள் கேட்டால் தர இயலாது உருத்தெரியாது மாயமாகும் தனது உதவாத தலித் தெய்வத்தையும் பகடி செய்கிறார் (மாந்திரிக ஓலைச்சுவடி). காலமாற்றங்களில் வலுவிழக்கும் சமூக கலாச்சாரக் கூறுகளை எதிரொலித்த புதுமைப்பித்தனின் வயோதிக வேதாளத்திற்குப் பிறகு முக்கிய பகடிப் பாத்திரம் சிவகுமாரின் இந்தச் சுடலைதான். இன்றைய சூழலில் பின்-நவீன மனிதன் தனி அடையாளங்களை சிறுகச்சிறுக இழந்து நுகர்வோனாக மட்டும் பரிணமித்து வருகிறான். கலாச்சார நுண் அடையாளங்கள் மற்றும் வம்ச வரலாற்றை புனரமைப்பதோ,பத்திரப்படுத்துவதோ அரசியல், சமூக நிர்ப்பந்தம். ஆனால் அவை பிரக்ஞையற்ற இன்றைய உலகின் சுருங்கி வரும் வெளியில் பல சமயங்களில் பொருளற்றுப் போகின்றன. 
சிவகுமாரின் கவிதைகள் சமூக மனப் பிளவிலிருந்து உள்நகர்ந்து மேலும்நுட்பமாய் தனிமனித ஆளுமை உடைவை விசாரிக்கின்றனசுயம் மீறிப் போகும்தனிமனித அதிகாரப் பசியை ‘உடல் தின்னும் பிசாசு‘ கவிதையில்விவரிக்கிறார்.
இதுவரையிலான வாழ்வில் நாம் எத்தனையோ மனிதர்களின் வயிற்றுள்வாழ்ந்திருப்போம்அதே நேரம் பாதி செரித்த நிலையில் அகப்பட்ட மனிதர்கள்பலரை நம் சிறுஇரைப்பைக்குள் அடக்கியிருந்திருப்போம்இந்த நரகாசுரவிருந்து எழுத்து அரசியலில்அன்றாட அலுவலக உறவுகளில்குடும்பஅடுக்குகளின் நகர்வுகளில் சகஜமாக நிகழ்வதுஇதனை 'பயன்படுத்தல்'என்றல்லாமல் நுண்சொல்லாடல்கள் வழியான அதிகாரக் கடத்தல் என்பதேதகும்.
அந்த வயதில்
செண்பகத்தையும் பிச்சுமணி சாரையும் தின்று முடித்தேன்
கல்லூரிக் காலங்களில்
வித்யாவை
பிறகு பெயர் சொல்ல விரும்பாத அவளையும்
தம்பியையும் சாப்பாட்டுப் பாத்திரத்தில் வைத்து
கொஞ்சமாக வைத்து தின்று கொண்டிருந்த போது
கைதவறி விழ
எடுத்து தூசு தட்டி ஒவ்வொன்றாக சாப்பிடுகிறேன் ...
இனி யாரையெல்லாம் தின்னப் போகிறேனோ ...‘

அழகியல் மனதின் மறைமுக வன்முறையை கவனிக்கிறது ஒரு கவிதை.அறைச்சுவரில் ஒட்டிக் கிடந்த வண்ணத்துப் பூச்சியைக் கவிதையாக்குகிறான்.பிறகு அது
காதுகளிலும் வாயிலும் நுழைந்த போது
கடித்துத் தின்ன
பொத்துக்கிட்டு வந்தது கோபம்.‘
மேலும் சில கவிதைகள் எளிய உயிர்கள் மீதான வன்முறையை (கடந்தை,சிலந்திப் பூச்சிகள்ஆமைப்புழுக்கள்குறியீடாகக் கொண்டு தனிமனித அறம்நுட்பமானதொரு தளத்தில் புரையோடிப் போய் விட்டதைப் பேசுகின்றனஇந்தமுதலாளித்துவ நூற்றாண்டில் மனிதன் விலகி நின்று குழந்தைகள்பெண்கள்,ஆதரவற்றவர்கள் மீதான வன்முறையை ஆதரிக்கிறான்அல்லதுபிரயோகிக்கிறான்எப்போதையும் விட இந்தக் காலத்தில் தான்சித்தாந்தங்களில் நம்பிக்கை இழந்து வன்முறை முன் அம்மணமாய்நிற்கிறோம்சமீப தமிழக தேர்தல் முடிவுகள் சரியான உதாரணம் இதற்கு.மற்றொரு தளத்தில் மத்திய வர்க்கத்தினரின் உள்ளார்ந்த குரூரவன்மவெளிப்பாடாகவும் கீழ்வரும் வரிகளைப் புரியலாம்.
எச்சிப்பாத்திரம் கழுவிய சாக்கடை நீர் கசிந்து வீட்டு சமையலறைக்குள் வரஅதன் வழி ஆமைப்புழுக்களும் நுழைகின்றனகவிதைசொல்லி லோசன்தெளிக்கிறான்பயனில்லைகடைசியாய் சாக்கடை மூடுகிறான்.
அன்றிரவில்
... காதுவழி வந்தது ஓராயிரம் ஆமைப்புழுக்கள் ... ரத்தம் குடிக்க
அறம் பிளவுண்ட மனதில் சுயரத்தம் குடிக்கும் புழுக்கள் இவை.
இதன் நீட்சியாக நாம் படிக்க வேண்டியவை வடை சுட்ட பாட்டி கதையைஅங்கதமாக்கும் இவ்வரிகள்:
அந்த மரத்தடியில் ஏமாந்த பாட்டி
அன்றொரு நாள் இறந்து போனாள்
வடையை எடுத்த காகங்கள்
காகாவென கரைந்து கொண்டே
பாட்டியை சுற்றி ...
கலந்து கொண்டன
பாட்டியின் சாவு கருத்தியலின் கருமாதிதான்.
அடுத்து வருகின்ற கவிதை கருத்தியல் பிடிமானமற்ற மனிதர்களின்பாசாங்கைப் பகடி செய்கிறது.
" கால்தடுக்கி சாக்கடையில் விழுந்தும்
ஓவியனின் வர்ணத்தை களவாண்டு பூசியும்
தன்னை கறுப்பு எருமையாக்கியது பசு ...
இப்போது எருமைகளுக்கு மவுசு இருப்பதால்
திமிர்பிடித்த எருமையாக
காட்டிக் கொண்டதில் தப்பில்லை"

இப்பத்திகள் அவர் கட்டுரையில் இடம் பெற்றுள்ள பகுதிகளை ஸ்கான் செய்து இத்துடன் இணைத்திருக்கிறேன். படித்து ஒப்பிட்டு பார்த்து இந்த கொடுமைக்கு நியாயம் கூறுங்கள்.

  





Comments

ADMIN said…
இணையதளங்களில் வெளியாகும் கட்டுரைகளை திருடுவது மிக சுலபம் என்பதால் இதுபோன்ற குற்றங்கள் நிகழ்கிறது. திருடராய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. குறிப்பாக இணைய வெளியில் நடக்கும் திருட்டுகளை கட்டுப்படுத்துவது கடினமே..!
ADMIN said…
வணக்கம் ஐயா.

எனது வலைத்தளத்தில் தங்களின் கட்டுரைகளை மீள்பதிவிட விரும்புகிறேன்.

தங்களது கட்டுரைகளை மீள்பதிவிட (தங்களது பெயருடன்) அனுமதிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

-தங்கம்பழனி
தொழில்நுட்ப வலைப்பதிவர்
அன்புள்ள தங்கம் பழனி நீங்கள் தாராளமாக வெளியிடலாம்

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...