முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எப்படியான ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும்?

ஒரு நண்பர் தனக்கு உரையாட தோழிகளே இல்லை. நெருங்கிப் பழக நினைக்கும் பெண்கள் ஏதாவது காரணம் சொல்லி விலகி விடுகிறார்கள். ஏன் அப்படி என கேட்டிருந்தார். அவருக்கான என் பதில் கீழ் வருவது:

அன்புள்ள நண்பருக்கு
ஒரு ஆண் தன் சமவயது பெண்ணுடன் தோழியாய் இருப்பது சிரமமான காரியமே. எந்த வகை நட்பிலும் ஒரு பாலியல் கோணம் இருந்தே தீரும். அதனால் தான் ஏற்கனவே காதலன் உள்ள பெண்கள் ஒரு புது ஆணின் நட்பு கோரலை ஏற்க தயங்குவார்கள். உங்களை விட வயது அதிகமான பெண்களிடம் இது சாத்தியமாகலாம். இன்றைய அலுவலகங்களில் ஆண் பெண் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு இருக்கும் போது நீங்கள் எதிர்பார்க்கும் காஷுவல் நட்புறவுகள் இரு சாராருக்கும் இடையே சாத்தியமாகும். அப்போது அந்த உறவில் ஒரு சின்ன ஜொள்ளு, வழிதல், கலாட்டா, கேலி எல்லாம் இருக்கும்.
ஒரு பெண்ணை காதலிப்பது இன்னும் சுலபம். ஆனால் பெண்கள் ஏன் சில ஆண்களிடம் நட்பாகக் கூட பழக தயங்குகிறார்கள்? ஏன் நான் கயவன் எனும் நினைக்கும் ஒரு ஆணிடம் மனதை பறி கொடுக்கிறார்கள்? அது உண்மையில் ஒரு புரியாத புதிர். ஆனால் பெண்களுக்கு எப்படியான ஆண்களை பிடிக்கும் என்பதை மெலிதாய் கோடிட்டு இங்கு காட்ட முடியும்.
பெண்களுக்கு தம்மை சிரிக்க வைக்கும் ஆண்களைப் பிடிக்கும்
பெண்மை நுண்ணுணர்வு கொண்ட ஆண்கள் இருக்கிறார்கள். அவர்கள் சிந்தனை பாணியில் பெண்மை இருக்கும். மென்மையானவர்களாய், உணர்ச்சி பிழம்புகளாய் இருப்பார்கள். நெகிழ்வார்கள், கோபிப்பார்கள், கண்ணீர் சிந்துவார்கள், கெஞ்சுவார்கள், பெண்களிடம் பிரியமாய் இருக்கும் போதே அலட்சியமாய் புறக்கணிக்கவும் செய்வார்கள். இப்படியான ஆண்களுக்கு நிறைய தோழிகள் அல்லது ”பொழுதுபோக்கு” காதலிகள் இருப்பார்கள்.
ஆண்கள் தமக்குள் புறவயமான, தர்க்கரீதியான விசயங்களை பேசி பேசி ஒருவகையான முரட்டு மொழியை பழகி இருப்பார்கள். இப்படி பேசுகிறவர்களை கண்டாலே பெண்கள் தெறித்து ஓடுவார்கள்.
ஒரு ஆண் பெண்மை உளவியல் கொண்டிருந்தாலும் அவன் வெளியே கம்பீரமாய், உள்ளுக்குள் வலிமையானவனாய், அதிகாரம் கொண்டவனாய் இருக்க வேண்டும் என பெண்கள் எதிர்பார்ப்பார்கள். அதாவது ஆணிடம் அதிகாரமும் வலிமையும் இருக்க வேண்டும், ஆனால் அவற்றை பெண்கள் இடத்து திணிக்காமல் நுட்பமாய் வெளிப்படுத்துகிறவர்களாய் இருக்க வேண்டும் என விரும்புவார்கள்.
இறுதியாய், பெண்கள் ஒன்று தாம் ஆதிக்கம் செலுத்தப்படுவதையோ அல்லது பிறரை ஆதிக்கம் செலுத்துவதையோ உள்ளூர விரும்புவார்கள். இதை வெளிப்படையாய் ஒத்துக் கொள்ள மாட்டார்கள் என்றாலும் கூட. அதனால் ஒரு வலுவான ஆண் தம் மீது அதிகாரம் செலுத்துவதை அவர்கள் ரசிப்பார்கள். அதே போல ஒரு வலுவான ஆணை தன் பெருவிரல் கீழ் கட்டுப்பாட்டில் தாம் வைத்திருப்பதையும் விரும்புவார்கள்.
இறுதியாய் சுருக்கமாய்: ஒரு பெண்ணின் மதிப்பை பெற ஒரு ஆண் அவளை விட அதிகாரமும் வலிமையும் கொண்டவனாய் தன்னை காட்டிக் கொள்ள வேண்டும். ஆனால் அலப்பறை பண்ணாமல் கண்ணியமாய் நடந்து கொள்ள வேண்டும். அவளிடம் தன் அத்தனை அதிகாரத்தையும் துறந்து மண்டியிடுவதாய் பாவிக்கும் ஆண்களையும் பெண்களுக்கு பிடிக்கும். அதே போல் மனம் தழுதழுக்க அவர்களிடம் பேச வேண்டும்.
கிரிக்கெட்டில் ரன் அடிக்க ஆட்டநிலை (form) முக்கியம் என்பார்கள். பெண்களிடம் பிரபலமாய் இருக்கும் ஆண்கள் தினமும் ”நெட் பிராக்டீஸ்” செய்வார்கள். அவர்கள் தொடர்ந்து பெண்களிடம் பேசிக் கொண்டே இருப்பார்கள். இதன் மூலம் formஇல் இருப்பார்கள். அனுபவம் மூலம் அதில் ஒரு நளினத்தை, flairஐ அடைந்திருப்பார்கள். பெண்களிடம் எளிதில் அணுக்கம் பாராட்டுகிறவர்களுக்கு ஆண் நண்பர்களை விட தோழிகளே அதிகம் இருப்பார்கள். இது அவர்கள் பெண்கள் விசயத்தில் out of touch ஆகாமல் இருக்க உதவுகிறது.
இதெல்லாம் நடைமுறை ஆண் பெண் உறவின் விதிமுறைகள். ஆனால் நடைமுறையை கடந்த காதல்களும் உண்டு. நான் மேற்சொன்ன எந்த திறனும் இல்லாமல் தான் வெற்றிகரமாய் காதலித்து மணம் புரிந்தேன்.
ஆண்களைப் போன்றே பெண்களிலும் ஆயிரம் வகைகள் உண்டு. ஒவ்வொருவரின் ரசனையும் வேறு வேறு. ஒரு பெண்ணின் வாழ்க்கை மற்றும் கலாச்சார பின்னணி அவர்கள் ஆணை எதிர்கொள்ளும் முறையை தீர்மானிக்கக் கூடும். உதாரணமாய், தமிழ் நாட்டு பெண்களை விட கேரள பெண்களிடம் எளிதில் பழகவும் உறவாடவும் முடியும். அவர்கள் உறவு விசயத்தில் முற்போக்காய், ஒருவித துணிச்சல், துடுக்குத்தனத்துடன் இருப்பார்கள். இஸ்லாமிய பெண்களில் சிலர் பர்தா அணிந்து ஒடுங்கி வாழ்ந்தாலும் கூட அவர்களிடம் பிற மதத்து பெண்களை விட துணிச்சல் அதிகம் என்பதை கவனித்திருக்கிறேன். ஆக எல்லோரிடமும் செல்லுபடியாகும் ஒரு பார்முலா இல்லை. உங்களுக்கான பார்முலாவை உங்கள் அனுபவம் மூலம் நீங்களே கண்டுபிடிக்கலாம்.

ஒரு disclaimer: நான் மேலே குறிப்பிட்ட பொது குணநலன்கள், நியதிகள் எளிய புரிதலுக்கானவை மட்டுமே.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...