ஜெ.என்.யுவிலும் ஐ.ஐ.டியிலும் அரசின் குறுக்கீட்டால் நடந்த ஒடுக்குமுறையும் அது சார்ந்த மாணவர் போராட்டங்களும் பற்றி நிறைய விவாதித்து விட்டோம். இப்போது ஜாதவ்பூர் பல்கலையில் Buddha in Traffic Jam படத்தை எதிர்த்த இடதுசாரி மாணவர்கள் அதை திரையிட விடாமல் தடுத்ததுடன் இயக்குநரையும் தாக்கி உள்ளார்கள். இப்படம் இடதுசாரிகள் மீது விமர்ச்னப் பார்வை கொண்டது என்பது தான் வன்முறைக்கு காரணம்.
இதை சுட்டிக் காட்டிய ஒரு நண்பர் என்னிடம் கேட்டார் "அப்படியென்றால் எ.பி.வி.பிக்கும் இடதுசாரி அமைப்புகளுக்கும் என்ன வித்தியாசம்? இருவருமே எதிர்தரப்பை கவனிக்க தயாரில்லை. மாற்றுக் கருத்தை நசுக்குகிறார்களே"
நான் சொன்னேன் "எனக்குத் தெரிந்த இடதுசாரி தோழர்கள் மாற்றுக்கருத்தை விவாதத்தால் மட்டுமே எதிர்கொள்பவர்கள். இந்துத்துவர்கள் சிலரையும் தெரியும். இந்துத்துவர்களிடம் விவாதப் பயிற்சியோ தர்க்க அறிவோ இல்லை என்றாலும் அவர்களும் எதிர்தரப்பை நோக்கி அருவா தூக்குபவர்கள் அல்ல. பிரச்சனை வேறு. இருவருமே லட்சியவாதிகள். லட்சியவாதம் அதிகாரம் பெறும் போது அது சர்வாதிகாரத் தன்மை பெறும். லட்சியவாதிகள் நடைமுறை அரசியலில் ஈடுபடும் போதும் மாற்றுக் கருத்து மீது அலர்ஜி கொண்டவர்களாக மாறுவார்கள். மனிதர்களை விட கருத்தே முக்கியம் என கருதுவதன் சிக்கல் இது. லட்சியவாதம் கட்சி அரசியலிலோ மாணவர் அரசியலிலோ ஆபத்தானது ஆகும். சட்டென அது வன்முறை நோக்கி சென்று விடும். லட்சியவாத கட்சிகளை விட நடைமுறைவாத கட்சிகளான திமுகவும் அதிமுகவும் மேல் என நினைக்கிறேன். அவை வன்முறையை தூண்டியோ பொது எதிரியை உருவாக்கியோ ஓட்டு வாங்க முயலாது. இலவசத் திட்டங்களை அள்ளி வீசும். வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்கும். ஆனால் அவை சதா கலவரச் சூழலில் நம்மை வைக்காது. அவை கருத்தியலை விட மக்களின் அன்றாட பிரச்சனைகளே முக்கியம் என நினைக்கும். காங்கிரசை எடுத்துக் கொண்டால் கூட சீக்கிய வன்முறையை தவிர அக்கட்சியால் பெரும் வன்முறைகள், படுகொலைகள், கலைஞர்கள் மீதான ஒடுக்குமுறை நடந்ததாய் வரலாறு இல்லை. உண்மையான அபின் லட்சியவாதம் தான். அது இடது என்றாலும் வலது என்றாலும்..."
நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...
கருத்துகள்